பாரதியின் தனிப்பாடல்- 13

மகாகவி பாரதி கவிதையின் ஊற்றாய்ப் பிறந்தவர். சென்ற கவிதையில் மனைவியாக கவிதையைக் கொண்டாடிய பாரதி, இக்கவிதையில் ‘மணிப்பெயர்க் காதலி’ என்று கொண்டாடுகிறார். ஆனால், இந்த மாய உலகில் வாழ்வதற்கான போராட்டத்தில் கவிதையாம் காதலியை மறந்தாக வேண்டி வருகிறது. வாழ்க்கைப்படகு தத்தளிக்கும் போது, சாபத்தால் பன்றியாக மாறிய முனிவரின் நிலை ஏற்பட்டு விடுகிறது என்று தன்னிரக்கத்துடன் முனிவரின் கதையை இக்கவிதையில் கூறுகிறார். அத்தகைய “அருந்தவப்பன்றி”யாக வாழ்ந்த சில நாட்களை இக்கவிதையின் வேதனையுடன் ஒப்பிடுகிறார் மகாகவி....

சிவகளிப் பேரலை- 61

இறைவனது அருளாகிய கற்பக விருட்சத்தின் பலன் கிடைக்க, பக்தியே வித்து.  பக்தியை விதைத்துத்தான் முக்தியை அறுவடை செய்ய முடியும். முக்தி என்பது இறப்புக்குப் பின் கிடைக்கும் நிலை மாத்திரம் அல்ல. உயிரோடு இருக்கும்போதே அனைத்துவித துன்பங்களில் இருந்தும் விடுதலை பெறுவதும் முக்திதான். ...

சுவாமி விவேகானந்தரின் மந்திர வார்த்தைகள்

லட்சியத்தில் முன்னேறத் துடிப்பவர்களுக்கும் சாதிக்க நினைப்பவர்களுக்கும் – சேவை செய்ய ஏங்குபவர்களுக்கும் – இறைவனுக்காகவே தங்கள் வாழ்வை அர்ப்பணிப்பவர்களுக்கும் – அறியாமை, சோம்பல், பொறாமை போன்றவற்றை விட்டுச் சிறகடிக்கத் துடிக்கும் அனைவருக்கும் சுவாமிஜியின் சிந்தனைகள் என்றும் உதவத் தயாராக உள்ளன. தனிமனித,  சமுதாய முன்னேற்றத்திற்குமான பல அற்புதக் கருத்துகளை சுவாமிஜி கூறியுள்ளார். அவரது சிந்தனைகளிலிருந்து ஒரு சிலவற்றை மட்டும் தெரிந்து கொண்டாலே- அவை நம்முள் கிளர்ந்தெழச்செய்யும் சக்தியைக் கொண்டே – நாம் பல சாதனைகளை நிகழ்த்திவிடலாம்.