ஆண்டுகள் உருண்டோட, எல்லா வகையான இடதுசாரிகள் மீதும் எனக்கு வெறுப்பு வளர்ந்தது. அவர்கள் தீவிரவாத இஸ்லாத்தை வெளிப்படையாக ஆதரிக்கத் தொடங்கிய போது அது ஆழ்ந்த வெறுப்பாக மாறியது. ‘இடதுசாரிக் கட்சிகளின் நிலைப்பாடு எதுவோ அதற்கு நேர் எதிரான நிலைப்பாடுதான் என்னுடையது’ என்றானது.
Tag: திருநின்றவூர் ரவிகுமார்
ரமாபாயும் சவிதா அம்பேத்கரும்: வரலாற்றின் நிழல்கள்!
சுதந்திர இந்தியாவின் மிகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவரான பாபாசாகேப் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு அப்படிப்பட்ட ஒன்று. அவரது அரசியல், அறிவார்ந்த பங்களிப்புகள் பற்றி நிறையவே எழுதப்பட்டுள்ளன. அதேசமயம், அவரது பங்களிப்பை தொடர்ந்து, நீடிக்கச் செய்வதற்காக பங்காற்றிய ரமாபாய் அம்பேத்கர், சவிதா அம்பேத்கர் ஆகியோரின் வாழ்க்கையைப் பற்றி மிகக் குறைவாகவே கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
துணைக்கண்ட முஸ்லிம்கள்: கடன் வாங்கிய அடையாளம்
துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா? அல்லது உம்மா - இஸ்லாமிய அகிலம் - என்ற கானல் கனவைப் பின்தொடரும் காலனிய மனப்பான்மையினால் முட்டுச்சந்தில் மோதி நிற்பதா? என்பதை சிந்தித்துப் பார்க்கும் நேரம் வந்துவிட்டது.
ராகுல் – நேரு – கான்ஷி ராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன?
தலித் மக்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் இருப்பதாகக் காட்டிக்கொள்ள விரும்பி அண்மையில் ராகுல் காந்தி உதிர்த்த முத்து ஒன்று, காங்கிரஸ் கட்சியின் வேடத்தை வெளிப்படுத்தக் கிடைத்த வாய்ப்பாகிவிட்டது. இதோ, பத்திரிகையாளர் திரு. சியாம்லால் யாதவ், காங்கிரசின் பொய்முகத்தை தோலுரிக்கிறார்...
சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு
ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலை இந்தியா ஏன் கண்டிக்கவில்லை? இது சரணாகதியா, சாதுர்யமா? அயலுறவுத் துறையில் மிகுந்த அனுபவம் கொண்ட திரு. சசி தரூர் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் எழுதியுள்ள அற்புதமான கட்டுரை இங்கு நன்றியுடன் தமிழில் வெளியாகிறது...
கீழடி: கிடைத்தது என்ன? நூல் அறிமுகம்
கீழடி தொல்லியல் ஆய்வில் தோற்கவில்லை; தொல்லியல் ஆய்வுதான் கீழடியில் தோற்றுவிட்டது. தமிழக அரசு கீழடியை ஓர் அடையாளப் போர்க்களம் ஆக்கிவிட்டது. கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல் போன்ற பல தளங்கள் ஒரு சங்கடமான உண்மையைக் காட்டுகின்றன. தமிழ் தொல்லியல் ஆய்வில் மண் மௌனமாக இருப்பதால் அது தோல்வி அடையவில்லை. மாறாக மாநில ஆட்சி அதிகாரம் அதன் பேச்சை பாதியிலேயே நிறுத்துகிறது. அதனால்தான் அவை தோல்வி அடைகின்றன.
புதுவையில் பூத்த யோக மலர்- 18
ஆழ்வார்கள், நாயன்மார்கள், வேத ரிஷிகள் என மகான்கள் எல்லோரும் கவிகளாக இருப்பதைப் பார்க்கிறோம். அந்த வகையில், மகரிஷி அரவிந்தரை அறிஞர், விடுதலைப் போராளி, ஆன்மிகவாதி, பேச்சாளர், மகான் என்றெல்லாம் பலரும் பலவிதமாகப் போற்றியுள்ள போதிலும் அவர் ஆரம்பம் முதல் இறுதி வரை தன்னை ஒரு கவிஞர் என்றே முன்னிறுத்தி வந்தார்....
ஈரான் விஷயத்தில் சோனியா அரசை குறை கூறுவது தவறு!
ஈரான் மதத்தலைவர் கமேனி அமெரிக்காவால் கொல்லப்பட்டதை இந்தியா கண்டிக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியும் முஸ்லிம் வாக்குவங்கியை நம்பியுள்ள கட்சிகளும் குற்றம் சாட்டுகின்றன. ஆனால், இந்தியாவை ஒருகாலத்திலும் ஆதரிக்காத கமேனியின் மறைவுக்கு இந்தியா ஏன் அரசுத் தலைவருக்கு நிகரான அஞ்சலியை செலுத்த வேண்டும் என்று யாரும் கேட்பதில்லை. இந்த முரணை இக்கட்டுரையில் சுட்டிக் காட்டுகிறார் திரு. ராம் மாதவ்.
