ஞான ஜெயந்தி

அமரர் திரு.  ரா.கணபதி, ஆன்மிக  எழுத்தாளர்;  காஞ்சி சங்கர மடத்தின் பக்தர்;  மறைந்த காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் உபதேசங்களை 7 பாகங்களாக, அற்புதக் கருவூலமாக  ‘தெய்வத்தின் குரல்’ என்ற நூலாகத் தொகுத்தவர்;  ‘அறிவுக் கனலே அருட்புனலே’ (ராமகிருஷ்ணர் மற்றும் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு), ’சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு’, ’காற்றினிலே வரும் கீதம்’ உள்ளிட்ட பல  ஆன்மிக நூல்களை எழுதியவர். சுவாமி விவேகானந்தர் குறித்து இவர் எழுதிய இக்கட்டுரை, சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு (1963) விழாவை முன்னிட்டு, கல்கி வார இதழில் (மலர்- 22, இதழ்- 25) இடம்பெற்றதாகும்.

பாஞ்சாலி சபதம்- 1.1.8

அழுக்காறால் புகைந்த மருகனுடன் நாட்டின் மன்னனும் அவனது தந்தையுமான திருதராஷ்டிரனிடம் செல்லும் சகுனி, தனது மைத்துனரின் மனதில் விஷம் விதைக்க முயல்கிறான். ஆனால், திருதராஷ்டிரன் தனது மகனைப் பார்த்து, “பாண்டவர் போன்ற அரும் சகோதாரர்கள் உடன் இருக்கையில் உனக்கு வேதனை ஏன்?” என்று கேட்டு எரியும் கொள்ளியில் நெய் வார்க்கிறார். அப்போது நாடு மன்னரின் கடமைகள் என்ன என்று சகுனி உரைப்பதாக இப்பாடல்களைப் புனைத்திருக்கிறார் மகாகவி பாரதி...