-மகாகவி பாரதி முன்னுரை:மகாகவி பாரதியின் சுயசரிதை பிரிவில் ‘பாரதி-அறுபத்தாறு’ கவிதை இடம்பெற்றிருப்பது இதிலுள்ள சுய விளக்கங்கள் காரணமாகவே. மரணத்தை வெல்லும் வழியில் “பார் மீது நான் சாகாதிருப்பேன், காண்பீர்!” என்று முழங்குகிறார் பாரதி (பாடல்- 6). முன்னதாக, சோக அடவியில் புகவொட்டாமல் துய்ய செழுந்தேன் போல கவிதை எழுதும் அறிவை தனக்கு பராசக்தி தந்ததாக்க் (பாடல்- 3) கூறுவார் பாரதி. எனவேதான் இக்கவிதைகள் தன்வரலாற்றுப் பிரிவில் சேர்க்கப்படுகின்றன.மானுடரை அழிக்கும் அசுரர்கள், பொறுமையின் பெருமை, ”எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் … Continue reading பாரதி – அறுபத்தாறு (1-6)
Month: July 2022
சத்திய சோதனை- 3(6-10)
சலவைத் தொழிலாளிக்கு அடிமையாக இருப்பதிலிருந்து என்னை நான் விடுவித்துக் கொண்டதைப் போலவே க்ஷவரத் தொழிலாளியை எதிர்பார்ப்பதையும் போக்கிக்கொண்டு விட்டேன். இங்கிலாந்துக்குப் போகிறவர்கள் எல்லோரும் க்ஷவரம் செய்து கொள்ளவாவது கற்றுக்கொள்ளுகின்றனர். ஆனால், நான் அறிந்தவரையில், தங்கள் தலைமுடியையும் தாங்களே கத்தரித்துக் கொள்ளுவது என்பதை யாரும் கற்றுக் கொண்டதில்லை. நான் இதையும் கற்றுக்கொண்டு விட வேண்டியதாயிற்று. நான் ஒரு சமயம் பிரிட்டோரியாவில் ஆங்கிலேயர் ஒருவரிடம் முடி வெட்டிக்கொள்ளப் போனேன். அவர், அதிக வெறுப்புடன் என் தலைமுடியை வெட்ட மறுத்துவிட்டார். எனக்கு இது அவமரியாதையாக இருந்தது. உடனே முடிவெட்டும் கத்திரி ஒன்றை வாங்கினேன். கண்ணாடி முன்பு நின்றுகொண்டு, என் தலைமுடியை கத்தரித்துக் கொண்டேன் முன் முடியை வெட்டுக்கொள்ளுவதில் ஓரளவுக்கு வெற்றி பெற்றேன். ஆனால், பின்பக்கத்து முடியை வெட்டிக் கெடுத்து விட்டேன். கோர்ட்டில் இருந்த நண்பர்கள் அதைப் பார்த்துவிட்டுக் குலுங்கக் குலுங்கச் சிரித்தார்கள். “உமது தலை முடிக்கு என்ன ஆபத்து வந்தது, காந்தி? எலிகள் ஏதாவது வேலை செய்துவிட்டனவா?” என்று கேட்டனர்.
சிவகளிப்பேரலை- 77
சங்க காலத் தமிழ் இலக்கியங்களிலே தலைவனைப் பிரிந்து வாடும் தலைவியின் ஏக்கம் மிகப் பாங்குடன் விவரிக்கப்பட்டிருக்கும். இத்தகு சங்கத் தமிழ் இலக்கிய நயத்துடன், சம்ஸ்கிருத செய்யுளை (ஸ்லோகத்தை) யாத்துள்ளார் ஸ்ரீ ஆதிசங்கரர். ...
மகாவித்துவான் சரித்திரம்- 1(5)
இவர் புத்தகங்களைத் தேடுகையில் திருவானைக்காக்கோயில் தர்மகர்த்தாவின் வீட்டில், திருவாவடுதுறை யாதீனத்து வித்துவானாகிய ஸ்ரீ கச்சியப்ப முனிவராற் செய்யப்பெற்ற நூல்களுள் ஒன்றாகிய திருவானைக்காப் புராணம் கிடைத்தது. அதை முறையே படித்து வருகையில் கடவுள் வாழ்த்தின் அழகும், நாட்டுச்சிறப்பு முதலிய காப்பிய உறுப்புக்களின் அமைதியும், அவற்றிற் பழைய நூற் பிரயோகங்களும், இலக்கண அமைதிகளும், தம்மால் அது வரையில் அறியப்படாத சைவ சாஸ்திரக் கருத்துக்களும், சைவ பரிபாஷைகளும், புதிய புதிய கற்பனைகளும் நிறைந்து சுவை ததும்பிக் கொண்டிருத்தலையறிந்து இன்புற்றுப் பன்முறை படித்து ஆராய்ச்சி செய்வாராயினார். அதைப் படிக்கப் படிக்க அதுவரையிற் படித்த பல நூல்களினும் வேறு தலபுராணங்களினும் அது மிக்க சுவையுடையதென்று அறிந்துகொண்டார். பின்னர், கச்சியப்ப முனிவர் செய்த வேறு நூல்கள் எவையென்று ஆராய்ந்து தேடிய பொழுது, விநாயக புராணத்தில் சில பகுதிகளும், பூவாளூர்ப் புராணமும், காஞ்சிப் புராணமும் கிடைத்தன. அந்த நூல்களையும் வாசித்து இன்புறுவாராயினர். ...
