“நம்மைச்சுற்றி இன்பக் கோட்டைகள் கட்டிக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொருவனுக்கும் இருக்கின்றது. மகத்தான அறிவு வேண்டும். அழியாத நெஞ்சுறுதி வேண்டும். கல்விகள் வேண்டும். கீர்த்திகள் வேண்டும். செல்வங்கள் வேண்டும். சூழ்ந்திருக்கும் ஊரார் தேசத்தார் உலகத்தார் எல்லோரும் இன்பத்துடன் வாழும்படி நான் செய்யவேண்டும். நல்லாசைகள் பெரிது பெரிதாக வைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த ஆசைகள் நிறைவேற வேண்டுமானால், பலமான அடிப்படை போட்டு மெல்ல மெல்லக் கட்டிக்கொண்டு வர வேண்டும் ” - இதனைச் சொல்பவர் மகாகவி பாரதி. இதற்கான வழிமுறையையும் சொல்கிறார்...
Month: January 2023
போற்றி! போற்றி! (கவிதை)
திருமதி சௌந்தரா கைலாசம் (1927- 2010), கரூரைச் சார்ந்தவர்; மறைந்த முன்னாள் நீதிபதி கைலாசம் அவர்களின் மனைவி; எழுத்தாளர்; இந்து அறநிலையத் துறை, திரைப்படத் தணிக்கைக் குழு, அகில இந்திய வானொலி ஆலோசனைக் குழு போன்றவற்றில் உறுப்பினராகப் பொறுப்பு வகித்தவர். யாப்பிலக்கணத்துடன் மரபுக் கவிதைகள் புனைவதில் வல்லவர். சுவாமி விவேகானந்தர் மீதான அன்னாரது கவிதை இது…
மகாவித்துவான் சரித்திரம்- 2(15)
உ.வே.சா. அவர்களுக்குக்கிடைத்த, மகாவித்துவானுக்கு சிலர் எழுதிய கதங்கள் இவை...
மாரீசன் குரல்
தமிழகத்தில் பிசாசு மாதிரி உருவெடுத்து வருகிறது பாஜக (உபயம்: அமைச்சர் துரை முருகன்) என்று திமுகவினரே நம்பத் தொடங்கிவிட்டார்கள் என்பது தெரிகிறது. பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலையின் ஒவ்வொரு நாள் செய்தியாளர் சந்திப்பும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பதால், அவரை முடக்க முனை மழுங்கிய பல ஆயுதங்களைப் பிரயோகித்துப் பார்க்கிறது ஆளும் திமுக. அதன் கடைசி முயற்சி, சமயச் சொற்பொழிவாளர் சுகி சிவத்தை அண்ணாமலைக்கு எதிராகப் பேச வைத்திருப்பது. இதற்குப் பொருத்தமான பதிலை அளிக்கிறது இக்கட்டுரை...
தீபம் போதும்! (கவிதை)
மகாத்மா காந்திக்கு கவியரசரின் அஞ்சலிக் கவிதை இது...(இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்)
வாசக ஞானம்
“கண்ணைத் திறந்துகொண்டு படுகுழியில் விழுவது போல, மனித ஜாதி நன்மையை நன்றாய் உணர்ந்தும் தீமையை உதற வலிமையின்றித் தத்தளிக்கிறது. இதற்கு என்ன நிவாரணம் செய்வோம்? தைரியந்தான் மருந்து! தற்கால அசெளகர்யங்களையும் கஷ்ட நஷ்டங்களையும் பொருட்படுத்தாமல் மனிதர் உண்மை என்று கண்டதை நடத்தித் தீர்த்துவிட வேண்டும். அங்ஙனம் தைரியத்துடன் உண்மை நெறி பற்றி நடப்போரை மற்றவர்கள் புகழ்ச்சியாலும் சம்மானங்களாலும் ஊக்கப்படுத்த வேண்டும்.” - மகாகவி பாரதியின் இனிய அறிவுரை இது....
சுவாமி விவேகானந்தரின் பார்வையில் வேதாந்தம்
திரு. கோ.ஆலாசியம், தமிழகத்திலிருந்து சிங்கப்பூர் சென்று அங்கு கப்பல் துறையில் மின்னணுவியல் பொறியாளராக 32 ஆண்டுகளாகப் பணிபுரிபவர்; வேதாந்த ஆய்வுகளில் ஈடுபட்டிருப்பவர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இங்கே…
ஸ்வதந்திர கர்ஜனை- 2(26)
தற்காலிக இந்திய சர்க்கார் ஆசாத் ஹிந்த் 1943 அக்டோபர் 21-இல் துவக்கப்பட்டது. இப்படி இந்த இந்திய தற்காலிக சுதந்திர சர்க்கார் ஸ்தாபிக்கப்படுகிறது என்பதை சிங்கப்பூரிலுள்ள சாத்தே சினிமா கட்டடத்தில் கிழக்காசிய நாடுகளின் பிரதிநிதிகள் மத்தியில் பிரகடனம் செய்யப்பட்டது. இதற்கான பிரகடனத்தில் இந்திய சுதந்திர சர்க்காரின் பிரதம மந்திரியாகவும், வெளியுறவுத்துறை அமைச்சராகவும் நேதாஜி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு கையெழுத்திட்டார்.....
