ஒரு நாள், நடுப்பகல் நேரத்திலே, நான் வேதபுரத்தில் கடற்கரை மணலின் மேல் அலைக்கு எதிரே போய் உட்கார்ந்திருந்தேன். காலை முதலாகவே வானத்தை மேகங்கள் மூடி மந்தாரமாக இருந்தபடியால் மணல் சுடவில்லை. உச்சிக்கு நேரே சூரியன். மேகப் படலத்துக்குட்பட்டு சந்தேகத்தால் மறைக்கப்பட்ட ஞானத்தைப்போல் ஒளி குன்றியிருந்தான். அலைகள் எதிரே மோதின. வடகீழ்த் திசையிலிருந்து சில்லென்ற குளிர்ந்த காற்று வீசிற்று.....
Month: October 2022
ஸ்வதந்திர கர்ஜனை- 1(5)
தேனீக்களின் கூட்டம் போல சிப்பாய்கள் சுவரேறி உள்ளே குதித்து ஆயுதசாலையைக் கைப்பற்ற அங்கிருந்த ஆங்கில படையினருடன் போரிட்டனர். ஆயுதங்கள் இந்திய சிப்பாய்கள் வசம் போய்விட்டால் தங்கள் உயிர்களுக்கெல்லாம் ஆபத்து என நினைத்து வெள்ளையர்கள் அந்த ஆயுதசாலைக்குத் தீ வைத்துவிட்டனர். அது வெடித்து சிதறியதில் ஏராளமானோர் இந்திய சிப்பாய்கள் உட்பட பலரும் உடல் சிதறி இறந்தனர். ஆங்கில அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான வெள்ளையர்களும் அந்த தீயில் வெந்து மடிந்தனர்.
தராசு கட்டுரைகள்- 14
வக்கீல்:- ஏன் தராசே, பயப்பட்டால் அது கூட ஒரு பாவமா? தராசு:- ஆம். அதுதான் எல்லாப் பாவங்களுக்கும் வேர். அதர்மத்தைக் கண்டு நகைக்காமல் எவன் அதற்கு பயப்படுகிறானோ அந்த நீசன் எல்லாப் பாவங்களும் செய்வான். அவன் விஷப்பூச்சி; அவன் தேள்; அவனை மனித ஜாதியார் விலக்கி வைக்க வேண்டும்....
மகாவித்துவான் சரித்திரம்- 1(24அ)
அட்சய வருஷம் வைகாசி மாதத்திற்குமேல் (1866) பாண்டி நாட்டின்கண் உள்ளனவாகிய சூரைக்குடி (சூரைமாநகர்), கண்டதேவி என்னும் இரண்டு ஸ்தலங்களின் புராணங்கள் வடமொழியிலிருந்து மொழிபெயர்த்துத் தமிழிற் செய்யுள் நடையாக இவராற் செய்யப்பட்டன. அவ்விரண்டு ஸ்தலங்களிலுமுள்ள செல்வர்களுக்கு இவருடைய பெருமையை எடுத்துக் கூறி இவரைக் கொண்டு புராணங்கள் செய்விக்கும்படி தூண்டியவர் கோயிலூர்ச் சிதம்பர ஐயாவும் இவருடைய மாணாக்கராகிய நாராயண செட்டியாரும் ஆவர். ....
கடல்
வேதபுரம் கடற்கரையில் துயிலும் கவிக்கு ஒரு கனவு வருகிறது. அதிலும் ஒரு தூக்கம் தூங்குவதாகவே கனவு வருகிறது. அதையும் (கனவுக்குள்ளே ஒரு தூக்கம்) என்று அடைப்புக் குறிக்குள் சொல்லிச் செல்லும் நையாண்டி, மகாகவி பாரதியின் நகைச்சுவை உணர்வும், எந்தக் கதை சொன்னாலும் இறுதியில் இறை நம்பிக்கைக்குக் கொண்டுசெல்லும் லாவகமும், கடல் கதையில் அலை அலையாய் வருகின்றன...
தேசிய ஆன்மா!
