நமது வினையே நமது விதியாகி நமக்கான விளைவைத் தீர்மானிக்கிறது. நாம் செய்யும் நன்மைகள், புண்ணியங்கள் அதற்கான சிறந்த பலன்களை நமக்குத் தருகின்றன. அதேபோல, தீமைகளும் பாவங்களும் தீய பலன்களை நமக்குக் கொடுக்கின்றன. நன்மை செய்ய இயலாவிட்டாலும் தீமை செய்யாமல் தவிர்க்கலாம். இதன்மூலம் பிறருக்கு மட்டுமல்ல, நமக்கு வரக்கூடிய தீமையையும் நாம் தடுக்கிறோம்.
Month: October 2022
புத்தியுள்ள மனிதரெல்லாம்…
‘அன்னை’ திரைப்படத்தில், நகைச்சுவை நடிகர் சந்திரபாபு வேடிக்கையாகப் பாடுவதாக அமைந்த காட்சிப் பாடல் இது... ஆனால், பாடலில் உள்ள வரிகள் எதுவுமே வேடிக்கை அல்ல. உயர்ந்த தத்துவமும், வாழ்வனுபவமும், சோகமும் இழையோடும், கவியரசரின் இனிய பாடல் இது...
குழந்தைகள்
நமக்கு நல்ல காலம் எப்போது வருமோ தெய்வத்துக்குத்தான் தெரியும். அதுவரை அதிகாரிகள் எப்படியிருந்த போதிலும், அதைப் பொருட்டாக்காமல் நாட்டிலுள்ள பணக்காரர் மற்றெல்லாவித தர்மங்களைக் காட்டிலும், ஜனங்களுக்கு அறிவு விருத்தியும், தைரியமும், தேச பக்தியும் உண்டாக்கத் தகுந்த சுதேசியக் கல்வி ஏற்படுத்திக் கொடுப்பதைப் பெரிய தர்மமாகக் கருதி, அதிலே பணம் செலவிட முற்படும்படி மேற்படி பணக்காரருக்கு நல்ல புத்தி ஏற்படுத்திக் கொடுக்குமாறு தெய்வத்தை வேண்டுகிறோம்....
எனது முற்றத்தில்- 27
தெய்வ நம்பிக்கை உள்ள ஹிந்து ஒன்றும் பொதுவாக பணத்துக்குப் பறப்பவன் அல்ல. அவனுடைய கலாச்சாரம் அவனுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறது, ‘செல்வத்துப் பயனே ஈதல்’ என்று. செல்வத்திற்குப் பெயரே ஐஸ்வர்யம் (ஈஸ்வர சம்பந்தம் உள்ளது). பேரறிஞர் தீனதயாள் உபாத்யாய குறிப்பிடுவாரே, “சத ஹஸ்தம் ஸமாஹர, சஹஸ்ர ஹஸ்தம் வீக்கிற” என்ற உபநிடத வாக்கியத்தை, அதன் பொருள்தான் என்ன? நூறு கரங்களால் விளைவி, ஆயிரம் கரங்களுக்கு வழங்கு என்பதுதானே?
வேதபுரத்தின் இரகஸ்யம்
மகாகவி பாரதி எழுதிய ‘கிரைம் கதை’ இது. இக் கதை ‘கதா ரத்னாகரம்’ மாதப் பத்திரிகையில் 1920 ஆகஸ்ட், செப்டம்பர் இதழ்களில் பிரசுரமானது. பின்னர், நூலாக்கம் பெற்ற ‘கால வரிசைப் படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்’ தொகுதியில் இடம்பெற்றது. பாரதி எழுதிய கதைகளில் இது ஒரு வித்தியாசமான கதை. சூழ்நிலை ஒரு மனிதனை எப்படியெல்லாம் மாற்றி விடுகின்றது என்பதே கதையின் முக்கியக் கருத்தாக அமைந்துள்ளது. குற்றத்தைப் புலனாய்வு செய்ய வந்த காவல் அதிகாரி கடைசியில் அந்த விவகாரத்தையே மறந்துவிட்டார் என்று முடிக்கும் பாரதியின் குறுப்பு ரசிக்கத் தக்கது....
