கவிதையின் இலக்கணம் குறித்த மகாகவி பாரதியின் இந்தக் கட்டுரையில் (சுதேசமித்திரன்) ‘ஹொக்கு’ என்று குறிப்பிடப்படுவது தான் இன்றய ஹைகூ கவிதை.நூறாண்டுகளுக்கு முன்னமே அதனை அறிந்திருந்தார் நமது மகாகவி. பாரதியின் வசன கவிதைகளே தமிழ்ப் புதுக்கவிதைக்குத் தோற்றுவாய். இக்கட்டுரையில் கூறியுள்ள பல அம்சங்களை தனது வசன கவிதைகளில் மகாகவி பாரதி பயன்படுத்தி இருப்பதைக் காணலாம்.
Month: April 2023
செந்தமிழ்த் தேன்மொழியாள்…
திரையுலகை ஆக்கிரமித்த திராவிட இயக்கத்தின் தொடக்கக் காலத்தில், அந்த இயக்கத்தின் இளம் நாற்றாக வெளிப்பட்ட கவியரசர் கண்ணதாசன் இயற்றிய அற்புதமான பாடல் இது. ‘மாலையிட்ட மங்கை’ (1958) என்ற இந்தத் திரைப்படமும், இந்தப் பாடலும் அக்காலத்தில் தமிழகமெங்கும் பிரபலமாகின. இத்திரைப்படத்தின் 15 பாடல்களும் கண்ணதாசனால் எழுதப்பட்டன. படத்தின் தயாரிப்பாளரும் அவரே. கவியரசரை தமிழகத்திற்கு முழுமையாக அறிமுகம் செய்வித்த திரைப்படம் இது எனில் மிகையில்லை.
குருவும் ஆசிரியரும்…
காஞ்சிப் பெரியவர் என்றும் பரமாச்சாரியார் என்றும் அழைக்கப்படும் பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், நமது காலத்தில் வாழ்ந்த மாபெரும் ஞானி. அவரை பிராமணர் சமூகத் தலைவராக மட்டுமே குறுக்கும் போக்கு தேவையற்றது. அவரது அருளுரைகளின் தொகுப்பான ‘தெய்வத்தின் குரல்’ பல்துறை ஞானக் களஞ்சியம். அதிலிருந்து ஒரு பகுதி இங்கே…
என் குருநாதர்
மகாகவி பாரதியால் பூணூல் அணிவிக்கப்பட்டு, காயத்ரி மந்திரம் உபதேசம் பெற்ற ஹரிஜன இளைஞர் ரா.கனகலிங்கம், ‘என் குருநாதர்’ என்ற நூலில் எழுதியது இது.
பிராமண எதிர்ப்பு மூடத்தனம்!
1959-இல், திருச்சியில் தமிழ் எழுத்தாளர் சங்க மாநாடு, தேவர் ஹாலில் நடைபெற்றது. அதன் திறப்பாளரான ஈ.வெ.ராமசாமி மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். அவர் தனது வழக்கமான தோரணையில் நமது இதிகாச புராணங்களையும், இந்து மதத்தையும், பிராமணர்களையும் கடுமையாகக் கண்டனம் செய்தும், ‘நான் பார்ப்பனனின் எதிரியா? நான் பார்ப்பனீயத்தையே எதிர்க்கிறேன்!’ என்றெல்லாம் அவர் தனது வாழ்நாளில் கைக்கொண்டிருக்கிற கொள்கைகளை விளக்கி முக்கால் மணி நேரம் பேசி முடித்து அமர்ந்தார். அடுத்துப் பேசிய இளம் எழுத்தாளர் (அப்போது அவருக்கு வயது 25!) திரு. ஜெயகாந்தன் பேசியதன் சுருக்கம் இது...
