கதவு

அன்பே வழி என்ற கருத்துடைய ‘கதவு’ என்ற இக்கதை 1917-ஆம்‌ ஆண்டு டிஸம்பர்‌ 12-ஆம் தேதி வெளியான ‘சுதேசமித்திரன்‌’ வருஷ அனுபந்தத்தில்‌, காளிதாசன்‌ எழுதுவது என்ற குறிப்புடன் பிரசுரமாயிற்று. பின்னாளில், ‘கல்‌கி’ தீபாவளி மலரில்‌ 1957-ஆம்‌ ஆண்டு வெளியாயிற்று.

தமிழ் இலக்கியத்தில் செங்கோல் – 3

நடையில் நின்றுயர் நாயகனான ராமன் புகழ் பாடும் கம்ப ராமாயணத்தில் செங்கோன்மை குறித்து இல்லாமல் இருக்குமா? ராமனின் நாடான கோசலமே ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணச் சான்றாக இருக்கிறது. ஒரு செம்மையான ஆட்சி நிலவும் நாடு எவ்வாறு இருக்கும் என்று இலக்கணம் வரைந்த கம்பர், செங்கோலின் சிறப்பையும் ஆங்காங்கே பாடல்களில் கூறிச் செல்கிறார். செங்கோல் ஓங்கிய ஆட்சியே ராமராஜ்ஜியம் என்று அழைக்கப்படுவதும், அதையே நமது தேசிய லட்சியமாக மகாத்மா காந்தி முன்வைத்ததும் இயல்பானவை அல்லவா?

ஆவணி அவிட்டம்‌

வாழ்க்கையில்‌ அன்றாடம்‌ நடக்கும்‌ விஷயங்களைக் கதை போலே எழுதுவதில்‌ மகாகவி பாரதி சமர்த்தர்‌. நம்‌ தமிழ்நாட்டுச்‌ சமூகத்தின்‌ உயர்வும்‌ தாழ்வும்‌ யாவும்‌ இந்தக் கதைகளில்‌ பளிச்செனத்‌ தெரிகின்றன. ‘ஆவணி அவிட்டம்‌’ என்ற இக்கதை முதலில்‌ சுதேசமித்திரனில்‌ வெளியாகி, பிறகு மித்திரன்‌ காரியாலயம்‌ 1920-இல்‌ வெளியிட்ட ‘கதாமாலிகா’ நூலில்‌ பிரசுரமாயிற்று.

தமிழ் இலக்கியத்தில் செங்கோல் – 2

‘செங்கோன்மை’ அதிகாரத்தில் மன்னரின் இலக்கணத்தை நேர்மறையாக கூறியவர், ‘கொடுங்கோன்மை’ அதிகாரத்தில் எதிர்மறையாகக் கூறுகிறார். இவ்வாறு நேர்மறை- எதிர்மறையாகக் கூறி ஒரு கருத்தை மிகவும் ஆழமாக விளக்குவது திருவள்ளுவருக்கு புதியதல்ல. இதோ, ஒரு கொடுங்கோலன் எவ்வாறு இருப்பான், அதற்கான காரணங்கள் என்ன என்று பத்து குறட்பாக்களில் கூறுகிறார் திருவள்ளுவர்...

வேணு முதலி விசித்திரம்‌

வேணு முதலி என்ற ஒருவரைப்‌ பற்றி முந்தைய கதையில்‌ பாரதி குறிப்பிடுகிறார்‌. இந்த வேணு முதலியின்‌ ஞானானுபவங்‌களைப்‌ பற்றியது இந்தக்‌ கதையும்‌. வேதபுரமென்பது புதுவையின்‌ பெயர்‌. இக்‌ கதையும்‌ முதலில்‌ ௬தேசமித்திரனிலும்‌, பிறகு 1920-ஆம்‌ ஆண்டு நவம்பர்‌ மாதம்‌ மித்திரன்‌ காரியாலயம்‌ வெளியிட்ட ‘கதாமாலிகா’ என்ற நூலிலும்‌ பிரசுரமாயிற்று.