சிட்டுக்குருவி
சிட்டுக்குருவிக்கென்றே தனிக்கவிதைத் தொகுப்பு எழுதிய மகாகவி பாரதி, அதனைப் போற்றுவதன் காரணம் அதன் விடுதலை உணர்வே. அகண்ட வானமே வீடாகக் கொண்ட, எல்லையற்ற - கட்டற்ற- கவலையற்ற வாழ்க்கை சிட்டுக்குருவியுடையது. அதனைப் போல வாழத் துடித்தவர் அடிமை வாழ்வகற்றத் துடித்த நமது சுதந்திரக் கவிஞர் பாரதி. இங்கே உள்ளது சிட்டுக்குருவி குறித்த அவரது உரைநடைப் பதிவு....
காற்றிடைச் சாளரம்- 15
திருமுடி சூடிய மலரொன்று திருவடி பட்டுத் தெறித்தது. -கவித்துவம் தரிசனமாகும் இடம்....
சிவகளிப் பேரலை- 76
உரிய காலத்தில் மழை பெய்தால்தான் பயிர்கள் செழித்து வளர்ந்து அதற்குரிய பயன்களைத் தரும். அதுபோல்தான் இறைவன் மீதான பக்தியும் நமது வாழ்க்கைப் பயிருக்குத் தேவையான மழையாகப் பொழிகிறது. மகேசனாகிய இறைவன் மீது அன்பு கொண்டு, அவரது திருவடிகளாகிய வானத்திலேயே உறைந்து, நிறைவு தருகின்ற வகையிலே சூழ்ந்து நின்று கொண்டிருக்கும் பக்தியாகிய மேகம், பரமானந்தத்தை வாரி வழங்குகின்ற இன்ப மழையைப் பொழிகின்றது.
சிவகளிப் பேரலை- 75
நல்ல வாசனை நிரம்பிய பக்தனின் மனம், இறைவன் சவாரி செய்கின்ற குதிரையாக, வாகனமாக ஆகிவிடுகிறது. ஆகையால், அப்படிப்பட்ட பக்தனாகிய எனது மனத்தினிலே பயணம் மேற்கொள்ள வாருங்கள் என்று நம்மைப் போன்றவர்களுக்கா எம்பிரானிடம் அழைப்பு விடுகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.
மகாவித்துவான் சரித்திரம்-1(4)
ஒரு தலத்திற்கு நண்பர்களுடன் சென்றால் அத்தலத்திலுள்ளார் இவரது கவித்துவத்தை அறிந்து அத்தல விஷயமாகத் தனிப்பாடல்களையோ பிரபந்தங்களையோ இயற்றும் வண்ணம் கேட்டுக்கொள்வார்கள். செய்யுள் இயற்றுவதற்குரிய சமயம் வாய்க்கும்போதெல்லாம் அந்த ஆற்றலை வளர்ச்சியுறச் செய்து கொள்ள வேண்டுமென்னும் அவாவுடையவராக இருந்தமையால், இவர் அவர்களுடைய விருப்பத்தின்படியே பாடல்கள் முதலியன இயற்றுவதுண்டென்பர். ....
சிவகளிப் பேரலை- 74
துர்நாற்றம் நமக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது. நல்வாசனை மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இதுபோல்தான் நமது செய்கைகளாலும் (கர்மங்களாலும்) தீய வாசனை, நல் வாசனை ஏற்படுகிறது. தீய வாசனைகளைக் களைந்து, நல் வாசனையைப் பெற சிவபெருமானின் திருவடிகளே நமக்கு வழிகாட்டுகின்றன. ...
