தாம் சொன்ன பொருளைச் செட்டியார் சிறிதும் பாராட்டவில்லையேயென்ற வருத்தம் மேற்சொன்ன மாணவருக்கு இருந்தது. எழுந்து செல்லுகையில் அம்மாணவரை நோக்கி இவர், "செட்டியார் மதிக்கவில்லையென்ற வருத்தம் உமக்கு இருப்பதாகத் தெரிகிறது. உண்மைப் பொருளுக்கு எப்பொழுதும் மதிப்புண்டு. அவர் மதியாவிட்டால் அதற்கு இழிவொன்றுமில்லை. பிறருடைய மதிப்பையும் அவமதிப்பையும் கவனிக்கக் கூடாது'' என்று ஆறுதல் கூறினார்.
Month: November 2022
பாரதத்தின் ஞானதீபம்
திரு. வ.வே.சு., சென்னை விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் முதல்வர், பாரதி அன்பர். சென்னையில் வானவில் பண்பாட்டு மன்றம் என்ற அமைப்பை நிறுவி நடத்தி வருபவர். சுவாமி விவேகானந்தர் குறித்த இவரது கட்டுரை இங்கே…
பாஞ்சாலி சபதம் – 1.1.21
அமைச்சர் விதுரன் தனது அரசனின் தூதையும் கடமையாகச் சொல்ல வேண்டும்; சூது நல்லதல்ல என்று அறிவுரைக்கவும் வேண்டும் என்ற இருதலைக்கொள்ளி எறும்பாகிறார். சூது நல்லதல்ல என்று மன்னர் பலமுறை கூறியும் இணங்காத துரியனின் தீய உள்ளத்தைக் கூறும் அமைச்சர், ‘இதில் நீயே முடிவெடு’ என்கிறார் தருமனிடம்....
ஸ்வதந்திர கர்ஜனை- 2(10)
இந்தியர்களின் ஒரே கோரிக்கை ‘பரிபூரண சுதந்திரம்’, இதற்கு மாற்றாக எந்தவித சீர்திருத்தங்களையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகவே சைமன் கமிஷனை இந்தியா முழுவதும் எதிர்ப்போம் என்றது சென்னை காங்கிரஸ். அதற்குப் பிறகு இந்திய அரசியலில் ஒரு பரபரப்பு நிலவியது. இங்கிலாந்திலிருந்து வரும் சைமன் கமிஷனை எதிர்ப்போம் என்று இந்தியாவில் இருந்த எல்லா கட்சிகளும், தமிழ்நாட்டில் இருந்த ஜஸ்டிஸ் கட்சி என்ற ஒன்றைத் தவிர, மற்ற அனைவரும் ஒரே குரலில் ‘எங்கள் கோரிக்கை பரிபூரண சுயராஜ்யமே தவிர சீர்திருத்தங்கள் அல்ல, ஆகவே சைமனை எதிர்ப்போம் என்று உரக்கக் கூவினர்.
நாடு முன்னேற விவேகானந்தர் வேண்டும்!
பேராசிரியர் திரு சாலமன் பாப்பையா (86), மதுரையில் வசிப்பவர்; தமிழ் மேடைப் பேச்சாளர்களுள் முத்திரை பதித்த பட்டிமண்டப நாவலர்; நகைச்சுவை மிகுந்த தனது பேச்சால் உலகத் தமிழர்களைக் கவர்ந்து வருபவர். மதுரையில் நடைபெற்ற ஸ்ரீ ராமகிருஷ்ணர்- சுவாமி விவேகானந்த பக்தர்களின் 18-வது மாநில மாநாட்டில் திரு.சாலமன் பாப்பையா ஆற்றிய உரையின் சுருக்கம் இது....
பாஞ்சாலி சபதம் – 1.1.20
துரியனின் சூதுச் சூழ்ச்சியை அறிந்த தருமன் திகைப்படைந்து சித்தப்பனிடம் இதற்கு நீங்களே ஒரு வழி கூறுங்கள் என்கிறான். ‘வெல்லக் கடவர் எவரென்ற போதும் வேந்தர்கள் சூதை விரும்பிட லாமோ?’ என்று வினவுகிறான்...
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
திரையுலகில் அகப்பாடல்களில் (காதல் பாடல்கள்) இனிய சொல்லாட்சியையும் மெல்லிய உணர்வுகளை வெளிப்படுத்தும் இனிய சந்தங்களையும் தென்றலென உலவவிட்டவர் கவியரசர். இதோ மற்றொரு காதல் பாடல்... பாலும் பழமும் திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களுமே காலத்தை வென்ற, கருத்தாழம் மிக்க பாடல்கள்.
