பழந்தமிழ் மன்னர்கள் புகழுக்காக போர் தொடுப்பதை ஒரு கடமையாகவே கொண்டிருந்தனர். அவர்களது புகழாசையால் தமிழ்நாட்டில் தமிழர்தம் குருதியே ஆறாய்ப் பாய்ந்தது என்பதைச் சுட்டிக்காட்டும், பேரா. அ.ச.ஞானசமபந்தன், போரால் அடையும் புகழை விட, வள்ளன்மையால் அடையும் புகழே மிகச் சிறப்பானது என்று இந்த அத்தியாயத்தில் நிறுவுகிறார். கரிகால்பெருவளத்தானை விட வள்ளல் பாரியே புகழ் மிக்கோங்கியவர் என்பது இவர்தம் தீர்ப்பு.
Day: May 20, 2023
வேதாந்தம் தந்த வீரத்துறவி சுவாமி சித்பவானந்தர் – நூல் அறிமுகம்
சுவாமி சித்பவானந்த மகராஜிடம் சன்யாச தீட்சை பெற்ற, திருவண்ணாமலை ஸ்ரீ சாரதா ஆஸ்ரமத்தின் தலைவர் யதீஸ்வரி ஸ்ரீ கிருஷ்ணப்ரியா அம்பா அவர்கள் இந்நூலை எழுதியுள்ளார். 55 அத்தியாயங்களில், 1,728 பக்கங்களில், 300க்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்களுடன் இந்நூல் வெளியாகியுள்ளது. சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றையும் விரிவாக இந்த நூல் விளக்குகிறது.