தமிழ் இலக்கியத்தில் செங்கோல் – 1

இந்தியா சுதந்திரம் பெற்றபோது 1947 ஆகஸ்ட் 14-இல் திருவாவடுதுறை ஆதீனத்தால் நாட்டின் முதல் பிரதமர் நேருவிடம் வழங்கப்பட்ட செங்கோல், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் இன்று (28.05.2023) தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியால் நிறுவப்படுகிறது. இது ஒரு வரலாற்று நிகழ்வு. இதனையொட்டி, தமிழ் இலக்கியங்களில் காணப்படும் செங்கோல் குறித்த பதிவுகளைக் காண்போம்...

வேணு முதலி

வேதபுரம்‌ என்று புதுவை நகரத்துக்கு ஒரு மாற்றுப்‌ பெயர்‌ உண்டு. பாரதியார்‌ வேதபுரம்‌ என்ற பெயரைப்‌ பல இடங்களில்‌ உபயோகித்துளளார்‌. வேணு முதலி என்ற நபரைப்‌ பற்றியும்‌ பல கதை, கட்டுரைகளில்‌ குறிப்பிடுகிறார்‌. இக்‌ கதை ‘சுதேசமித்திரனில்’ முதலில்‌ வெளிவந்தது; ‘காளிதாசன் எழுதுகிறார்’ என்ற குறிப்புடன் இக்கதை வெளியாகி இருக்கிறது. பிறகு மித்திரன்‌ அலுவலகம்‌ 1920-ஆம்‌ ஆண்டு நவம்பர்‌ மாதம்‌ வெளியிட்ட ‘கதாமாலிகா’ என்ற நூலில்‌ வெளியாயிற்று.

அவதாரம்

அவதாரம் என்றால் மேலிருந்து கீழிறங்குதல் என்று பொருள். இக்கதையில், ஒருவன் கீழிருந்து மேலே செல்கிறான். மனித வாழ்வின் புரிபடாத சிக்கல்களையும் தவிப்புகளையும் பூடகமாகச் சொல்லிச் செல்லும் எழுத்தாளர், இங்கே இசக்கிமுத்துவின் மனமும் உருவமும் சிறிது சிறிதாக மாறி வருவதை அவதாரத்திற்கு முந்தைய கணங்களாக முன்வைக்கிறார். ஆன்மிக வேட்கை கொண்ட இக்கதையை புதுமைப்பித்தன் எழுதிய ஆண்டு 1947...

பாம்புக்‌ கதை

மனிதனைப்‌ பற்றி ஒரு பாம்புக்கும்‌ காக்கைக்கும்‌ பேச்சுப்‌ போல அமைந்துள்ள இந்தக்‌ குட்டிக்‌ கதை, ‘சுதேசமித்திரன்‌’ தினசரியில்‌, 1919-ஆம்‌ ஆண்டு வெளியாயிற்று. திரு. ரா.அ.பத்மநாபன் தொகுத்த ‘பாரதி புதையல்- முதல் பாகம்’ நூலில் இக்கதை இடம் பெற்றிருக்கிறது.

ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில்

மானிடப் பிறப்பில் உயர்வு- தாழ்வு இல்லை. அது அவனது குனத்தில் தான் இருக்கிறது என்று அழுத்தம் திருத்தமாக நிறுவுகிறது சிறுகதை வேந்தர் ஜெயகாந்தன் அவர்களின் இக்கதை. எல்லோரும் அம்மாசியாகிவிட முடியாது தான். ஆனால், மனிதம் என்ற கனவை நோக்கிய பயணத்தில் பாசஞ்சர் வண்டிகள் வந்துகொண்டே இருக்கும்.

