நவீன இந்தியாவின் வளர்ச்சி நாயகன்

பிரதமர் நரேந்திர மோடியை மக்களுக்கு அடையாளம் காட்டியதும் வாஜ்பாய்தான். கட்சிப் பதவிகளைத் தவிர, எந்த அரசுப் பதவியும் வகித்திராத நரேந்திர மோடியை 2001-ஆம் ஆண்டு குஜராத் முதல்வராகத் தேர்ந்தெடுத்தது வாஜ்பாய்தான். குஜராத் முதல்வர் பதவியில் சுமார் 13 ஆண்டுகள் முத்திரை பதித்த மோடி, நாட்டின் பிரதமராக வரலாறு படைத்துக் கொண்டிருப்பதற்கும், உலகத் தலைவராக உயர்ந்திருப்பதற்கும் வாஜ்பாய் தான் காரணம்.

கரூர் கோவில் இனாம் நிலங்கள்: என்னதான் பிரச்சினை?

கரூர் மாவட்டத்திலுள்ள 4 திருக்கோவில்களுக்குத் தொடர்புடைய கோவில் இனாம் நிலங்களை பத்திரப்படிவு செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை இந்து அறநிலையத் துறை நீக்கியுள்ளது (10.07.2026) பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் பல விஷயங்கள் தெளிவாக இல்லை என்பது, இது தொடர்பான விமர்சனங்களில் வெளிப்படுகிறது. நமது கேள்வி, தவெக அரசுக்கு ஏனிந்த அவசரம் என்பது தான். இந்தப் பிரச்சினையை சீர்தூக்கி ஆராய உதவும் வகையில், பலதரப்பட்ட விமர்சனங்களையும் இங்கே ஒருங்கே தொகுத்திருக்கிறோம்...

‘ஆபரேஷன் சிந்தூர்’ விடுக்கும் செய்தி

ஆபரேஷன் சிந்தூரின் உலகளாவிய செய்தி என்ன என்று,  ‘தினமணி’ நாளிதழில் வெளியான இக்கட்டுரையில் விளக்குகிறார் பாஜக மகளிரணியின் தேசியத் தலைவி திருமதி வானதி சீனிவாசன்…

பெண்களுக்கு சம நீதி கிடைக்க ‘பொது சிவில் சட்டம்’ அவசியம்

பொது சிவில் சட்டம் இல்லையென்றால் மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ள பெண்களின் முன்னேற்றம் பெரிதும் தடைபடும் என்றும், சமநீதி கிடைக்க வேண்டுமானால் பொது சிவில் சட்டம் அவசியம் என்றும், மதத்துக்கொரு சட்டம் இருந்தால் பெண்களுக்கு சமூக நீதி எப்போதும் எட்டாக்கனியாகி விடும் என்றும் தெரிவித்திருக்கிறார் பாஜகவின் தேசிய மகளிர் அணித் தலைவரும், வழக்கறிஞரும், சட்டமன்ற உறுப்பினருமான திருமதி வானதி சீனிவாசன். ‘இந்து தமிழ் திசை டிஜிட்டல்’ இதழில் அவர் எழுதியுள்ள கட்டுரை இது…