புதுவையில் பூத்த யோக மலர்- 17
“விடுதலைக்குப் பிறகு நம் நாடு பல பிரச்சினைகளைச் சந்திக்கும். அதிலிருந்து மீண்டு வருவோம். தொழில்துறையில், வர்த்தகத்தில், ராணுவத் துறையில், அரசியல் களத்தில் அது மற்ற நாடுகளைப் போல மகத்தான முன்னேற்றத்தை நிகழ்த்தும். ஆனால் இந்த லௌகீக முன்னேற்றத்திற்காக தனது ஆன்மாவை - ஸ்வதர்மத்தை – இழக்கக் கூடாது. இழப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அவ்வாறு இழந்தால் அது நம் நாட்டிற்கு மட்டுமல்ல, உலகிற்கே பெரும் இழப்பாகும். எனவே எப்பாடுபட்டாவது இந்தியாவின் உண்மையான நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும். அதற்கு புறவுலக முன்னேற்றம் மட்டுமல்ல அகத்திலும் (மனத்திலும்) முன்னேற்றமும் வலிமையும் பெறவேண்டும்”
பென் குரியன் சொன்னதும் மோடி செய்ததும்…
இஸ்ரேலின் ரமத்கானில் உள்ள பார் - இலான் பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக இருப்பவர் லாரன் தகன் ஆமோஸ். அண்மையில் இஸ்ரேல் சென்றுவந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தேவை, காரணம், இருதரப்பு உறவுகள் குறித்து மிகவும் நுணுக்கமாக இக்கட்டுரையில் ஆராய்கிறார். ஒரு இஸ்ரேலியரின் பார்வையில் நமது பிரதமரின் விஜயம் விரிகிறது…
புதுவையில் பூத்த யோக மலர்- 16
ஒருவருக்கு ஸ்ரீ அரவிந்தர் எழுதிய கடிதத்தில், “இது நாடுகள் மற்றும் அரசுகள் இடையே நடக்கும் போர் என்று நாம் நினைக்கக் கூடாது. இது தெய்வ சக்திக்கும் அசுர சக்திக்கும் இடையே நடக்கும் போர். நேச நாடுகள் பக்கம் பல்வேறு குறைகள் இருக்கலாம். ஆனால் அவற்றின் வெற்றி மானுட இனத்தின் பரிணாம முன்னேற்றத்திற்கான பாதையை அமைக்கும். அதற்கு எதிரான சக்திகள் வெற்றி பெற்றால் மனித இனம் பின்னடைவைச் சந்திக்கும். பரிணாம வளர்ச்சி தடைபடும்” என்று குறிப்பிட்டிருந்தார்...
புதுவையில் பூத்த யோக மலர்- 15
அரவிந்தரின் அகச் செயல்பாடுகள் பற்றி ஓரிரு குறிப்புகளை டாக்டர் பாரன் பதிந்துள்ளார். “இந்த அறையில் உள்ள சுவர்கள், மேஜை, நாற்காலி, புத்தகங்கள், நீங்கள், டாக்டர் மணிலால் எல்லாவற்றையும் இறைவனாகவே நான் பார்க்கிறேன். கற்பனை அல்லது மாயத் தோற்றங்களாக அல்ல. நிச்சயமாக நான் உணர்கிறேன்” என்று ஸ்ரீ அரவிந்தர் சொல்லியதாக அவர் குறித்துள்ளார்.
புதுவையில் பூத்த யோக மலர்- 14
ஸ்ரீ அரவிந்தருக்கு நேர்ந்த விபத்தின் குறிப்பு என்னவென்று பின்னாளில் கேட்ட போது, “தரிசனத்தைத் தடுக்க ஏற்கனவே எதிர் சக்திகள் பலமுறை முயன்றுள்ளனர். அவற்றின் எதிர்ப்பை பலமுறை வென்று உள்ளேன். அவை என்னை விட்டுவிட்டு அன்னையைத் தாக்க முயற்சித்தன. நான் அவரைக் காப்பாற்ற முனைந்தேன். அவை என்னைத் தாக்காது என்று நினைத்து சற்றே தவறிவிட்டேன்” என்றார்....
புதுவையில் பூத்த யோக மலர்- 13
மனிதன் தன்னைப் பற்றிய விழிப்புணர்வு பெற வேண்டும் என்பது அவரது யோக நெறியின் முதல் படி. பக்தி, கர்ம, ஞான யோகம் என்கின்ற வழக்கமான யோக மார்க்கங்களுக்கு அப்பாற்பட்டது என்று சொல்லப்படும் இதைப் பற்றி, “எனது யோக நெறியில் குறுக்கு வழி இல்லை. ஆரம்ப நிலைகளைத் தவிர்த்து விட்டு கடைசியில் படியில் தாவி ஏற முடியாது. அது ஆபத்தானதும் கூட” என்று ஸ்ரீ அரவிந்தர் தனது ஒருங்கிணைந்த யோகத்தைப் பற்றி கூறியுள்ளார்.
புதுவையில் பூத்த யோக மலர்- 12
“ஸ்ரீ கிருஷ்ணர் உடலில் இறங்கிய நாளிது. கிருஷ்ணரின் வருகை மீ - மனத்தின் இறக்கம். (அதிமனம் = சூப்பர் மைண்ட். மீ - மனம் = ஓவர் மைண்ட்) . இந்த மீ -மனம் அதிமனம் மற்றும் ஆனந்தத்திற்கு பாதை அமைக்கும். ஸ்ரீ கிருஷ்ணர் தான் ஆனந்த மயமானவர். மீ மனத்தைக் கொண்டு அதிமனத்திற்கு அழைத்துச் செல்வார்” என்று ஸ்ரீ அரவிந்தர் ஸித்தி தினத்தைப் பற்றி எழுதியுள்ளார்....