மகாவித்துவான் சரித்திரம்- 2(13)

பிள்ளையவர்களுடைய இளம்பிராயத்தில் ஒருவர் பாடங்கேட்க வந்தார். "என்ன படிக்க வேண்டும்?" என்று இவர் அவரைக் கேட்கவே அவர், "இலக்கியம் படிக்க வேண்டும்" என்று கூறினார். அப்பால், "இலக்கணம் படிக்க வேண்டாமா ?" என்று இவர் கேட்டபொழுது, “நன்றாகப் படித்திருக்கிறேன்" என்று அவர் விடை கூறினார்; உடனே இப்புலவர்பிரான் அவரை ஒரு செய்யுள் சொல்லச் செய்து, "இந்தப் பாடலில் எழுவாய், பயனிலை என்ன?" என்று கேட்டார். அவர் நெடுநேரம் யோசித்தும் விளங்காமல் விழித்துக் கொண்டே யிருக்கையில் இவர், "எழுவாய், பயனிலை" என்று சொன்னார்...

பாஞ்சாலி சபதம் – 2.3.9

விகர்ணனின் நல்லுரை கேட்டுச் சினந்த கர்ணன், அவனை ஏசுகிறான். பாஞ்சாலியின் அழகால் மயங்கி இவ்வாறு சிறுவன் பிதற்றுவதாகக் கூறி கண்டிக்கும் கர்ணன்,  “மார்பிலே துணியைத் தாங்கும் வழக்கங் கீழடியார்க் கில்லை” என்று கூறி,பாண்டவர்களின் மேலாடைகளையும் பாஞ்சாலியின் சீலையையும் களையுமாறு  சேவகனுக்கு உத்தரவிடுகிறான். இதைக் கேட்டு திகைத்த பாஞ்சாலி என்ன செய்வதென்று அறியாமல், இரு கரங்களையும் இணைத்து இறுகப் பற்றிக் கொண்டாள் என்கிறார் மகாகவி பாரதி…

விவேகானந்தர்: எண்ணத்தை இயக்கமாகிய ஆன்மிக வழிகாட்டி

முன்னோடி பெண் தொழில் முனைவோரும், நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள எழுத்தாளருமான செல்வி காம்கேர் கே.புவனேஸ்வரி, சென்னையில் உள்ள, மென்பொருள் தயாரிக்கும் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் இயக்குநருமாவார். சுவாமி விவேகானந்தர் குறித்த இவரது கட்டுரை இங்கே…

சர்க்கரை இல்லாத பொங்கலா?

பச்சரிசியை மட்டும் பானையிலிட்டுக் கிண்டினால் பொங்கலாகி விடுமா? சர்க்கரை, பாசிப்பருப்பு, நெய், முந்திரி, திராட்சை, ஏலம் இல்லாமல் பொங்கலா? அப்படித்தான் தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக திராவிட மாடல் ஆட்சியை நடத்துபவரின் ஆதரவாளர்களும், அவரை ஆட்சியில் அமர்த்திய மாற்று மதத்தவர்களும் ஒரு பித்தலாட்டத்தை அரங்கேற்றி வருகிறார்கள். அதாவது தைப் பொங்கல் இந்துக்களின் பண்டிகை அல்லவாம்… தமிழர்களின் பண்டிகையாம்… அதற்காக பொங்கலின் வடிவத்தை மாற்ற - அதன்  ஆன்மிக உணர்வையே மழுங்கடிக்க - முயல்கிறார்கள் மடையர்கள். அவர்களுக்கான பதிலே இக் கட்டுரைகள்…

ஸ்வதந்திர கர்ஜனை- 2(23)

...இதில் சொல்லப்படும் முக்கிய கருத்து ‘காங்கிரஸ் கட்சி தடை செய்யப்படுமானால், காங்கிரஸ்காரர் ஒவ்வொருவரும் தமக்குத் தாமே வழிகாட்டியாகி முடிவுகளை எடுத்துச் செயல்பட வேண்டும்’. இந்த வாசகங்களிலிருந்து ஒவ்வொருவரும் ஊகித்துக் கொள்ள வேண்டிய செய்திகள் ஏராளம். அதன் விளைவுகள் தான் நாட்டில் பிரிட்டிஷாருக்கு எதிரான கடுமையான இறுதிப் போராட்டம்....

