வசந்தகால நதிகளிலே…

செய்யுளின் கடைசி வரியின் கடைசிச் சொல்லும், அடுத்த செய்யுளின் முதல் வரியின் முதல் சொல்லும் ஒன்றாக அமைந்திருப்பது ‘அந்தாதி’ எனப்படும். அதாவது அந்தமே ஆதியாகத் தொடர்வது. இந்த யாப்பிலக்கண முறையில் திரைப்படப் பாடலையும் எழுத முடியும் என்று நிரூபித்திருக்கிறார் கவியரசு கண்ணதாசன். ‘மூன்று முடிச்சு’ படத்தில் இடம்பெற்றுள்ள இப்பாடல், திரைப்படத்தின் அதிரடித் திருப்பக் காட்சியை உள்ளடக்கியது. அதற்கேற்றவாறு சொற்பிரயோகத்தையும் கையாண்டிருக்கிறார் கவியரசர்.

சும்மா

பகவத்கீதையின் பத்தாவது அத்தியாயமான விபூதி யோகத்தில் பகவான் கிருஷ்ணர் கூறிய கருத்துகளையே, சுருக்கமாக இக்கதையில் குள்ளச்சாமி வாயிலாகக் குறிப்பிடுகிறார் மகாகவி பாரதி. ”ஹிந்துஸ்தானத்து மகா யோகிகளின் மகிமையால் இந்த தேசம் இன்னும் பிழைத்திருக்கிறது. இனி இந்த மண்ணுலகம் உள்ளவரை பிழைத்திருக்கவும் செய்யும்” என்று அதே குள்ளச்சாமி கூறுவதாக எதிர்கால தீர்க்கதரிசன வாக்கையும் மகாகவி இதில் பதிவு செய்கிறார்...