நீண்ட காலம் இந்தியப் பிரதமராக இருந்தது யார் என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் 2014 இல் பிரதமர் மோடியின் அமோக வெற்றியைப் பற்றி எனது தந்தை (அமரர்) பிரணாப் முகர்ஜி என்னிடம் கூறிய சுவாரஸ்யமான விஷயம் ஒன்று நினைவுக்கு வருகிறது. அப்போது அவர் இந்தியாவின் 13வது ஜனாதிபதியாக இருந்தார். வெவ்வேறு அரசியல் கருத்தியல்களைச் சார்ந்தவர்களாக இருந்த போதிலும் அவர்கள் இருவரிடையே சீரிய நல்லுறவு இருந்தது. அதுதான் உண்மையான ஜனநாயகத்தின் அடையாளம்.