கொன்றைவேந்தன் (66-70)
‘போனகம்’ என்பதற்கு உணவு, உணவு வகை எனப் பொருள். உழவு என்பது வேளாண் தொழிலை முக்கியமாகக் குறித்தாலும், வேறு எல்லா வகை கடின உழைப்புப் பணிகளையும் குறிக்கும். உழை என்பதற்கு வருந்தி முயற்சி மேற்கொள்ளல், கடினமாகப் பணியாற்றல் என்று பொருள். மற்ற எல்லாத் தொழில்களையும் விட விவசாயத்துக்கே அதிக உடல் உழைப்பு தேவைப்படுகிறது. ஆகையால் ‘உழை’ என்பதை வேர்ச் சொல்லாகக் கொண்ட உழவு என்ற சிறப்புச் சொல், விவசாயத்துக்கு அமையப் பெற்றது.
சத்திய சோதனை – 5 (1-5)
-மகாத்மா காந்தி ஐந்தாம் பாகம் 1. முதல் அனுபவம் நான் தாய்நாட்டிற்கு வந்து சேருவதற்கு முன்னாலேயே போனிக்ஸிலிருந்து புறப்பட்டவர்கள் இந்தியா சேர்ந்து விட்டனர். நாங்கள் முதலில் போட்டிருந்த திட்டத்தின்படி நான் முன்னால் வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், யுத்தம் காரணமாக இங்கிலாந்தில் எனக்கு ஏற்பட்ட வேலைகளினால் எங்கள் திட்டங்களெல்லாம் மாறிவிட்டன. இந்தியாவுக்கு எப்பொழுது போவேன் என்ற நிச்சயம் இல்லாமல் நான் இங்கிலாந்தில் இருக்க வேண்டி வந்தபோது, போனிக்ஸிலிருந்து வந்தவர்களுக்கு இந்தியாவில் இடம் தேட வேண்டிய பிரச்னை எனக்கு … Continue reading சத்திய சோதனை – 5 (1-5)
தன்னை உணர்ந்தது பாரதம்; உணர வைத்தார் விவேகானந்தர்!
அமரர் திரு. இராம கோபாலன் (19.09.1927 – 30.09.2020), ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் மூத்த பிரசாரகர்களுள் ஒருவர். தமிழகத்தில் ஹிந்து சமுதாயத்திற்காக குரல் கொடுக்கவும், மக்களை ஒன்றிணைக்கவும், ஹிந்து முன்னணி அமைப்பை 1981- இல் நிறுவி, தனது 94-வது வயதிலும் இளைஞரைப் போல தொடர்ந்து இயங்கியவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அவரது கட்டுரை இங்கே...
கொன்றைவேந்தன் (61-65)
பெற்றோர் என்றதும் குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்- தந்தையர் நினைவுக்கு வருவர். பிள்ளைப் பேறு பெற்றவர் என்பதால் அவர்களுக்கு பெற்றோர் எனப் பெயர். ஆயினும் பேறுகளில் பெரிய பேறு, மெய்யான பேறு, மெய்ஞானத்தைப் பெறுவதுதான். ஆகையால் அத்தகைய உண்மையான உயர் ஞானத்தைப் பெற்றவர்களையே பெற்றோர் எனக் குறிப்பிடுகிறார் ஔவையார்.
ஸ்வதந்திர கர்ஜனை- 2(3)
இது சம்பந்தமாக ஹியூம் பல இந்தியத் தலைவர்களுடனும், அப்போதைய வைஸ்ராய் டப்ரின் பிரபுவிடமும் விவாதித்தார். இதில் ஆங்கிலேயர்களும் ஆர்வம் காட்ட முக்கிய காரணம் இருந்தது. படித்த இந்தியர்களையும் இந்திய அரசு நிர்வாகத்தில் ஈடுபடுத்தினால், அவர்கள் பிரச்னைகளைக் கண்டறிந்து சரிசெய்யவும், மக்களை சமாதானப் படுத்தவும் முடியும் என்று - சிப்பாய்க் கலகம் கொடுத்த பாடம் காரணமாக - ஆங்கிலேயர்கள் நினைத்தனர். அப்படி உருவாகும் அமைப்பு சமூக, அரசியல் நோக்கமுடையதாக இருத்தல் அவசியம் என்பதையும் அவர்கள் உணர்ந்ததால் வைஸ்ராயும் இதில் ஆர்வம் காட்டினார்.