பஞ்ச கோணக்‌ கோட்டை

‘பஞ்சகோணக்‌ கோட்டை’ என்ற தத்துவார்த்தமான இந்தக்‌ கதை திரு. வ.ரா. புதுவையில்‌ நடத்திவந்த ‘சுதந்திரம்‌’ என்ற மாதப்‌ பத்திரிகையில்‌ வெளிவந்தது; பிறகு, 1945 செப்டம்பர்‌ 9-ஆம்‌ தேதி இது சென்னை ‘ஹநுமான்’ வாரப்‌ பதிப்பிலும்‌ வெளியாயிற்று. உண்மையில், சமுதாயத்திற்கு அறிவுரை கூற வந்த மகாகவி பாரதியின் அற்புதமான கட்டுரை இது...

அன்புஜோதியின் அவலமான பின்னணி

“சைவ உணவு விடுதி” என்ற பெயர் தாங்கிய நிறுவனத்தில் புலால் சமைத்துப் பரிமாறப்படுமானால் எப்படி பெயர் பொருத்தம் இல்லையோ, அது போன்றே காப்பகத்தின் பெயருக்கும், அங்கே நடக்கும் சம்பவங்களுக்கும் சற்றும் பொருத்தம் இல்லாத நிலையில் கடந்த 17 ஆண்டு காலமாக தமிழ்நாட்டின் சின்னஞ்சிறு குக்கிராமத்தில் கொடுமைமிகு காப்பகம் இயங்கி வந்திருக்கிறது.....

ரஸத் திரட்டு

எல்லா மனிதரும் சமமென்ற கொள்கையை ஸமூஹ வாழ்க்கையில் ஸ்தாபனம் செய்யும்வரை மானிடருள்ளே இகல், பொறாமை, வஞ்சனை, போர் முதலிய ஏற்பாடுகள் நீங்க மாட்டாவாதலால் அக்கொள்கையை எப்படியேனும் அனுஷ்டானத்துக்குக் கொணர்ந்து விடவேண்டுமென்று ஐரோப்பிய ஞானிகள் பேராவல் கொண்டிருக்கின்றனர். இந்தியா ராஜாங்க விடுதலை பெற்றுவிடுமானால் தன் அனுஷ்டானத்தாலே உலகத்தாருக்கு இக்கொள்கையின் நலங்களை விளக்கிக் காட்டி உலகமுழுவதும் இதனைப் பரவச் செய்தல் ஸாத்யப்படும்.

திரையுலகம்: மாறுகிறது நெஞ்சம்… மாற்றுவது யாரோ?

இடதுசாரிகள், ஹவாலா கும்பல்கள், லிபரல்களால் கைப்பற்றப்பட்ட இந்திய சினிமாவும், திராவிட, நாத்திகக் கும்பல்களால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ்த் திரையுலகும் மீட்சி பெறுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்டன என்கிறார், தமிழ்த் திரைப்பட உதவி இயக்குநர் திரு. சின்னப்பா கணேசன். ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தையும் அதையொட்டி வெளியான சில படங்களையும் முன்வைத்து, இந்த அவதானிப்பை இவர் முன்வைக்கிறார்….

ஜாம்பிகள் – ஜாக்கிரதை!

அற்புதமான உருவகக் கவிதை. எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவனின் இதயமெங்கும் வீசும் சத்திய அனல் கவிதையில் தெறிக்கிறது. ‘ஜாம்பி’ என்றால் என்ன என்று புரியவில்லையா? ‘ஜாம்பி’ என்று வரும் இடங்களில் எல்லாம் ‘மதவெறி’ என்று போட்டுக் கொள்ளுங்கள்… (எந்த மதவெறி என்று சொல்லி ஜாம்பிக் காவலர்களிடம் கடி வாங்க நான் தயாரில்லை). அப்போது, நீங்கள் வாழும் உலகின் தரையடி மெள்ள உங்கள் கால்களுக்குக் கீழே நழுவிக் கொண்டிருப்பது புரியும்.