சத்திய சோதனை- 4(31-35)

தாம் கோழையாக இருக்கும் ஓர் உபாத்தியாயர், தம்மிடம் படிக்கும் மாணவர்களை வீரர்களாக்கிவிடவே முடியாது. புலனடக்கம் என்பதே தெரியாத ஓர் ஆசிரியர், புலனடக்கத்தை மாணவர்களுக்குப் போதித்து விடவும் முடியாது. ஆகையால், என்னுடன் இருக்கும் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் நானே எப்பொழுதும் உதாரண பாடமாக இருக்கவேண்டும் என்பதைக் கண்டேன். இவ்விதம் அவர்கள் என் உபாத்தியாயர்களாயினர். அவர்களுக்காகவேனும் நான் நல்லவனாக இருந்து நேர்மையுடன் வாழ வேண்டும் என்பதை நான் கற்றுக்கொண்டேன். டால்ஸ்டாய் பண்ணையில் இருந்தபோது எனக்கு நானே அதிகமாக விதித்துக் கொண்ட கட்டுத்திட்டங்களும் புலனடக்கங்களும், பெரும்பாலும் என் பாதுகாப்பிலிருந்த குழந்தைகளுக்காகவே என்றும் சொல்லலாம்.....

இது 1962 அல்ல, 2022!

இயக்குநர் மணிரத்னம் இயக்கி வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ராஜராஜசோழனை இந்து அடையாளங்களுடன் காட்டி விட்டதாக, தமிழகத்தில் சிலர் வயிறெரிகிறார்கள். அவர்களில் சிலர் ஒருபடி மேலாகச் சென்று இந்து என்ற மதமே இருந்ததில்லை என்று விதண்டாவாதம் செய்கிறார்கள். அவர்கள் வாங்கிய காசுக்குக் கூவுகிறார்கள்; தொலையட்டும். எனினும், விழிப்புணர்வுள்ள சமய அறிஞர்களும், ஹிந்து செயல்வீரர்களும் சமூக ஊடகங்களில் தங்கள் வாதங்களால் இந்த அறிவிலிகளுக்கு சம்மட்டி அடி கொடுத்து, பந்தாடி வருகிறார்கள்; இது 1962 அல்ல, 2022 என்பதை அந்த மண்டூகங்களின் மர மண்டையில் ஆணி அடித்தது போலப் புரிய வைக்கிறார்கள். அவற்றில் இரு பதிவுகள் இங்கே…

ஸ்வதந்திர கர்ஜனை- 1(6)

அரண்மனை வாயிலில் கூடியிருந்த மக்களை ராணி கடைசியாகச் சந்தித்தார். இருள் சூழ்ந்தது. ராணியை இனி பார்க்க முடியுமா என கண்ணீர் சிந்தினர் மக்கள். அப்போது ராணி வீர ராணுவ உடை அணிந்து, தன் வெள்ளைக் குதிரை மீதேறி அமர்ந்து இடையில் அவருடைய புகழ்பெற்ற வாள் அசைய, முதுகில் தனது சுவீகாரக் குமாரன் தாமோதரனைத் துணியால் இருகக் கட்டிவைத்துக் கொண்டு போர்க்களம் புகத் தயார் நிலையில் இருந்தார்.

செய்கை

....தெய்வத்தை நம்பிச் செய்கைப் பொறுப்பில்லாமல் இருப்போரெல்லாம் சோம்பேறிகளென்று நினைப்பது குற்றம். உண்மை அப்படியில்லை. இயற்கையின் வலிமையிலே இயற்கையின் கொள்கைப்படி, இயற்கையே மனிதரின் செயல்களையெல்லாம் நடத்துகிறான். இது மறுக்க முடியாத சத்தியம். இதை உணர்ந்தவன் ஞானி: இந்த ஞானமுண்டாகித் தான் செய்யும் செய்கைகளுக்குத் தான் பொறுப்பில்லையென்றும் தெய்வமே பொறுப்பென்றும் தெரிந்துகொண்டு நடக்கும் பெரியோர் சோம்பலிலே முழுகிக் கிடப்பதில்லை. அவர்கள் அக்னியைப் போலே தொழில் செய்வார்கள். ....

எனது  முற்றத்தில்- 24

தாம்பரம் வர்த்தக பிரமுகர், தேசியவாதி மீனாட்சிசுந்தரம் பல ஆண்டுகளுக்கு முன், அரவிந்தரைப் பற்றி பேசுங்கள் என்று என்னைக் கேட்டுக் கொண்டபோது எனக்கு தூக்கிவாரிப் போட்டது. காரணம், நான் பேச வேண்டிய இடம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம். அங்கு வள்ளல் கருணாநிதி செட்டியார் உபயத்தால் வருடாந்தர ஸ்ரீ அரவிந்தர் நினைவுச் சொற்பொழிவு நடக்கும். அதில்தான் அந்த ஆண்டு நான் போய் பேச வேண்டியிருந்தது. மொட்டை மாடியில் சிறுவர்களை உட்கார வைத்து அரவிந்தர் பற்றி கதை சொல்லலாம். ஒரு பல்கலைக்கழகத்தில் சொற்பொழிவாற்றுவது என்றால், உதறலுக்குக் கேட்கவா வேண்டும்?