பாரதியும் பாரதிதாசனும் -4இ
சமுதாயத்திலுள்ள குறைபாடுகள், விருப்பு வெறுப்புக்கள் ஆகியவற்றில் மனத்தை உழலவிட்ட கவிஞர் தம் பாடல்களில் அம் மன உழற்சியை வெளியிட்டுப் பலவிடங்களிலும் பாடியிருப்பதைக் காண்கின்றோம். இத்தகைய சூழ்நிலைக்கு எதிராக 'அழகின் சிரிப்பு' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள 16 கவிதைத் தொகுப்புகளும் 1944 - க்கு முன்னர் வெளியிடப் பெற்றது. ஆதலின் மேலே கூறிய குழப்பங்கள் எதுவுமில்லாமல் ஒப்புயர்வற்ற கவிதைகளாக விளங்கக் காண்கின்றோம்.
பழைய உலகம்
“அடுத்த ஜன்மத்தில் நான் மற்றொரு மனிதனாகப் பிறந்து வாழ்கையிலே செல்வமுண்டானால், இப்போதுள்ள எனக்கு எவ்விதமான லாபமும் இல்லை. அதைப்பற்றி எனக்கு அதிக சிரத்தை யில்லை. இந்த ஜன்மத்தில் பணம் தேடுவதுதான் நியாயம். வரும் ஜன்மத்து ரூபாய்க்கு இப்போது சீட்டுக் கட்டுவது புத்திக் குறைவு” - மகாகவி பாரதியின் யதார்த்தமான சிந்தனையும் லாகவமான எழுத்து நடையும் பிணைந்த கட்டுரை இது...
விவேகானந்தர்- 150 ஆண்டுகளைக் கடந்து…
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் மூத்த பிரசாரகர்; சிறந்த பேச்சாளர்; எழுத்தாளர்; மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் மாநில அமைப்புச் செயலாளராகவும், விஜயபாரதம் வார இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியவர் திரு. நா.சடகோபன். சுவாமி விவேகானந்தர் குறித்து 2012-இல் இவர் எழுதிய கட்டுரை இங்கே…
செல்வம் – II
மக்களிடையே உள்ள பொருளாதார ஏற்றத் தாழ்வுக்குக் காரணம் என்ன? ஏழைகளின் துயரை அகற்றுவது எப்படி? ரஷ்யாவில் உதித்துள்ள பொது உடைமை சித்தாந்தம் நல்லதா? அது நீண்ட நாட்கள் நிலைக்குமா? ஆயுதத்தாலும் வன்முறையாலும் சமத்துவத்தை நிலைநாட்ட முடியுமா? கம்யூனிஸம் நீடிக்குமா? இதுபோன்ற கேள்விகள் அனைத்திற்கும், சுதேசமித்திரனில் 1917-இல் எழுதிய கட்டுரையில் பதில் அளிக்கிறார் மகாகவி பாரதி....
மேலை நாட்டு ஸ்பினோஸாவும், கீழை நாட்டு நரேந்திரரும்
விஜயபாரதம் வார இதழில் துணை ஆசிரியராகப் பணிபுரியும் திரு. சந்திர. பிரவீண்குமார், சுவாமி விவேகானந்தர் குறித்து எழுதிய கட்டுரை இது…
செல்வம்-I
ரஷ்யாவில் நிகழ்ந்த பொதுவுடைமைப் புரட்சி குறித்த மகாகவி பாரதியின் அதியற்புதமான கட்டுரை இது. ரஷ்யாவில் வென்ற கம்யூனிஸ்ட் கட்சியால் இந்தியாவில் ஏன் வளர முடியவில்லை என்பதையும் கேள்வியாகக் கேட்டு 105 ஆண்டுகளுக்கு முன்னர் (1907) அவர் எழுதிய கட்டுரை இது...
கடவுளைக் காண மனிதனுக்கு தொண்டு செய்யுங்கள்!
தினகரன் நாளிதழில் பணியாற்றும் பத்திரிகையாளர் திரு.மு.நாகமணி, சுவாமி விவேகானந்தர் குறித்து எழுதிய கட்டுரை இது….