ரெயில்வே ஸ்தானம் – சிறுகதையும் மறுப்பும்
மகாகவி பாரதி, தனது வாழ்வின் இறுதிக்கட்டத்தில், ‘சுதேசமித்திரன்’ இதழில் சமகால உலகம், அரசியல், சமயம், பண்பாடு தொடர்பான கட்டுரைகள், கவிதைகள், நையாண்டிக் கதைகள், சிறுகதைகளை எழுதி வந்தார். அந்த வகையில் ‘சுதேசமித்திரன்’ (22-5-1920) இதழில் அவர் எழுதிய கதை, ‘ரெயில்வே ஸ்தானம்’. இஸ்லாமிய மக்களிடையே உள்ள பலதார மணத்தை விமர்சிக்கும் வகையிலும், முஸ்லிம் மாதரின் பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுப்பதாகவும் இக்கதையை எழுதியுள்ளார் பாரதி. எனினும், இக்கதையில் சிறு தகவல் பிழை இருப்பதாக அவரது இஸ்லாமிய நண்பர் கூறியதையும் ‘சுதேசமித்திரன்’ இதழில் 'முகமதிய ஸ்திரீகளின் நிலைமை' என்ற கட்டுரையாக வெளியிட்டு, தனது பிழைக்கு வருத்தமும் தெரிவித்திருக்கிறார். என்றபோதும், முஸ்லிம் மாதரின் உரிமைக்காக தனது இஸ்லாமிய நண்பரிடம் தொடர்ந்து வாதிடுகிறார். சமூக மாற்றத்துக்காகத் துடித்த மகாகவி பாரதியின் இதயம், மதம் கடந்து சிந்தித்ததையும் இந்த சிறுகதை மற்றும் கட்டுரையில் காண முடிகிறது.
‘சுப்ரமண்ய’ வேதம்
வர்ணம் வேறு ஜாதி முறை வேறு. வர்ணத்தை ஏற்றுக்கொள்ளும் பாரதி ஜாதி முறையை ஏற்க மறுக்கிறார். வர்ணம் பிறப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல. ஆனால் ஜாதி என்பது பிறப்பால் வருவது. பிறப்பின் காரணத்தால் ஏற்படும் பிரிவுகளை அவர் வெறுக்கிறார்.
புதுமைக்குப் பொலிவு கூட்டியவர் விவேகானந்தர்
பேராசிரியர் திரு. வ.தங்கவேல், திருவேடகம், விவேகானந்தா கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்; பெங்களூருவில் வசிக்கிறார்; சுவாமி விவேகானந்தர் குறித்த நாடகங்களை எழுதி இருக்கிறார். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…
பாரதியின் பாஞ்சாலி
வியாச முனிவரின் மூலநூலான பாரதத்தை அடியொற்றி, அதன் ஒரு பகுதியான பாஞ்சாலியின் சபதத்தை மகாகவி பாரதி கவிதையில் வடித்துத் தந்திருக்கிறான். இந்தப் பாஞ்சாலி சபதம் இரண்டு பாகங்களாக எழுதப்பட்டது; எழுபத்து மூன்று தலைப்புகளைக் கொண்டது; முன்னூற்றியெட்டு பாடல்களை உள்ளடக்கியது. பாஞ்சாலியைத் தன் கதையின் நாயகியாக பாரதி தேர்ந்தெடுத்தது ஏன்? அவளை அடிமைப்பட்ட பாரத தேசத்தின் உருவகமாக, பாரத தேவியாக பாவித்ததன் விளைவா? அல்லது அடிமைப் பட்டுக் கிடந்த பெண் இனத்தை விடுவிக்க வந்த எழுச்சிக் குரலா?
பகவத் கீதை– பதினெட்டாம் அத்தியாயம்
ஓர் அற்புதமான ஞான இலக்கியம் போர்முனையில் உதித்ததை அஞ்ஞானிகள் உணர மாட்டார்கள். ஏனெனில், இது மனத்தின் இருநிலைகளுக்கு இடையிலான போர். அஞ்ஞானிகளின் ஆணவம் இதனை அறிய விடாது. பகவத் கீதையின் இறுதி அத்தியாயம் இது… வில்லேந்திய வீரன் விஜயன் மனக்குழப்பத்தில் ஆழ்ந்தபோது அவனை பலவாற்றானும் தேற்றி, பலவிதமான வாதங்களால் அவன் மயக்கத்தைப் போக்கி, போருக்கு ஆயத்தப்படுத்துகிறான், அவனது அன்புத் தோழன் கண்ணன். இறுதியாக, “எல்லா அறங்களையும் விட்டுவிட்டு என்னையே சரண் புகு. எல்லாப் பாவங்களினின்றும் நான் உன்னை விடுவிக்கிறேன், துயரப்படாதே” என்று நம்பிக்கை அளிக்கிறான்...
