கடவுளின் பிரதிநிதி

கோயில்களுக்குள் பட்டியலின (தாழ்த்தப்பட்ட) மக்களும் செல்வது இன்று இயல்பாகி இருக்கலாம். ஆனால், அதற்கு வித்திட்டது மகாத்மா காந்தி விடுதலை இயக்கத்தில் ஹரிஜன முன்னேற்றத்தை ஓர் ஆதார விஷயமாகக் கொண்டதுதான். ஆயினும், இதில் உடனே நமது சமூகம் திருந்திவிடவில்லை. அதற்கு பெருத்த போராட்டங்கள் நடத்தப்பட வேண்டி இருந்தது. இறுதியில் சட்டப்படி கோயிலுக்குள் ஹரிஜனங்கள் செல்லும் உரிமை பெற்றனர் என்றால் அதற்கு வழிவகுத்தது அன்றைய காங்கிரஸ் பேரியக்கம் தான் எனில் மிகையில்லை. இதற்கான போராட்டம் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை  என்பதற்கான நிரூபணம் புதுமைப்பித்தன் எழுதி, ‘மணிக்கொடி’யில் (1934) வெளியான இச் சிறுகதை…இலக்கியம் வரலாற்றின் பதிவும் கூட என்பது உண்மைதான்.  

சிவகளிப் பேரலை – 52

இந்த ஸ்லோகத்தில் மேகத்தோடு சிவபெருமானை இணைத்து சிலேடை புனைந்துள்ளார் ஸ்ரீ ஆதிசங்கரர். ...

பாரதியின் தனிப்பாடல் – 4

இயற்கையின் பெருநடனத்தை அதே ஆவேச சொற்பெருக்கில் கொண்டுவந்து இக்கவிதையில் கட்டியமைத்திருக்கிறார் மகாகவி பாரதி...