பாஞ்சாலி சபதம்- 2.3.8

சினம் கொண்ட பீமன், விஜயனின் பேச்சைக்கேட்டு அமர்ந்தான். அப்போது கௌரவர் பக்கம் இருக்கும் ஒரே நியாயவானான விகர்ணன், ‘தமையன்கள் செய்வது அதர்மம்’ என்று அவையில் எழுந்து சொல்கிறான். “தன்னையிவன் இழந்தடிமை யான பின்னர்த் தாரமெது? வீடேது?” என்று பெண்ணரசு கேட்பது நிட்யாயம் தானே? என்கிறான். அப்போது அவையில் சிறு சலசலப்பு ஏற்படுகிறது...

“கொடுப்பதைக் கொடுத்து விடுங்கள்”

திரு. படுதலம் சுகுமாரன், தமிழகம் அறிந்த எழுத்தாளர்; கார்ட்டூனிஸ்ட்; சிறுகதை ஆசிரியர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…

பாட்டும் நானே… பாவமும் நானே!

ஆணவம் கொண்ட பாடகர் ஒருவருக்கு பாடம் கற்பிக்க, விறகுவெட்டியாய் வந்து பாடி திருவிளையாடல் நிகழ்த்திய சிவனின் பெருமையை உணர்த்தும் பாடல் இது... திரைக்கதைக்கு ஏற்ப கவியரசர் நிகழ்த்தியுள்ள சொற்களின் ஜாலம், திரைப்படத்தின் தரத்தையே உயர்த்துகிறது...

பாஞ்சாலி சபதம்- 2.3.7

அண்ணன் கையை எரித்திடுவோம் என்று கோபத்தில் பேசிய பீமனைக் கண்டு வில்விஜயன் வருந்துகிறான். ‘இதனை நீ மனமாரத் தான் சொன்னாயா?’ என்று கேட்கிறான். மேலும் “தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்; தருமம்மறு படிவெல்லும்” என்ற முக்கால உண்மையை அவையில் சொல்கிறான் அர்ஜுனன். “இன்று கட்டுண்டோம், பொறுத்திருப்போம்; காலம் மாறும்” என்று கர்ஜிக்கிறான்...

அன்பே சிவம்

தஞ்சையில் பாரதி இலக்கியப் பயிலரங்கை நடத்திவந்த அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்களின் விவேகானந்தம் குறித்த இரண்டாவது கட்டுரை இது….

பொருள் புதிது – பொங்கல் மலர்- 2023

பொருள் புதிது பொங்கல் மலர்- 2023-இல் இடம் பெற்றுள்ள படைப்புகளின் பட்டியல்....

செங்கதிர்த்தேவன்!

விஸ்வாமித்திர முனிவரால் இயற்றப்பட்ட இந்த இருவரிக் கவிதை,  ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. வேதங்களில் மிகவும் பழமையான  ரிக் வேதத்தில், மூன்றாவது மண்டலத்தில் (3.62.10)  இடம்பெற்றுள்ளது. உலகின் இயக்கத்துக்கு ஆதாரமான சூரியனைப் பிரார்த்திப்பதே இம்மந்திரத்தின் அடிப்படை....

அவரது கனவுகளை நனவாக்க உழைப்போம்!

2012,  ஜூலை 4-ஆம் தேதி, சுவாமி விவேகானந்தர் நினைவு தினத்தில், குஜராத் மாநில முதல்வராக தற்போதைய பிரதமர் திரு. நரேந்திர மோடி இருந்தபோது தனது இணையதளத்தில் எழுதிய  கட்டுரை இது...

காலம் பிறக்கட்டும்! (கவிதை)

கதிர்கள் தலையை அசைக்கக் காற்றில் கவிதை பரவட்டும்! கனவுகள் கண்முன் நனவாய்க் காணும் காலம் பிறக்கட்டும்!

ஞாயிறு போற்றுதும்:  மோதேரா சூரியன் கோயில்

சௌராஷ்டிராவை (குஜராத் மாநிலத்தின் ஒரு பகுதி) ஆண்ட (சாளுக்கிய) சோலங்கி வம்ச மன்னர் முதலாம் பீமதேவனால் மோதேரா நகரத்தில், பொ.யு. 1026 இல் கட்டி முடிக்கப்பட்டு, சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.... 7 குதிரைகள் இழுத்துச்செல்லும் தேரின் மீது தனது மனைவியர் சஞ்சனா, சாயா சூழ நின்று காட்சியளிக்கும்  சூரிய தேவன் சிற்பங்களின் எழிலில் நம் மனம் லயித்து விடுகிறது.