கொன்றைவேந்தன் (6-10)

எண்கள் எனப்படும் கணிதமும், எழுத்து எனப்படும் இலக்கண, இலக்கியங்களும் கண்களைப்போல முக்கியமானவை; நமது அறிவுக்கண்களாக விளங்குபவை. மேலும், அறிவியலுக்கு ஆதாரமான எண்களும், அறிந்துகொண்டவற்றைப் பிறர் அறியப் பயன்படும் எழுத்துகளும் கண்களைப்போல மதிக்கவும் காப்பாற்றவும் தகுந்தவை என்றும் கொள்ளலாம்.

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல!

மறைந்த (அதாவது மறைந்து போனதாகக் கருதிய) மனைவிக்கு நினைவில்லம் கட்டுகிறான் கணவன். அவனது நினைவில் வந்து பாடுகிறாள் அவனது மனைவி. இதுதான் இதயகமலம் படத்தின் காட்சி அமைப்பு. அதற்கு ஏற்ற உருக்கமான மெல்லிசை திரு. கே.வி.மகாதேவன். கிடைத்த வாய்ப்பில் ஓர் அற்புத வாழ்வியல் கவிதையைப் படைத்திருக்கிறார் கவியரசர். எவ்வளவு அழகிய சொற்கள்? எத்துணை தூய காதல் இந்த வரிகளில்?...

ஜப்பானியக் கவிதை

‘ஹைகூ’ எனப்படும் மூன்றடிக் கவிதை, ஜப்பானிய கவிதை இலக்கியத்தின் உச்சம். சுருக்கமான சொற்களில் பெரும் உருவகத்தை அடக்கிக் காட்டுவதே ஹைகூவின் உத்தி. ஜப்பானிய ஜென் மதத்தின் தாக்கம் இக்கவிதைகளில் உண்டு. இதனை நூறாண்டுகளுக்கு முன்னமே தமிழுக்கு மகாகவி பாரதி அறிமுகப்படுத்தி இருப்பது வியப்பளிக்கிறது. இக்கட்டுரை, ஹைகூ குறித்த புரிதலில்லாமல், மடக்கி மடக்கி ஏதாவது கிறுக்கும் நம் தமிழர்களுக்கு ஒரு பாடம்...