வால்ட் விட்மான் ஒரு நகரம் கற்பனை பண்ணுகிறார். அந்த நகரத்தில் ஆணும் பெண்ணும் சபதத்தில் துஞ்சார். அங்கே அடிமையுமில்லை, ஆண்டையுமில்லை. அங்கே, ஸ்தானிகர்களின் முடிவற்ற செருக்கை பொதுஜனம் உடனே சினந்து எதிர்க்கிறது. அங்கே, நகரத்தான் தலை, நகரத்தான் பிரமாணம்; அவனுடைய சம்பளக்காரரே பிரஸிடெண்டு, மேயர், கவர்னர் எல்லாரும். அங்கே குழந்தைகள் தமக்குத் தாமே பதி செய்து கொள்ளவும், தம்மைத் தாமே காத்துக் கொள்ளவும் பயிற்சி பெறுகிறார்கள். அங்கே, பெண்கள் வீதிகளில் ஆண்களைப் போலவே கூட்டங்கூடி ஊர்வலம் வருகிறார்கள். அங்கே, பொதுக் கட்டிடங்களில் பெண்கள் ஆண்களுக்கு நிகரான இடம் பெறுகிறார்கள்.
Day: July 24, 2022
காற்றிடைச் சாளரம் – 14
காற்றை ரசிக்கும் இளம் பாரதி இவர்....காற்றை இக்கவிதையில் கட்டிப் போட முயற்சிக்கிறார்.
சத்திய சோதனை- 3(1-5)
என்னுடைய சோதனைகளின் முடிவான பலன், காலத்தின் கருப்பையில் இருக்கிறது. இந்த விஷயத்தை நான் இங்கே விவாதிப்பதற்கு முக்கியமான நோக்கம் ஒன்று உண்டு. நாகரிக வளர்ச்சியின் வரலாற்றை ஆராயும் ஒருவர், கட்டுப்பாட்டோடு கூடிய வீட்டுப் படிப்பிற்கும், பள்ளிக்கூடப் படிப்பிற்கும் உள்ள வித்தியாசத்தையும், பெற்றோர்கள் தங்களுடைய வாழ்க்கையில் செய்யும் மாறுதல்களுக்கு ஏற்ற வகையில் குழந்தைகளிடையே ஏற்படும் மாறுதல்களையும் ஓரளவு அறிந்துகொள்ளக் கூடும் அல்லவா? இந்த அத்தியாயத்தை எழுதுவதற்கு மற்றொரு காரணமும் உண்டு: சத்தியத்தை நாடும் ஒருவர், சத்தியத்தைக்கொண்டு, தாம் செய்யும் சோதனைகளில் எவ்வளவு தூரம் போக வேண்டியிருக்கிறது என்பதையும் சுதந்திரத்தை நாடுபவரிடமிருந்து அக்கண்டிப்பான சுதந்திர தேவி, என்ன என்ன தியாகங்களை எதிர்பார்க்கிறாள் என்பதையும் காட்டுவதே அக்காரணம் ஆகும். எனக்குச் சுயமரியாதை உணர்ச்சி இல்லாதிருந்திருக்குமானால், மற்றவர்களுக்குக் கிட்டாத கல்வி, என் குழந்தைகளுக்குக் கிடைப்பதைக் கொண்டு நான் திருப்தியடைந்து விடுபவனாக இருந்திருந்தால், அவர்களுக்கு நல்ல இலக்கியக் கல்வியை அளித்திருப்பேன். ஆனால், சுதந்திரத்திலும் சுயமரியாதையிலும் அவர்கள் பெற்றிருக்கும் அனுபவப் படிப்பு, அப்போது அவர்களுக்கு கிடைத்திருக்காது. சுதந்திரம் அல்லது படிப்பு ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டி வரும் போது, படிப்பைவிடச் சுதந்திரமே ஆயிரம் மடங்கு மேலானது என்று யார்தான் கூறமாட்டார்கள்?