வேப்ப மரம்
இக் கதையை முதன்முதலாகக் கண்டறிந்து தமது ‘பாரதி தமிழ்’ நூலில் திரு. பெ.தூரன் அவர்கள் பதிப்பித்தார். வேப்ப மரம் பேசுமா? பேசினால் என்ன பேசும்? அற்புதமான கற்பனை... அகஸ்த்ய மஹரிஷியும், தாம்ரபர்ணி யம்மனும் ஜலக்கிரீடை செய்வதாக எழுதும் கற்பனைவளத்தை மீறும் வகையில், மகாகவி பாரதிக்கே உரித்தான வேதாந்தச் சாயல் இக்கதையில் உண்டு.
கொன்றைவேந்தன் (56-60)
எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்வோம். விதை ஒன்று போட சுளை வேறு விளையாது. இவையெல்லாம் முன்னோர்தம் அனுபவ உரைகள். தீமை செய்தவன் நன்கு வாழ்வதைப் போல காட்சி தருவான். ஆனால் திகைத்திட வீழ்ச்சி அடைவான். நல்லவன் துயருறுவதைப் போலத் தோன்றும். ஆனால் அவனது தர்மம் தலைகாக்கும், தலைமுறைகளையும் காக்கும். ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்றார் சங்கப் புலவர் கணியன் பூங்குன்றனார்.
மகாவித்துவான் சரித்திரம் -2 (4அ)
செட்டியார் எழுந்து என்னைப் பார்த்து, "நீர் நன்றாகப் படிக்க வேண்டியவற்றைப் படித்துக் கொள்ளும். கூட இருப்பதையே பெரும்பயனாக நினைந்து சிலரைப்போல் வீணே காலங்கழித்துவிடக் கூடாது; சிலகாலம் இருந்துவிட்டுத் தெரிந்துவிட்டதாக பாவித்துக்கொண்டு சொல்லாமல் ஓடிப்போய்விடவும் கூடாது. இப்படிப் பாடம் சொல்லுபவர்கள் இக்காலத்தில் யாரும் இல்லை. உம்முடைய நன்மைக்காகத்தான் சொல்லுகிறேன்" என்று சொல்லி இவரிடம் விடைபெற்றுத் தம் வீடு சென்றார். செட்டியாருடைய வார்த்தைகள் எனக்கு அமிர்த வர்ஷம் போலேயிருந்தமையால் அவற்றைக் கருத்திற் பதித்து அங்ஙனமே நடந்து வருவேனாயினேன்.
எதிர் ஜாமீன் அல்லது மாப்பிள்ளை விலை
வரதட்சிணைக் கொடுமைக்கு எதிரான மகாகவி பாரதியின் முழக்கம் இது. நூற்றாண்டுகளுக்கு (1915) முன்னர் பாரதி எழுதிய அவலம் இன்றும் நமது நாட்டில் தீரவில்லை. இந்த ‘ஊழலுக்கு’த் தீர்வாக மகாகவி முன்வைப்பது பெண் விடுதலையே. இரு பெண்களைப் பெற்றவரல்லவா? சரியாகத் தானிருக்கும்.
கொன்றைவேந்தன் (51-55)
நோன்புக்கு மனத்தூய்மையும் மனபலமும் மிகவும் அவசியம். நோன்பின் போது ஏற்படும் இடையூறுகளையும் கஷ்டங்களையும் வென்றெடுத்து, மேற்கொண்ட நோன்பை சிறப்புடன் நிறைவு செய்ய வேண்டும். அதற்கு அந்த நோன்போடு நாம் நேர்ப்பட வேண்டும். முறையாக அதற்கு உடன்பட வேண்டும்.