நூறாண்டுகளுக்கு முன்னர், தமிழில் உரைநடை உருவாகிவந்த காலத்தில் அதற்கு இலக்கணம் இயற்றுகிறார் மகாகவி பாரதி. ” “கூடியவரை பேசுவதுபோலவே எழுதுவதுதான் உத்தமமென்பது என்னுடைய கக்ஷி” என்று கூறும் அவர், ”வசன நடை, கம்பர் கவிதைக்குச் சொல்லியது போலவே, தெளிவு, ஒளி, தண்மை, ஒழுக்கம் இவை நான்குமுடையதாக யிருக்க வேண்டும்” என்கிறார். “உள்ளத்திலே தமிழ்ச் சக்தியை நிலைநிறுத்திக் கொண்டால் கை நேரான தமிழ் நடை எழுதும்” என்று நமக்கு வழிகாட்டுகிறார்....
Day: May 1, 2023
மக்கள் அரசு எது?
“ஜனநாயக வடிவிலான அரசு நல்ல பலனைக் கொடுக்குமா என்பது, சமூகத்தில் உள்ள தனி நபர்களின் மனப்பான்மையைப் பொறுத்தது. சமூகத்தில் உள்ள தனி நபர்களின் மனப்பான்மை ஜனநாயகப் பண்புள்ளதாக இருந்தால், ஜனநாயக வடிவிலான அரசு நன்மையைத் தரும் என்று எதிர்பார்க்கலாம்” -டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்