முகவரி தந்த முதல்வர்
‘ஆய்வுரைத்திலகம்’ என்று போற்றப்படும் அமரர் பேராசிரியர் அ.அறிவொளி, நாவன்மையால் தமிழ்ப் பட்டிமண்டபங்களை ருசிகரமாக்கியவர். சைவத்திலும் கம்பன் காவியத்திலும் தோய்ந்தவர். பல நூல்களை எழுதி இருக்கிறார். சுவாமி விவேகானந்தர் குறித்த அவரது இனிய கட்டுரை இங்கே…
பாஞ்சாலி சபதம் – 1.1.19
விதுரன் தான் வந்த நோக்கத்தை நிறைவேற்ற, அஸ்தினாபுர மன்னர் திருதராஷ்டிரன் பாண்டவர்க்கு விடுத்த அழைப்பை உரைக்கிறார். கூடவே, இறுதியில் துரியனின் சூது சூழ்ச்சியையும் குறிப்பிடுகிறார்...
பாரதியை வடிவமைத்த காசி
பாரதியின் காசி வாசம் மொத்தம் ஐந்தே ஆண்டுகள் தான், 1898 முதல் 1903 வரை. ஆயினும், அவரது வாழ்க்கைப் பாதையையே காசி தான் நிர்ணயித்தது என்றால் மிகையில்லை. தனது 16 முதல் 21 வயது வரையிலான காசி வாசத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களும், திறப்புகளும், தரிசனங்களுமே எட்டையபுரத்தில் ‘இளசைச் சுப்பிரமணியன்’ என்று சம்பிரதாயமாக தமிழ்ப் பண்டித நடையில் கவிதை எழுதிக் கொண்டிருந்த சுப்பையாவை, மகத்தான இலட்சியங்களும், தேசிய உணர்வும், சுதந்திர சிந்தனைகளும் கொண்ட சுப்பிரமணிய பாரதி என்ற நவீனத் தமிழ்க் கவிஞராகவும், எழுத்தாளராகவும், படைப்பாளியாகவும் மாற்றின....
சத்திய சோதனை- 5(21-25)
சத்தியாக்கிரகத்தின் முடிவில் சத்தியாக்கிரகிகள் மேலும் பலமுள்ளவர்களாகவும், ஆரம்பத்தில் இருந்ததைவிட அதிக உற்சாகமுள்ளவர்களாகவும் இருக்க முடிந்தால்தான் சத்தியாக்கிரகப் போராட்டம் பயனுள்ளதாயிற்று என்று சொல்ல முடியும்....
பாஞ்சாலி சபதம் – 1.1.18
அஸ்தினாபுர அமைச்சர் விதுரனும் தங்கள் சித்தப்பனுமான விதுரனை சகல மரியாதையுடன் வரவேற்கின்றனர் பாண்டவர்கள். மூன்று பாடல்களில் இதனை விவரிக்கிறார் மகாகவி பாரதி...
அவரா சொன்னார்?
அமரர் பேராசிரியர் ஸ்ரீ. சோ.சத்தியசீலன், ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர்; கம்பனில் ஆழ்ந்தவர்; தமிழகம் மட்டுமல்லாது, உலகமெங்கும் சென்று பட்டிமண்டபங்களில் தமிழ் வளர்த்தவர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இங்கே...
ஹரிஜன்: பெயரில் என்ன இருக்கிறது?
அமரர் திரு. லா.சு.ரங்கராஜன் (1930- 2016), தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்; எழுத்தாளர்; காந்திய சிந்தனையாளர்; மகாத்மா காந்தியின் சொற்பொழிவுகள் எழுத்துக்கள் அனைத்தையும் அரசு சார்பில் (Collective Works Of Mahatma Gandhi) தொகுத்த குழுவை வழிநடத்தியவர். ‘ஹரிஜன்’ என்ற சொல் பிறந்ததன் வரலாறு குறித்த அவரது கட்டுரை இங்கே….
ஸ்வதந்திர கர்ஜனை- 2(9)
நம்மில் பலர் ‘வைக்கம் சத்தியாக்கிரகம்’ என்று ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுச் சொல்வதையும், பெரியார் ஈ.வே.ராமசாமி நாயக்கரை ‘வைக்கம் வீரர்’ என்ற அடைமொழியோடு குறிப்பிடுவதையும் கேட்டிருக்கிறோம். இல்லையா? அந்த வைக்கம் சத்தியாக்கிரக நிகழ்ச்சி பற்றி எத்தனை பேருக்கு முழுமையாகத் தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை. ஆர்வம் உள்ளவர்களுக்காக அந்த சத்தியாக்கிரக நிகழ்ச்சி பற்றி சிறிது இப்போது பார்க்கலாம்....