பௌத்தம் வளர்த்த தமிழ்
தமிழின் தொன்மையிலும் செழுமையிலும் வைதீக சமயத்தினரும் சமணரும் பெரும் பங்களித்தது போலவே பௌத்தர்களும் பாடுபட்டுள்ளனர். இன்றைய நமது பாரதப் பண்பாடு, இந்த மூன்று சிந்தனைப் பள்ளிகளிடையிலான உரையாடலின் விளைவே.தமிழ் இலக்கியங்களில் பௌத்தர்களின் பங்களிப்பு சமணர்களுடன் ஒப்புநோக்கக் குறைவே எனினும், அவர்களது சமயப் பிரசாரத்தால் மக்களின் வாழ்க்கை முறையில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது.
பகவத் கீதை- பதினேழாம் அத்தியாயம்
அவரவர் குணங்களுக்கேற்ப உண்ணும் உணவும், செய்யும் தவமும், கொடுக்கும் தானமும் மூவகைப்படுகின்றன; அவற்றின் பலன்களும் அவ்வாறே. சாத்விகம், ராஜசம், தாமசம் என்னும் இம்முன்று வகைப்பாட்டில் எவன் எந்தப் பொருளில் நம்பிக்கையுடையவனோ, அந்தப் பொருளே தான் ஆகிறான் என்கிறார் கிருஷ்ண பரமாத்மா...
சமணம் வளர்த்த தமிழ்
அக்காலத்தில் சமணரும் சனாதனத்தின் ஒரு பிரிவாகவே இயங்கினர். வைதீகமும் சமணமும், பௌத்தமும் ஒன்றுக்கொன்று போட்டியிட்டுக்கொண்டு கலைகளையும் கல்வியையும் வளர்த்தன. இந்த மூன்று சிந்தனைகளிடையிலான வாதங்களும் உரையாடல்களுமே பாரத ஞானக் கருவூலங்களாக இன்றும் விளங்குகின்றன.
பகவத் கீதை- பதினாறாம் அத்தியாயம்
கடவுளை அறிந்தர்கள் தானே கடவுளின் இன்னொரு படிமம் (அஹம் பிரம்மாஸ்மி) என்பதை அறிவார்கள். கடவுள் இல்லை என்று இறுமாப்புடன் கூறுவோரோ கடவுளை அறியாத, அசுரத்தன்மை கொண்ட பதர்கள் (அஹம் நாஸ்தி). ஹிரண்யனின் வீழ்ச்சியைக் கண்ட பிறகும் மனமயக்கில் ஆணவத்துடன் இருக்கும் இவர்களுக்கு மீட்பு இல்லை என்கிறான் தேரோட்டியாம் கிருஷ்ணன் இந்த அத்தியாயத்தில்…
பாரதியாரின் நின்னைச் சரணடைந்தேன்: ஒரு விளக்கம்
மகாகவி பாரதியாரின் ‘கண்ணன் பாட்டு’ தொகுதியில் ‘கண்ணம்மா என் குலதெய்வம்’ என்ற தலைப்பில் உள்ளது இந்தப் பாடல் (23-ஆவது பாடல்). 2000ஆம் ஆண்டு வெளிவந்த ‘பாரதி’ திரைப்படத்தில் இளையராஜாவின் சிலிர்ப்பூட்டும் இசையமைப்பில் பாம்பே ஜெயஸ்ரீ & இளையராஜாவின் உள்ளத்தைத் தீண்டும் குரல்களின் வழியாக இந்தப் பாடல் மிகவும் பிரபலமாகி விட்டது. சரளமான வரிகளுடன் எளிமையாக உள்ள இந்தப் பாடலின் தத்துவ ஆழமும் ஆன்மிக உச்சமும் பிரமிப்பூட்டுபவை. ....