சரளா பட் கொலை வழக்கு: தீர்க்க வேண்டிய கணக்கு இது மட்டுமல்ல!

சரளா பட் கொலை வழக்கு ஒரு விதிவிலக்காக, ஒரு குறியீட்டு மதிப்பாக அமைந்து விட்டால், மாற்றம், சீரமைப்பு போன்றவற்றிற்கு வலு குறைந்து விடும். மாறாக விரிவான வகையில் நிர்வாக அமைப்புகளிலும் முறைமைகளிலும் மாற்றம் ஏற்பட்டு மற்ற கொலை வழக்குகளும் விசாரிக்கப்படுமானால், 1990 காஷ்மீர் வன்முறை குறித்த கண்ணோட்டத்தில் அடியோடு மாற்றம் வரும்.

அடுக்களையில் இருந்து அபாயப் படை

அந்த அதிகாரியின் கூற்றுப்படி முஸ்லிம் பெண்களின் தற்கொலைப் படை தயாராகி வருகிறது. அவர்கள் வெடிகுண்டுக் கிடங்குகள், ஆயுதங்கள் நிரம்பிய காவல் நிலையங்களைத் தாக்குவது,  காஷ்மீர் மட்டுமின்றி இந்தியாவெங்கும் பயங்கரவாதிகள் பயணிக்க போக்குவரத்து, வாகன வசதிகளைச் செய்வது, பாதுகாப்பான தங்கும் இடங்களை ஏற்படுத்தித் தருவது, தொலைதொடர்பு சாதனங்களை அவர்களுக்குத் தருவது, ஆதரவாளர்களைத் திரட்டி அவர்களைப் பாதுகாப்பது, புதிதாக ஆதரவாளர்களையும் புரவலர்களையும் உருவாக்குவது ஆகியவற்றை அந்தப் பெண்கள் படையினர் செய்து தருகின்றனர்.