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) அகில பாரத பொதுச் செயலாளராக இருந்த உயர்திரு. ஹொ.வெ.சேஷாத்ரி (1926- 2005), ஹிந்துத்துவ சிந்தனையாளர்களுள் குறிப்பிடத்தக்கவர். ‘தேசப் பிரிவினையின் சோக வரலாறு’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். சுவாமி விவேகானந்தர் குறித்த இக்கட்டுரை, ஆங்கிலப் பத்திரிகையான ‘பிளிட்ஸ்’ மாத இதழில் (1993 ஆகஸ்டு) வெளியானது. பிற்பாடு ஆர்.எஸ்.எஸ். வார இதழ் ‘விஜயபாரதத்தில்’ வெளியானது. இதை தமிழில் வழங்கி இருப்பவர், திருநின்றவூர் கே.ரவிகுமார்.
தராசு கட்டுரைகள்- 13
தராசுக்கடையை நெடுநாளாக மூடி வைத்துவிட்டேன். விஷயம் பிறருக்கு ஞாபகத்திலிருக்குமோ, மறந்து போயிருக்குமோ என்ற சந்தேகத்தால் எழுத முடியவில்லை. தராசுக்கடை என்பதென்ன? பத்திரிகை படிப்போர் சிலருக்கு ஞாபகம் இருக்கலாம். ஞாபகம் இல்லாவிட்டாலும் பெரிதில்லை. அந்தக் கடையை மாற்றிவிட்டேன்; தராசு என்ற மகுடமிட்டு இனிமேல் எழுதப்படும் வினாவிடைகளில் கதைக்கட்டு சுருங்கும்; சொல் நேர்மைப்படும்....
ஆன்மநேயம் கண்ட அருளாளர்
‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று பாடிய ஆன்மநேய அருளாளர், வடலூர் திருவருட்பிரகாச ராமலிங்க வள்ளலார். கடும் பஞ்சத்தில் தமிழகம் துயருற்றபோது, அன்னசாலையைத் துவங்கி லட்சக் கணக்கான மக்களின் பசிப்பிணி தீர்த்தவர் வள்ளலார். அவரது பிறந்த தின இருநூற்றாண்டு இன்று (அக். 5) தொடங்குகிறது.
ஸ்வதந்திர கர்ஜனை- 1(4)
கடைசியில் வெள்ளைக்காரர்களுக்கு சுல்தான் செய்த மாபெரும் தவறு ஒன்று கண்ணில் பட்டது. அது, சுல்தான் தனது அயோத்தியை செழுமையாகவும், நல்ல வளத்தோடும் வைத்திருந்த குற்றம் தான். ஒரு இந்திய அரசன் இப்படிப்பட்ட வளம் பொருந்திய நாட்டை, நாம் இங்கு இருக்கும்போது ஆள்வதா? கூடாது. 1856-ஆம் வருஷம் டல்ஹவுசியின் ஒரு கட்டளை மூலம் நவாபின் நிர்வாகம் திருப்திகரமாக இல்லை என்று கூறி நாடு பிடுங்கிக் கொள்ளப்பட்டது.
புதிய கோணங்கி
மகாகவி ஒரு தீர்க்கதரிசி. அவர் தனது அசரீரி போன்ற கவிதையை மிக அழகான கதைக்குள் திணித்து இங்கே முரசறிவித்திருக்கிறார். அந்த முண்டாசுக் கோணங்கி வேறு யாருமல்ல, நமது மகாகவியே தான்.
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்?
கே.பாலசந்தரின் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்களில் முரணான பாலுறவுகள் குறித்த சர்ச்சை இருக்கும். 1975-ல் வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படமும் ஆண்- பெண் இடையிலான உறவுகளின் முரண் தொடர்பானதே. இந்தப் படத்தின் அனைத்து (நான்கு) பாடல்களையும் கவியரசரே எழுதினார்; அனைத்தும் காலத்தை வென்று நிற்கும் கற்பகத் தருக்கள். குறிப்பாக, கதையோட்டத்துக்கு ஏற்றவாறு, இனிய சொற்களால் சமுதாயத்தை முரண்களிலிருருந்து காக்க நினைக்கும் கவியரசரின் பரந்த உள்ளம் இப்பாடல்களில் ஒளிர்கிறது. இங்கு வெளியாகும் பாடலும், படத்தின் கதாநாயகியின் பெண்ணின் தாபமாக, முரண்களை மறுக்கும் ஞானக்குரலாக ஒலிப்பதைக் காணலாம்.
