நல்ல வாசனை நிரம்பிய பக்தனின் மனம், இறைவன் சவாரி செய்கின்ற குதிரையாக, வாகனமாக ஆகிவிடுகிறது. ஆகையால், அப்படிப்பட்ட பக்தனாகிய எனது மனத்தினிலே பயணம் மேற்கொள்ள வாருங்கள் என்று நம்மைப் போன்றவர்களுக்கா எம்பிரானிடம் அழைப்பு விடுகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.
Day: July 29, 2022
மகாவித்துவான் சரித்திரம்-1(4)
ஒரு தலத்திற்கு நண்பர்களுடன் சென்றால் அத்தலத்திலுள்ளார் இவரது கவித்துவத்தை அறிந்து அத்தல விஷயமாகத் தனிப்பாடல்களையோ பிரபந்தங்களையோ இயற்றும் வண்ணம் கேட்டுக்கொள்வார்கள். செய்யுள் இயற்றுவதற்குரிய சமயம் வாய்க்கும்போதெல்லாம் அந்த ஆற்றலை வளர்ச்சியுறச் செய்து கொள்ள வேண்டுமென்னும் அவாவுடையவராக இருந்தமையால், இவர் அவர்களுடைய விருப்பத்தின்படியே பாடல்கள் முதலியன இயற்றுவதுண்டென்பர். ....