மகாவித்துவான் அவ்வப்போது எழுதிய தனிச் செய்யுட்கள், அன்பரைப் பாராட்டிய செய்யுள்கள், கடிதப் பாடல்கள், சிறப்புப் பாயிரப் பாடல்களில் கிடைத்தவற்றை அனுபந்தமாக பிற்சேர்க்கையில் இணைத்து வழங்கி இருக்கிறார் உ.வே.சா....
Day: January 23, 2023
ஆனந்த மையா ஹரீ
மகாகவி பாரதி தான் எழுதிய ‘நவதந்திரக் கதைகள்’ என்ற நகைச்சுவைக் கதைத் தொடரில், தட்டிக் கொட்டான் செட்டி கதையில், ஒரு கவிராயர் இயற்றுவதாக இந்தப் பாடலை எழுதி இருக்கிறார். தட்டிக் கொட்டான் செட்டியும் ஆரூட ஸ்வாமிகளாக சந்நியாசி வேடம் புனைந்திருக்கும் மானி அய்யனும் உரையாடிக் கொண்டிருக்கையில் அங்கு வருகிறார் கரும்பனூர்க் காத்தவராயக் கவிராயர். அவர் சந்நியாசி வேடம் தரித்திருக்கும் மானி அய்யன் மீது இயற்றிய ஆசுகவியாக இதனைப் புகுத்தி இருக்கிறார் மகாகவி…
தாயகச் செல்வன் (கவிதை)
திரு. கவியரசு கண்ணதாசன் (1927- 1981), மகாகவி பாரதிக்குப் பிறகு வந்த, உத்வேகமூட்டும் தமிழ்க் கவிஞர்; திரைப்பாடல்களுக்கு இலக்கிய மரியாதையை ஏற்படுத்தியவர். சுவாமி விவேகானந்தர் மீதான கவியரசரின் இனிய கவிதை இது…
ஸ்ரீ ரவீந்திரர் திக்விஜயம்
கீர்த்தியடைந்தால், மஹான் ரவீந்திரரைப் போலே அடைய வேண்டும். ஜெர்மனி தேசம் இன்றைக்கும் ஐரோப்பாக் கண்டத்தின் வித்யா ராஜதானியாக விளங்குகிறது. ஜெர்மனியில் நமது பாரத கவீந்திரராகிய ரவீந்திரருக்கு நடத்தப்பட்ட உபசாரங்களெல்லாம் அவருக்குச் சேரமாட்டா. பாரத மாதாவின் பாத கமலங்களுக்கே சேரும்.