மகாவித்துவான் சரித்திரம்- 1(3)
அக்காலத்தில் திரிசிரபுரத்திலும் அதனைச் சூழ்ந்துள்ள ஊர்களிலும் தாங்களறிந்தவற்றை மாணாக்கர்களுக்குப் பாடஞ்சொல்லும் தமிழ்ப்புலவர்கள் சிலர் இருந்து வந்தனர். ஒவ்வொருவரும் சில நூல்களையே பாடஞ்சொல்லுவார். பல நூல்களை ஒருங்கே ஒருவரிடத்திற் பார்ப்பதும் பாடங்கேட்பதும் அருமையாக இருந்தன. இவர் அவ்வூரிலும் பக்கத்தூர்களிலும் இருந்த தமிழ்க்கல்விமான்களிடத்திற் சென்று சென்று அவர்களுக்கு இயைய நடந்து அவர்களுக்குத் தெரிந்த நூல்களைப் பாடங்கேட்டும் அவர்களிடம் உள்ள நூல்களைப் பெற்றுவந்து பிரதி செய்துகொண்டு திருப்பிக் கொடுத்தும் வந்தனர். இவருடன் பழகுவதிலும் இவருடைய ஆற்றலை அறிந்து கொள்வதிலும் வேண்டிய நூல்களை இவருக்குக் கொடுத்து உதவுவதிலும் இவர் விரும்பிய நூல்களைப் பாடஞ் சொல்வதிலும் மகிழ்ச்சியும், இவரைப்போன்ற அறிவாளிகளைப் பார்த்தல் அருமையினும் அருமையென்னும் எண்ணமும் அவர்களுக்கு உண்டாயின. ....
சிவகளிப் பேரலை – 73
பரமசிவனின் திருவடிகளை, மனதே நீ பக்தியினால் பற்றிக் கொள்வாயாக. அப்படிப் பற்றிக்கொண்டால், வேறு என்னதான் வேண்டுவதற்கு இருக்கிறது? என்று வினவுகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.
மகாவித்துவான் சரித்திரம் – 1 (2)
அக்காலத்தில் நூல்கள் பெரும்பாலும் அச்சிற் பதிப்பிக்கப்படாமையாற் படிப்பவர்கள் அவற்றைப் பிரதிசெய்து படித்தல் இன்றியமையாத வழக்கமாக இருந்தது; ஆதலால் இவர் தந்தையார் நன்றாக ஏட்டில் எழுதவும் இவரைப் பழக்குவித்தார். அதனால் இவர், தாம் படிக்கப் புகுந்த நூல்களை, எழுதி எழுதித் தனியே வைத்துக்கொள்வார். அன்றியும் தம் தந்தையார் கட்டளையின்படி தாம் படிக்கும் நூல்களிலுள்ள இனிய செய்யுட்களைச் சமயோசிதமாகப் பிறர்க்குச் சொல்லிக் காட்டுவதற்குத் தொகுத்துத் தனியே எழுதி வைத்துக்கொண்டு மனனம் செய்வதும், தமக்கு மனனமான பாடல்களின் அடிவரையறையைத் தனியே குறித்து வைத்துக்கொள்வதும் உண்டு. இங்ஙனம் செய்வது அக்கால வழக்கம். தம் தந்தையார் கற்பித்தவற்றையெல்லாம் பேரவாவுடன் இவர் கற்று விரைவில் அந்நூல்களிற் சிறந்த பயிற்சியை அடைந்தார்.
சிவகளிப் பேரலை – 72
பொற்குவியல்கள் கொட்டிக் கிடக்கும் புதையலைக் காண விரும்புவோர் மந்திர மை போட்டு அதனை அறிந்துகொண்டு, பலிச் சடங்குகளை நடத்தி அதனை அடைய முயல்வர். பக்தர்களுக்கு சிவபெருமானின் திருவடிகளே நற்புதையலாகும். அந்த நற்புதையலின் இருப்பிடத்தை சிவபெருமான் மீதான தியானம் என்கின்ற மையின் மூலமாக அறிந்துகொள்ள முடியும்
பாரதியின் தனிப்பாடல்- 24
29-01-1906 அன்று ‘சுதேசமித்திரன்’ இதழில் - "வேல்ஸ் இளவரசருக்குப் பரத கண்டத்தாய் நல்வரவு கூறுதல்" என்கிற பாரதியின் கீழ்க்கண்ட கவிதை பிரசுரமானது. இக்கவிதையில், அந்நியர் ஆட்சியில் இந்தியர் அடைந்த துயரங்களிலிருந்து நமது மக்களை ஆங்கிலேய ஆட்சி காத்த்து என்று குறிப்பிடும் பாரதி, அவர்களால் ஏற்பட்டுள்ள தொல்லைகளையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. எனினும் வேல்ஸ் இளவரசரை ‘அதிதி தேவோ பவ’ என்ற கருத்தாக்கத்துடன் வரவேற்று மகிழ்கிறார் மகாகவி பாரதி....