ஜாம்பிகள் – ஜாக்கிரதை!

அற்புதமான உருவகக் கவிதை. எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவனின் இதயமெங்கும் வீசும் சத்திய அனல் கவிதையில் தெறிக்கிறது. ‘ஜாம்பி’ என்றால் என்ன என்று புரியவில்லையா? ‘ஜாம்பி’ என்று வரும் இடங்களில் எல்லாம் ‘மதவெறி’ என்று போட்டுக் கொள்ளுங்கள்… (எந்த மதவெறி என்று சொல்லி ஜாம்பிக் காவலர்களிடம் கடி வாங்க நான் தயாரில்லை). அப்போது, நீங்கள் வாழும் உலகின் தரையடி மெள்ள உங்கள் கால்களுக்குக் கீழே நழுவிக் கொண்டிருப்பது புரியும்.