கொன்றைவேந்தன் (16-20)

கடுகளவுகூட குறைஇல்லாதவர் என உலகிலே யாருமே இருக்க முடியாது. ஒருகோணத்தில் நிறையாகவோ, சரியாகவோ படுவதுகூட மறுகோணத்தில் குறையாகத் தெரியும். நிறைகுறைகளை அலசுவது முறையானது. ஆயினும் குறைகளை மட்டுமே நோண்டி, நுணுகிப் பார்த்துக் கொண்டிருப்பது முறையன்று. அப்படிப் பார்க்கத் தொடங்கினால் எல்லோருமே குற்றவாளிகளாகத் தென்படுவார்கள். அந்த நினைப்போடு பழகுவோரை யாரும் நெருங்கத் தயங்குவார்கள். அத்தகையோருக்கு நட்பு, சுற்றம் என எதுவும் அமையாது.

மகாவித்துவான் சரித்திரம் – 2(1)

இறைவன் திருவருள் கூட்டினமையால் என் தந்தையாரின் முயற்சியும் எனது விருப்பமும் பயன்பெறும் காலம் வந்து வாய்த்தது. பிரஜோற்பத்தி வருஷம் சித்திரை மாதமுதலில் (1871 ஏப்ரலில்) என்னை உடனழைத்துக்கொண்டு தந்தையார் மாயூரம் சென்று நல்ல நாளொன்றன் பிற்பகலில் பிள்ளையவர்களுடைய வீட்டிற்குப் போனார். அப்பொழுது அவ்வீட்டின் முதற் கட்டில் குற்றாலம் (திருத்துருத்தி) தியாகராச முதலியாரென்பவரும் சிவசின்னந் தரித்த வேறொருவரும் இருந்தார்கள்....

கிச்சடி

பல்வேறு தகவல்களை ஒரே செய்திக் கட்டுரையாக்கி அதற்கு ‘கிச்சடி’ என்று தலைப்பிடும் உத்தியை மகாகவி பாரதி தான் தொடங்கி வைத்திருக்கிறார். அதிலும் இந்தக் கிச்சடி ‘மேற்கோள் கிச்சடி’ என்று அவரே நகைச்சுவையாகச் சொல்கிறார். தமிழ் இதழாளர்கள் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை. ஏனெனில் அவர்கள் கற்க வேண்டியது இன்னமும் நிறைய இருக்கிறது என்று நினவூட்டும் கட்டுரை இது.