தேசிய ஆன்மா!

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) அகில பாரத பொதுச் செயலாளராக இருந்த உயர்திரு. ஹொ.வெ.சேஷாத்ரி (1926- 2005),  ஹிந்துத்துவ சிந்தனையாளர்களுள் குறிப்பிடத்தக்கவர்.  ‘தேசப் பிரிவினையின் சோக வரலாறு’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். சுவாமி விவேகானந்தர் குறித்த இக்கட்டுரை, ஆங்கிலப் பத்திரிகையான ‘பிளிட்ஸ்’ மாத இதழில் (1993 ஆகஸ்டு) வெளியானது.  பிற்பாடு  ஆர்.எஸ்.எஸ். வார இதழ்  ‘விஜயபாரதத்தில்’  வெளியானது. இதை தமிழில் வழங்கி இருப்பவர்,  திருநின்றவூர் கே.ரவிகுமார்.

தராசு கட்டுரைகள்- 13

தராசுக்கடையை நெடுநாளாக மூடி வைத்துவிட்டேன். விஷயம் பிறருக்கு ஞாபகத்திலிருக்குமோ, மறந்து போயிருக்குமோ என்ற சந்தேகத்தால் எழுத முடியவில்லை. தராசுக்கடை என்பதென்ன? பத்திரிகை படிப்போர் சிலருக்கு ஞாபகம் இருக்கலாம். ஞாபகம் இல்லாவிட்டாலும் பெரிதில்லை. அந்தக் கடையை மாற்றிவிட்டேன்; தராசு என்ற மகுடமிட்டு இனிமேல் எழுதப்படும் வினாவிடைகளில் கதைக்கட்டு சுருங்கும்; சொல் நேர்மைப்படும்....

ஆன்மநேயம் கண்ட அருளாளர்

‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று பாடிய ஆன்மநேய அருளாளர், வடலூர் திருவருட்பிரகாச ராமலிங்க வள்ளலார். கடும் பஞ்சத்தில் தமிழகம் துயருற்றபோது, அன்னசாலையைத் துவங்கி லட்சக் கணக்கான மக்களின் பசிப்பிணி தீர்த்தவர் வள்ளலார். அவரது பிறந்த தின இருநூற்றாண்டு இன்று (அக். 5) தொடங்குகிறது.