இந்திய இடதுசாரிகளும் போரும்

ஆண்டுகள் உருண்டோட, எல்லா வகையான இடதுசாரிகள் மீதும் எனக்கு வெறுப்பு வளர்ந்தது. அவர்கள் தீவிரவாத இஸ்லாத்தை வெளிப்படையாக ஆதரிக்கத் தொடங்கிய போது அது ஆழ்ந்த வெறுப்பாக மாறியது. ‘இடதுசாரிக் கட்சிகளின் நிலைப்பாடு எதுவோ அதற்கு நேர் எதிரான நிலைப்பாடுதான் என்னுடையது’ என்றானது.

துணைக்கண்ட முஸ்லிம்கள்: கடன் வாங்கிய அடையாளம்

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா?  அல்லது உம்மா -  இஸ்லாமிய அகிலம் - என்ற கானல் கனவைப் பின்தொடரும் காலனிய மனப்பான்மையினால் முட்டுச்சந்தில் மோதி நிற்பதா? என்பதை சிந்தித்துப் பார்க்கும் நேரம் வந்துவிட்டது.

ஜன் விஸ்வாஸ் சட்டத் திருத்தம்: மக்கள் மீது நம்பிக்கை

-வ.மு.முரளி 2026ஆம் வருடத்திய ஜன் விஸ்வாஸ் சட்டம், ஒழுங்குமுறை என்ற பெயரில் நடைபெறும் துன்புறுத்தல்களை இல்லாமல் ஆக்குகிறது; ஜன விஸ்வாஸ்  சட்டமானது,  அதிகப்படியான சட்டத் தலையீடுகளைக்  குறைப்பதன் மூலம் நம்பிக்கை   அடிப்படையிலான   நிர்வாகத்தை  ஊக்குவிக்கிறது. எனவே, இதன் விளைவுகள் தொழில் துறையிலும் மக்களின் அன்றாட வாழ்விலும் சிரமங்களைக் குறைத்து, தொழில், வர்த்தகம் புரிவதை எளிதாக்கும்.

ராகுல் – நேரு – கான்ஷி ராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன?

தலித் மக்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் இருப்பதாகக் காட்டிக்கொள்ள விரும்பி அண்மையில் ராகுல் காந்தி உதிர்த்த முத்து ஒன்று, காங்கிரஸ் கட்சியின் வேடத்தை வெளிப்படுத்தக் கிடைத்த வாய்ப்பாகிவிட்டது. இதோ, பத்திரிகையாளர் திரு. சியாம்லால் யாதவ், காங்கிரசின் பொய்முகத்தை தோலுரிக்கிறார்...

எனக்குப் பிடித்த ஒரு கவிதை

இன்றைய உலகம் போர்ச்சூழலால் அவதியுறுகிறது. இதற்குத் தீர்வு என்ன? உலகம் ஏங்குகிறது. இந்நிலையில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன உலகம் வாழ வழிகாட்டிய தமிழ்க் கவிஞனின் ஒரு கவிதையை நினைவுபடுத்துகிறார் கவிஞர் பெ.சிதம்பரநாதன் அவர்கள். இதோ அந்த இனிய கட்டுரை...

கூட்டணிகளுக்குள் குத்துவெட்டு!

தேர்தலில் வெல்ல வேண்டும் என்றால், நியாயமான வாக்குறுதிகள் அளித்தால் போதாது என்ற நிலையை உருவாக்கிவிட்ட தமிழக மக்கள்தான் இதற்கு பொறுப்பாளிகள். இதுதவிர, தேர்தல்காலத்தில் வீடு தேடி வரும் பரிசுப் பொருட்களும் பண முடிப்புகளும் தான் முடிவுகளைத் தீர்மானிப்பவையாக மாறி வருகின்றன. இதுகுறித்து ஜனநாயக மதிப்பீடுகளைக் காக்க விரும்புவோர் கவலைப்பட்டே ஆக வேண்டும்.

தமிழகப் பல்கலைக்கழங்களின் சீரழிவு

கல்வியாளரும் பாஜக பிரமுகருமான பேராசிரியர் ப.கனகசபாபதி அவர்கள் 2018ஆம் ஆண்டு எழுதிய கட்டுரை இது. இன்றும் பொருத்தமாக இருப்பதால், தேர்தல் காலத்தை முன்னிட்டு இக்கட்டுரை மீள்பதிவாகிறது.

