ஸ்திரீகள் புருஷர்களிடம் அன்புடன் இருக்கவேண்டினால், புருஷர் ஸ்திரீகளிடம் அசையாத பக்தி செலுத்த வேண்டும். பக்தியே பக்தியை விளைவிக்கும். நம்மைப்போன்றதொரு ஆத்மா நமக்கு அச்சத்தினாலே அடிமைப்பட்டிருக்கும் என்று நினைப்பவன் அரசனாயினும்,குருவாயினும், புருஷனாயினும் மூடனைத் தவிர வேறில்லை. அவனுடைய நோக்கம் நிறைவேறாது. அச்சத்தினால் மனுஷ்ய ஆத்மா வெளிக்கு அடிமைபோல் நடித்தாலும் உள்ளே துரோகத்தை வைத்துக் கொண்டுதான் இருக்கும். அச்சத்தினால் அன்பை விளைவிக்க முடியாது.
Day: July 10, 2022
பேரூர் பட்டீஸ்வரர் கோயிலும் நாற்றுநடவுத் திருவிழாவும்
உலகத்தில் எங்குமே காண முடியாத முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்ட பொன் ஏர் கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் நாட்டு நடவும் திருவிழாவில் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தின் விவசாயக்குடிகளான மள்ளர், பள்ளர், தேவேந்திரகுல வேளாளர் ஆகியோர் இவ்விழாவில் பேருவையுடன் பங்கேற்கின்றனர்....
சிவகளிப் பேரலை- 56
ஆடலரசனாகிய நடராஜனின், சிவபெருமானின் பெருமையை இந்த ஸ்லோகமும் எடுத்தியம்புகிறது. ...
பாரதியின் தனிப்பாடல்- 8
ஹாலி என்ற வால் நட்சத்திரம் 1910இல் விண்ணில் தோன்றி மறைந்தபோது மகாகவி பாரதி எழுதிய கவிதை இது... 75 ஆண்டுகளுக்கு ஒரு முறை வானில் தோன்றும் வால் நட்சத்திரத்தால் உலக அரசியலில் முக்கியமான தலைவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை. அதை இக்கவிதையில் சுட்டிக் காட்டி இருக்கிறார் பாரதி. எனினும் இந்த வால் மீனின் வருகையால் எண்ணிலாப் புதுமைகள் விளையும் என்ற நம்பிக்கையையும் விளைக்கிறார் கவிஞர். சித்திகள் பலவும், சிறந்திடு ஞானமும் கூடும் என்ற கவிஞரின் நன்னம்பிக்கை அவரது தன்னம்பிக்கையையே பகர்கிறது...
சத்திய சோதனை- 2(21-25)
இந்திய சமூகத்தின் சேவையிலேயே நான் முற்றும் மூழ்கி இருந்தேன் என்றால், அதற்கு முக்கியமான காரணம், ஆத்மானுபூதியைப் பெற வேண்டும் என்பதில் நான் கொண்டிருந்த ஆர்வம் தான். சேவையின் மூலமே ஆண்டவனை அடைய முடியும் என்பதை அறிந்தேன். ஆகையால், சேவையையே என்னுடைய மதம் ஆக்கிக் கொண்டேன். என் அளவில் சேவையென்றால் அது இந்தியாவுக்குச் செய்யும் சேவையே. ஏனெனில் அது தேடாமலேயே எனக்குக் கிட்டியதோடு, அதற்கான மன இசைவும் என்னிடம் இருந்தது. பிரயாணம் செய்ய வேண்டும் என்பதற்காகவும், கத்தியவாரின் சூழ்ச்சிகளிலிருந்து தப்புவதற்காகவும், எனக்குப் பிழைப்பைத் தேடிக் கொள்ளுவதற்காகவுமே நான் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றேன். ஆனால் நான் முன்னால் கூறியதைப் போல, கடவுளைத் தேடுவதில் நான் ஈடுபட்டிருப்பதையும் ஆத்ம ஞானமடையும் முயற்சியில் முனைந்திருப்பதையும் கண்டேன்.