தராசு கட்டுரைகள்- 12
ஆங்கிலேய அரசின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு மகாகவி பாரதி இருக்கிறாரா என்பதை அறிய அவ்வப்போது ஒற்றர்கள் அவரை வேவு பார்ப்பதுண்டு. புதுவையிலிருந்து பிரிட்டிஷ் இந்தியா வந்தபோது கைதான பாரதி - அவரது வழக்கறிஞரின் அறிவுரைப்படி- சில விதிமுறைகளுக்கு உட்படுவதாக வாக்களித்ததால் தான் விடுதலை செய்யப்பட்டார் என்பதை மனதில் இருத்திக் கொண்டால், இக்கட்டுரையில் உள்ள அவல நகைச்சுவையும், தன்னைக் கட்டிப்போட்ட ஆங்கிலேய அரசு மீதான பாரதியின் வெறுப்பும் புலப்படும். அதையும் தராசு கட்டுரையாக வடிக்கும் துணிவு, சுயநலமற்ற எழுத்தாளனுக்கே உரியது.
எனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…
ஆறாம் வகுப்பு படித்தபோது மகாத்மா காந்தியின் ‘சத்திய சோதனை’ துணைப்பாட நூலாக இருந்தது. அதை இரண்டே நாளில் படித்து முடித்துவிட்டேன். தென் ஆப்பிரிக்காவில் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட மோகன்தாஸின் கதையைப் படித்தபோது என்னை அறியாமல் கண்ணீர் உகுத்தேன். காந்தி என்பவர் சாதாரணமானவர் அல்ல என்று மனதில் பதிந்தது. ஆனால், தனது பலவீனங்களையும் அவர் சொல்லிச் செல்வது அந்த வயதில் எனக்கு புரியாத புதிராகவே இருந்தது.
ஒரு தீர்க்கதரிசியின் பார்வையில் இந்திய வரலாறு
-பேரா. சி.ஐ.ஐசக் முன்னுரை: பாரத வர்ஷத்தின் இந்த ஆண்டு ஒரு குறிப்பிடப்பட வேண்டிய ஆண்டாகும். ஒரு தீர்க்கதரிசியின் 150வது ஜயந்தியைக் கொண்டாடும் ஆண்டு. ஒரு துறவி என்பதற்காக சுவாமி விவேகானந்தர் தன் எல்லைகளை ஆன்மிக வட்டத்திற்குள் மட்டும் குறுக்கிக் கொண்டு விடாமல் பருப்பொருள் உலகிலும் தனது உறுதியான கால்தடங்களைப் பதித்தவர். பட்டறிவிலும், அறிவு நெறியிலும் மேலோங்கிய இந்திய மண்ணில் ஆன்மிகத்திலும், பருப்பொருளிலும் ஒருங்கே தன் முத்திரையைப் பதித்தவர் சுவாமி விவேகானந்தர். இந்திய இளைஞர்களின் திறமையில் அவர் தனது உறுதியான நம்பிக்கையைக் … Continue reading ஒரு தீர்க்கதரிசியின் பார்வையில் இந்திய வரலாறு
சத்திய சோதனை- 4(26-30)
அடுத்த ரெயிலில் கஸ்தூரிபாயை அழைத்துச் செல்ல ரெயில்வே ஸ்டேஷனுக்குப் போக ஒரு ரிக்ஷாவை அமர்த்தினேன். அபாய நிலையிலிருந்த அவளை அதில் வைத்துக் கொண்டு புறப்பட்டேன்.கஸ்தூரிபாயை உற்சாகப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அதற்குப் பதிலாக அவள் எனக்கு ஆறுதல் கூறினாள். “எனக்கு ஒன்றும் நேர்ந்துவிடாது. நீங்கள் கவலைப்படாதீர்கள்” என்றாள்.பல நாட்களாக ஆகாரமே இல்லாததனால் அவள் எலும்பும் தோலுமாக இருந்தாள். ஸ்டேஷன் பிளாட்பாரம் மிகப் பெரியது. ரிக்ஷாவைப் பிளாட்பாரத்திற்குள் கொண்டு போக முடியாததனால், அவளை என் கைகளிலேயே தூக்கிக் கொண்டுபோய் ரெயில் வண்டியில் ஏற்றினேன்....