பாஞ்சாலி சபதம்- 2.3.7

-மகாகவி பாரதி

அண்ணன் கையை எரித்திடுவோம் என்று கோபத்தில் பேசிய பீமனைக் கண்டு வில்விஜயன் வருந்துகிறான்.  ‘இதனை நீ மனமாரத் தான் சொன்னாயா?’ என்று கேட்கிறான். மேலும் “தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்; தருமம்மறு படிவெல்லும்”  என்ற முக்கால உண்மையை அவையில் சொல்கிறான் அர்ஜுனன்.  “இன்று கட்டுண்டோம், பொறுத்திருப்போம்; காலம் மாறும்” என்று கர்ஜிக்கிறான்...

இரண்டாம் பாகம்

2.3. சபதச் சருக்கம்

2.3.7. அர்ஜுனன் சொல்வது

வேறு


எனவீமன் சகதேவ னிடத்தே சொன்னான்.
      இதைக்கேட்டு வில்விஜயன் எதிர்த்துச் சொல்வான்:
‘மனமாரச் சொன்னாயோ? வீமா! என்ன
      வார்த்தை சொன்னாய்? எங்குசொன்னாய்? யாவர் முன்னே?
கனமாருந் துருபதனார் மகளைச் சூதுக்
      களியிலே இழந்திடுதல் குற்ற மென்றாய்;
சினமான தீஅறிவைப் புகைத்த லாலே,
      திரிலோக நாயகனைச் சினந்து சொன்னாய். 78

“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்;
      தருமம்மறு படிவெல்லும்” எனுமியற்கை
மருமத்தை நம்மாலே உலகங் கற்கும்
      வழிதேடி விதிஇந்தச் செய்கை செய்தான்.
கருமத்தை மேன்மேலுங் காண்போம். இன்று
      கட்டுண்டோம், பொறுத்திருப்போம்; காலம் மாறும்
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்.
      தனுஉண்டு காண்டீவம் அதன்பேர்’ என்றான். 79

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s