கரூர் மாவட்டத்திலுள்ள 4 திருக்கோவில்களுக்குத் தொடர்புடைய கோவில் இனாம் நிலங்களை பத்திரப்படிவு செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை இந்து அறநிலையத் துறை நீக்கியுள்ளது (10.07.2026) பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் பல விஷயங்கள் தெளிவாக இல்லை என்பது, இது தொடர்பான விமர்சனங்களில் வெளிப்படுகிறது. நமது கேள்வி, தவெக அரசுக்கு ஏனிந்த அவசரம் என்பது தான். இந்தப் பிரச்சினையை சீர்தூக்கி ஆராய உதவும் வகையில், பலதரப்பட்ட விமர்சனங்களையும் இங்கே ஒருங்கே தொகுத்திருக்கிறோம்...