இறைவனை எம்மொழியில் வழிபடுவது? தேவ பாஷயிலா, மனித பாஷையிலா? என்ற விதண்டாவாதம் தமிழகத்தில் நீண்ட நாட்களாக நிலவி வருகிறது. தேவ பாஷை: சம்ஸ்க்ருதம், மனித பாஷை: தமிழ் என்கிறார்கள் வம்பு வளர்ப்போர். நம்மைப் பொருத்த வரை, இவ்விரு மொழிகளும், ஈசனின் உடுக்கையில் உதித்த இறையம்சம் கொண்ட தெய்வீக மொழிகள். ஆனால், தமிழக ஆன்மிகச் சூழலில் இதனை துணிவுடன் எடுத்தியம்ப ஆன்மிகவாதிகள் தயங்குவது இயல்பாக உள்ளது. இந்நிலையில், இலங்கையைச் சார்ந்த திரு. மயூரகிரி சர்மாவின் முகநூல் பதிவு மிகவும் தெளிவாகவும் துணிவாகவும் இருக்கிறது. எனவே அதனை உரிமையுடன் இங்கு மீள்பதிவு செய்து மகிழ்கிறோம்….
Category: சிந்தனைக் களம்
மாணவர்கள் பெயரில் ஜனநாயக விரோத சக்திகளின் சூழ்ச்சி
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு என்று சொல்லி, தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடங்கி, பின்னர் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பரவிய போராட்டங்களின் நோக்கம் மாணவர்களின் நலன்களைப் பற்றியதல்ல. போராட்டங்கள் முழுவதும் மாணவர்களால் நடத்தப்பட்டவையும் அல்ல. அவற்றில் பங்கேற்றவர்களில் முக்கால்வாசிப் பேருக்கு மேல் மாணவர்கள் அல்ல. அவர்களிலும் நீட் தேர்வு மற்றும் மருத்துவக் கல்வி சம்பந்தப்பட்டவர்கள் இருந்தனரா என்பதே கேள்விக்குறி.
மகாகவியின் மாறாத ஆசை
‘வந்தேமாதரம்’ தேசியப் பாடலுக்கு தேசிய கீதத்திற்கு இணையான அந்தஸ்து அளிக்கும் சட்டம் நிறைவேறிவிட்டது. அதுகுறித்த இனிய மதிப்பீட்டை முன்வைத்திருக்கிறார் மூத்த எழுத்தாளர் திரு. மாலன். ’தினமணி’ நாளித்ழில் வெளியான இக்கட்டுரை நன்றியுடன் மீள்பதிவாகிறது.
நதிநீர் முழுதும் நாட்டின் உடமை!
தமிழகம் - கர்நாடகம் மாநிலங்களிடையே ஒவ்வோர் ஆண்டும் காவிரி நீர்ப் பங்கீடு பிரச்சினையாகி வருகிறது. இந்நிலையில், நதிநீர் எந்த ஒரு மாநிலத்திற்கும் சொந்தமானதல்ல, இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் சொந்தமானது என்கிறது இக்கவிதை...
எதிர் நோக்கில் சிந்தியுங்கள்!
பொது ஊடக செய்திகள் இணையத்தின் தகவல் கருவூலமாக இருந்த காலம் மலையேறிவிட்டது. இப்போது இணையம் - அதிலும் குறிப்பாக - சமூக ஊடகங்கள் தான் பொது ஊடகங்களுக்கு தகவல் கருவூலமாக மாறி இருக்கின்றன. இந்த மாற்றம் கூட எதிர்நோக்கில் சிந்திப்பது தானே? முகநூலில் திரு. டி.கே.எல்.ஸ்ரீராம் எழுதிய இநதக் கட்டுரையை, நட்புரிமையுடனும் நன்றியுடனும் இங்கே மீள்பதிவு செய்கிறோம்!
புறவழி பேச்சுவார்த்தை: உண்மை என்ன?
உளவியல் போர் நடவடிக்கை என்பது ராணுவம் மற்றும் உளவுத் துறை தந்திரங்களில் ஒன்று. பல நாடுகள் இதை சிறப்பாகப் பயன்படுத்துவதில் தேர்ந்தவை. தவறான செய்திகளைப் பரப்புவதன் மூலம், எதிரி நாடுகளில் உள்ளவர்களைக் குழப்பி சந்தேகப்பட வைப்பது அதில் அடங்கும். அதற்கு சிறந்த உதாரணம் இந்தியா - பாகிஸ்தானிடையே அதிகார பூர்வமற்ற, அரசு முறை சாராத, இரண்டாவது வழித்தட பேச்சு வார்த்தை கொழும்புவில் நடந்தது என்ற பொய்யான செய்தி. இது உள்நோக்கம் கொண்டவர்களால் பரப்பப்பட்டு வருகிறது.
இது காமகோடிக்கு கேவலமல்ல…
மத்திய அரசின் தேர்வு சீர்திருத்தங்களுக்கான பணிக்குழு குறித்த நாடாளுமன்ற விவாதத்தின் போது (28.07.2026) காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடியை ‘கோமிய நிபுணர்’ என்ற கேலி செய்யும் வகையில் குறிப்பிட்டிருந்தார். அதுதொடர்மான இரு கண்டனங்களும் இரு செய்திகளும் இங்கே…
தாயை வணங்கினால் தறுதலைகளுக்கு ஆத்திரமா?
