அட்சய வருஷம் வைகாசி மாதத்திற்குமேல் (1866) பாண்டி நாட்டின்கண் உள்ளனவாகிய சூரைக்குடி (சூரைமாநகர்), கண்டதேவி என்னும் இரண்டு ஸ்தலங்களின் புராணங்கள் வடமொழியிலிருந்து மொழிபெயர்த்துத் தமிழிற் செய்யுள் நடையாக இவராற் செய்யப்பட்டன. அவ்விரண்டு ஸ்தலங்களிலுமுள்ள செல்வர்களுக்கு இவருடைய பெருமையை எடுத்துக் கூறி இவரைக் கொண்டு புராணங்கள் செய்விக்கும்படி தூண்டியவர் கோயிலூர்ச் சிதம்பர ஐயாவும் இவருடைய மாணாக்கராகிய நாராயண செட்டியாரும் ஆவர். ....
Day: October 6, 2022
கடல்
வேதபுரம் கடற்கரையில் துயிலும் கவிக்கு ஒரு கனவு வருகிறது. அதிலும் ஒரு தூக்கம் தூங்குவதாகவே கனவு வருகிறது. அதையும் (கனவுக்குள்ளே ஒரு தூக்கம்) என்று அடைப்புக் குறிக்குள் சொல்லிச் செல்லும் நையாண்டி, மகாகவி பாரதியின் நகைச்சுவை உணர்வும், எந்தக் கதை சொன்னாலும் இறுதியில் இறை நம்பிக்கைக்குக் கொண்டுசெல்லும் லாவகமும், கடல் கதையில் அலை அலையாய் வருகின்றன...