ஸ்வதந்திர கர்ஜனை- 1(5)

தேனீக்களின் கூட்டம் போல சிப்பாய்கள் சுவரேறி உள்ளே குதித்து ஆயுதசாலையைக் கைப்பற்ற அங்கிருந்த ஆங்கில படையினருடன் போரிட்டனர். ஆயுதங்கள் இந்திய சிப்பாய்கள் வசம் போய்விட்டால் தங்கள் உயிர்களுக்கெல்லாம் ஆபத்து என நினைத்து வெள்ளையர்கள் அந்த ஆயுதசாலைக்குத் தீ வைத்துவிட்டனர். அது வெடித்து சிதறியதில் ஏராளமானோர் இந்திய சிப்பாய்கள் உட்பட பலரும் உடல் சிதறி இறந்தனர். ஆங்கில அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான வெள்ளையர்களும் அந்த தீயில் வெந்து மடிந்தனர்.

தராசு கட்டுரைகள்- 14

வக்கீல்:- ஏன் தராசே, பயப்பட்டால் அது கூட ஒரு பாவமா? தராசு:- ஆம். அதுதான் எல்லாப் பாவங்களுக்கும் வேர். அதர்மத்தைக் கண்டு நகைக்காமல் எவன் அதற்கு பயப்படுகிறானோ அந்த நீசன் எல்லாப் பாவங்களும் செய்வான். அவன் விஷப்பூச்சி; அவன் தேள்; அவனை மனித ஜாதியார் விலக்கி வைக்க வேண்டும்....