சிவகளிப் பேரலை- 70
எங்கும் நிறைந்துள்ள பரம்பொருளாகிய சிவபெருமான் பூஜை செய்வதற்கு எளியவர். அவரை இப்படித்தான் வணங்க வேண்டும் என்றில்லை. பக்தி நம் மனத்தில் இருந்து, அது அவரது நினைப்பில் ஊறியிருந்தால் சடங்கு, சம்பிரதாயங்கள் அவசியமில்லை. அதேநேரத்தில் எங்கும் நிறைந்திருக்கும் அவரை நமது விருப்பத்திற்கேற்ற பலவித ஆசார சடங்குகள் மூலமும் வெளியே அவரை ஆராதிக்கலாம். ....
பாரதியின் தனிப்பாடல்- 22
எட்டயபுரத்தில் பிறந்த மகாகவி பாரதிக்கு அந்த சமஸ்தான மன்னரான வெங்கடேசு ரெட்டப்ப பூபதியுடன் ஆரம்பகாலம் முதலே நல்ல தொடர்பு இருந்தது. தினசரி மன்னரின் கச்சேரியில் ஆஜராகி பத்திரிகை படித்துக் காட்டும் பணியை இளம் வயதில் பாரதி செய்திருக்கிறார். ஆயினும் அவரால், மன்னரின் அதிகாரத் தோரனையுடன் ஒன்றியிருக்க முடியவில்லை. அதனால் தான் ஆசிரியத் தொழிலை நாடி எட்டயபுரத்திலிருந்து அவர் வெளியேறினார். அது மட்டுமல்ல, மன்னரின் படாடோபம், அரண்மனையின் சில்லறை அரசியல், மன்னரின் அடிவருடிகளின் கேளிக்கைகள் ஆகிவற்றை வெறுத்த அவர், அதனை தனது வேடிக்கைக் கதைகளில் பூடகமாக புகுத்தி இருக்கிறார். எனினும் ஆங்கிலேய அரசால் வேட்டையாடப்பட்டு வறுமை சூழ்ந்த நிலையில், தனது குடும்ப நலனுக்காக, மன்னரிடம் உதவி கோரினார் பாரதி. அப்போது (1919) மகாகவி பாரதி எழுதிய விண்ணப்பக் கவிதையே இது... மன்னரிடம் உதவி கேட்கும்போதும்கூட, யாசகமாகக் கேளாமல், புவி ஆளும் மன்னரான எட்டயபுரம் ராஜா கவியரசனான தனக்கு உரிய கௌரவம் செய்ய வேண்டும் என்று கேட்கும் துணிவை இக்கவிதையின் நாம் காணலாம். இக்கவிதையில் இடம்பெற்றுள்ள ‘பொருள் புதிது’ என்ற மந்திரச் சொல்லே நமது தளத்தின் பெயராக அமைந்திருப்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
மகாவித்துவான் சரித்திரம் -1(1)
பண்டைக் காலத்தில் தமிழ்நாட்டில் ஊர்கள்தோறும் பள்ளிக்கூடங்கள் இருந்தன. திண்ணைப் பள்ளிக்கூடங்களென்னும் பெயரால் அவை வழங்கப் பெறும். அங்கே தமிழ் நூல்களைப் படித்து இன்புறுதற்குரிய அறிவு பெறுவதற்குக் கருவிகளாகிய நிகண்டு, நீதி நூல்கள், பிரபந்தங்கள் முதலியன கற்பிக்கப்பட்டன. கணிதத்துக்கு அடிப்படையான எண்சுவடி முதலியவற்றையும் கற்பித்தனர். அவற்றின் உதவியால் மிகச் சிறிய பின்னங்களையும் அமைத்துக் கணக்கிடும் ஆற்றல் மாணாக்கர்களுக்கு உண்டாகும். குடும்பத்துக்கு வேண்டிய வைத்திய முறைகளும், நாள் பார்த்தல், சாதகம் பார்த்தல் முதலிய சோதிட நூல் வழிகளும், ஆலய வழிபாட்டு முறை, குலாசாரங்கள் முதலியனவும், ஞாபக சக்தியை வளர்ப்பதற்குரிய பயிற்சிகளும் கற்பிக்கப்பட்டன. உபாத்தியாயர்கள் மாணவர்களுள் ஒவ்வொருவரையும் தனித்தனியே கவனித்துத் தக்க உணர்ச்சியையடையும்படி செய்தார்கள்......