”எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்று தொல்காப்பியம் கூறும். அந்தச் சொல் மந்திரமாக வேண்டும் என்பார் மகாகவி பாரதி. ”நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப” -என்பதும் தொல்காப்பிய நூற்பா. ”நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டிவிடும்” - என்பார் திருவள்ளுவர். அதனையொட்டி, சொல் ஒன்று வேண்டும்,தேவ சக்திகளை நம்முள்ளே நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்” என்ற அறிமுகக் குறிப்புடன் இக்கவிதையை எழுதி இருக்கிறார் பாரதி. உள்ளத்தில் தூய்மையும் உறுதியும் பெருகும்போது வெளிப்படும் சொற்களும் மறைமொழியாகின்றன என்பதே இக்கவிதையின் உட்கிடக்கை....
Day: July 13, 2022
சிவகளிப் பேரலை – 59
கைவல்யம் என்றால் அதற்கிணையாக வேறொன்றும் இல்லாதது என்று பொருள். இறைவனின் திருவடிகளே கைவல்யபதம், அதுவே கைவல்ய சுகத்தை அளிப்பது. கைவல்யம்= மோனப் பெருநிலை= ஒன்றுதல். வேறு நினைப்பு அறுந்துபோய் அதுமாத்திரமே இருத்தல். ....
காற்றிடைச் சாளரம்
உங்கள் வீட்டு குப்பைகளை என் வாசலில் கொட்டுகின்றீர்கள்; அதனை உரமாக்கிக்கொள்ளும் என் வீடு....
இலக்கிய தீபம்- 16
கவிச்சுவை நிரம்பிய தமிழ் நூல்களுள் முத்தொள்ளாயிரமும் ஒன்றாகும். இது புறத்திரட்டு ஆசிரியர் உபகரித்த தமிழ்ச் செல்வம். நூல் முழுவதும் கிடைக்கவில்லை. அழகுடைய செய்யுட்கள் எனப் புறத்திரட்டின் ஆசிரியர் கருதிய 109 செய்யுட்களே இப்போது நமக்கு அகப்படுவன. பழைய இலக்கண உரைகளில் ஒரு சில செய்யுட்கள் முத்தொள்ளாயிரத்தைச் சார்ந்தன என்று கருத இடமுண்டு....