கடந்த ஜூலை 28ஆம் தேதி, திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழா, தேசியப் பாடலான ’வந்தேமாதரம்’ கீதத்துடன் தொடங்கியதை தமிழகத்தில் சில அறிவிலிகள் எதிர்த்துள்ளனர். அவர்களுக்கான பதில் இது…
கரப்பான் பூச்சிகள்: பிரச்சினை மோடிக்கு மட்டுமல்ல!
அரசுக்கு எதிராக சில ஆயிரம் பேர் திரண்டு வன்முறை செய்தால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை நிலைகுலையச் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டிருப்பது நல்லதல்ல. அரசுக்கு எதிரானவர்களை விட ஆதரவான மக்கள் தான் அதிகம். ஆனால் போராட்டத் தருணங்களில் மக்களின் அரசு ஆதரவு வெளிப்படுவதில்லை. அதுதான் கவலை அளிக்கும் விஷயம்.
கரப்பான் பூச்சிகள்: தடம் மாறிய மாணவர் போராட்டம்
தொடர்ந்து 35 நாட்களாக நடந்த இப்போராட்டம் முழுமையான மாணவர் போராட்டமா என்றால் இல்லை. மாணவர்கள் பெயரில் பல சமூக விரோதிகள் கூடாரமிட்டு கும்மாளம் போட்டதற்கான ஆதாரம் அவர்களின் செயலே. தேசத்திற்கு எதிரான கோஷங்களும், எல்லைமீறி நடந்து கொண்ட விதமும், தடைகளைத் தாண்டி அத்துமீறி நாடாளுமன்றத்தை நோக்கிச் சென்ற செயலும், தடுக்க வந்த போலீஸ்காரர்களையே தாறுமாறாக தாக்கிய வெறிச் செயலும், நம் தேசத்து சொத்துகளையே (வீதியில் காணப்படும் அனைத்தையும்) சேதப்படுத்தி அடித்து நொறுக்கி தீயிட்டு கொளுத்திச் செய்த நாசக்கார சம்பவங்களும்… என அவர்களின் அத்துமீறல்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
கரப்பான் பூச்சிகளால் நிலைகுலைந்த தில்லி – 2
கரப்பான் பூச்சி கட்சியின் (சி.ஜே.பி.) தொடர் போராட்டம் ஜூலை 20ஆம் தேதி, தில்லியில் பெரும் அமளியுடன் முடிந்திருக்கிறது. போராட்டக்காரர்களின் வன்முறை, காவல்துறையில் தடியடி, தேசதுரோக கோஷங்கள், நாடாளுமன்றம் முற்றுகை, மாணவர்களுடன் தேசவிரோதிகள் கைகோர்ப்பு என போராட்டத்தின் திசை மாறியதில் இந்திய ஜனநாயகம் திக்கித் திணறியது. இது தொடர்பான சில முகநூல் பதிவுகள் இங்கே ஆவணப்பதிவாக (தொகுப்பு- 2)….
கரப்பான் பூச்சிகளால் நிலைகுலைந்த தில்லி
கரப்பான் பூச்சி கட்சியின் (சி.ஜே.பி.) தொடர் போராட்டம் ஜூலை 20ஆம் தேதி, தில்லியில் பெரும் அமளியுடன் முடிந்திருக்கிறது. போராட்டக்காரர்களின் வன்முறை, காவல்துறையில் தடியடி, தேசதுரோக கோஷங்கள், நாடாளுமன்றம் முற்றுகை, மாணவர்களுடன் தேசவிரோதிகள் கைகோர்ப்பு என போராட்டத்தின் திசை மாறியதில் இந்திய ஜனநாயகம் திக்கித் திணறியது. இது தொடர்பான சில முகநூல் பதிவுகள் இங்கே ஆவணப்பதிவாக….
அகிலம் போற்றும் ஆவுடையாள்
சங்கரநயினார் கோயில் என்று பெயர் பெற்ற இத்தலமே சங்கரன்கோவில் என்று அழைக்கப்படுகிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முச்சிறப்புகளை உடைய தலம்; தென்காசி, விருதுநகர் மாவட்ட பஞ்சபூதத் தலங்களில் மண்ணுக்குரிய தலம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான கோயில் இது.
ஒரு ஹிந்துவின் மனக்குமுறல்
அண்மையில் BLAST என்ற தமிழ்த் திரைப்படம் வெளிவந்து சக்கைப்போடு போட்டது. ஆங்கிலத்தில் அதை ‘வெடிப்பு’ என்று சொல்லலாம் :). அதை விட கடுமையான வெடிப்பை எழுத்தில் காட்டி இருக்கிறார் எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன். இதை மறுபதிவிடுவது நமது கடமையல்லவா?
சொரணையுள்ள இந்துக்களாக இருக்க வேண்டும்
கரூர் இனாம் நிலம் தானம் தொடர்பான சர்ச்சை தமிழகத்தில் களைகட்டியுள்ள நிலையில், நமது மனசாட்சியுடன் பேசுகிறார் எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன்…