செக்யூலரிசம் பற்றிய தவறான புரிதல்

மதச்சார்பின்மை என்ற சொல் இந்தியாவில் மிகவும் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வந்த சொல். அதனை மக்கள் புரிந்துகொள்ளத் தொடங்கியபோதே, தேசிய அரசியலில் மாற்றம் வந்தது. அப்போது (2014) ஓம்சக்தி மாத இத்ழின் ஆசிரியராக இருந்த கவிஞர் திரு. பெ.சிதம்பரநாதன்  ‘தினமணி’ நாளிதழில் எழுதிய கட்டுரை இன்றும் மிகப் பொருத்தமாக இருக்கிறது. இக்கட்டுரையை வழங்கிய கவிஞருக்கு நன்றி.

ராமநவமி கவிதைகள் மூன்று

ஸ்ரீ ராமநவமியை முன்னிட்டு, கவிஞர்கள் இசைக்கவி ரமணன், பத்மன், குழலேந்தி ஆகியோரின் மூன்று கவிதைகள் இங்கே வழங்கப்படுகின்றன...

கம்ப ராமாயணம்: தமிழின் மகோன்னத காவியம்

ராமாவதாரக் கதையை தமிழில் வழங்கி இறவாப்புகழ் பெற்ற கம்ப நாட்டாழ்வார் குறித்த எழுத்தாளர் திரு. ஜடாயுவின் கட்டுரை இது. ஸ்ரீராம நவமியை ஒட்டி இங்கு வெளியாகிறது...

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலை இந்தியா ஏன் கண்டிக்கவில்லை? இது சரணாகதியா, சாதுர்யமா? அயலுறவுத் துறையில் மிகுந்த அனுபவம் கொண்ட திரு. சசி தரூர் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் எழுதியுள்ள அற்புதமான கட்டுரை இங்கு நன்றியுடன் தமிழில் வெளியாகிறது...

பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம்

 ‘பொது சிவில் சட்டத்திற்கு’ ஆதரவாக டாக்டர் அம்பேத்கரும், நீதிமன்றங்களும் கூறியதையே, மேற்கண்ட வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்தும் வழிமொழிந்துள்ளார். ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்னும் இலக்கை நோக்கி நாடு முன்னேறவும், டாக்டர் அம்பேத்கர் கனவை நனவாக்கவும், பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயமாகும்.

வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: குவியும் கண்டனங்கள்-4

திரைப்பாடலாசிரியரும் திராவிட மாடல் அரசின் ஆஸ்தான வித்வானுமான கவிஞர் வைரமுத்து இந்த ஆண்டுக்கான ஞானபீட விருதாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதனை உண்மையான தமிழ் ஆர்வலர்கள் கண்டித்து வருகின்றனர். அவற்றில் சில முகநூல் பதிவுகள் இங்கே… (தொகுப்பு- 4)

வைரமுத்துவுக்கு விருது: தமிழ் எழுத்தாளர்கள் கூட்டுப் பொதுக் கண்டன அறிக்கை

கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டதை மானமுள்ள தமிழர்கள் பலரும் கண்டித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்ப் படைப்பாளர்கள், வாசகர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் 181 பேரிடம் கையெழுத்துப் பெற்று கூட்டுப் பொதுக் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர். நல்ல முயற்சி... தமிழுக்கு குரல் கொடுக்க சித்தாந்தங்கள், அரசியல் பிரிவுகளைக் மீறி இத்தனை பேர் இணைந்திருப்பது பெரும் மகிழ்ச்சி. தமிழ் வாழும்!

வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: குவியும் கண்டனங்கள்-3

திரைப்பாடலாசிரியரும் திராவிட மாடல் அரசின் ஆஸ்தான வித்வானுமான கவிஞர் வைரமுத்து இந்த ஆண்டுக்கான ஞானபீட விருதாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதனை உண்மையான தமிழ் ஆர்வலர்கள் கண்டித்து வருகின்றனர். அவற்றில் சில முகநூல் பதிவுகள் இங்கே… (தொகுப்பு-3)