அச்சமில்லை… அச்சமில்லை..!

திரு. இரா.மாது, திருச்சி தேசிய கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய அமரர் திரு. இரா.ராதாகிருஷ்ணன் அவர்களது புதல்வர்;  திருச்சியில் ஆசிரியராகப் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். பட்டிமன்ற மேடைகளை அலக்கரிக்கும் தமிழகம் அறிந்த, இனிய மேடைச்  சொற்பொழிவாளர். சுவாமி விவேகானந்தர் குறித்த இவரது அற்புதமான கட்டுரை இது…

புடவையும் சல்வார் கமீஸும் 

என் உடை, என் உரிமை - என்றெல்லாம் முழங்கும் பெண்ணியக் கூட்டம் ஒன்று நம்மூரில் உண்டு. அவர்களுக்காகவே, நமது நாட்டின் கலாச்சார உடையான புடவைக்கு சகோதர நாட்டில் ஏற்பட்ட சோதனையை இக்கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார், எழுத்தாளர் திரு. திருநின்றவூர் ரவிகுமார். நம் ஊரிலும் காட்சிகள் மாறி இருக்கின்றன; ஆனால் புடவை மீதான வெறுப்பாக இல்லாமல், மேற்கத்திய ஆடை மோகம் அதற்குக் காரணமாக இருக்கிறது. நாகரிகம் என்பதே சுழற்சி தானே?

காந்தாரா: வனக் கடவுளின் முழக்கம்

அண்டை மாநிலத்தில் கன்னடத்தில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம், மிகக் குறுகிய நாட்களில் தேசிய அளவிலும், உலக அளவிலும் பாராட்டப்பட்டு பேசுபொருளாகி இருக்கிறது. பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை என்பது போல, எந்த விளம்பரமும் இல்லாமலே, அதீத ஊடக வெளிச்சம் இல்லாமலே, இதைச் சாதித்திருக்கிறது, ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘காந்தாரா’. தமிழ்த் திரையுலகின் ‘புள்ளிங்கோ’க்கள் பார்க்க வேண்டிய திரைப்படம்; பொன்னியின் செல்வன் எடுப்பதற்கு முன் இயக்குநர் மணிரத்னம் பார்த்திருக்க வேண்டிய திரைப்படம் இது. சமகாலத் திரையுலகில் ஒரு பெரும் திசைமாற்றத்தை வெளிப்படுத்தும் கருவியாக உள்ளதால், இப்படம் குறித்த விமர்சனங்கள் இங்கு வெளியாகின்றன.

ஆனந்தமாய் விளக்கேற்று! (கவிதை)

புதுமைக் கவிஞர் திரு. ஸ்ரீ.பக்தவத்சலம் எழுதிய மரபுக் கவிதை இது. மரபிலிருந்து கிளைப்பது தானே புதுமை?

அக இருள் நீக்கும் ஜோதிடக் கலை

‘விஜயபாரதம்’ வார இதழின் முன்னாள் ஆசிரியரான திரு. குரு.சிவகுமார், ஜோதிட வல்லுநரும் கூட. ஜோதிடத்தின் பெயரால் நடத்தப்படும் மோசடிகளை கடுமையாகக் கண்டிக்கும் இவர், ஜோதிடம், கணிதமும் வானியலும் அனுபவ ஞானமும் இணைந்த ஒரு கலை என்கிறார். இவரது அறிவுரைக் கட்டுரை இது.

வேலையே பிரார்த்தனை, ஈடுபாடே தியானம்!

முன்னோடி பெண் தொழில் முனைவோரும், நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள எழுத்தாளருமான செல்வி காம்கேர் கே.புவனேஸ்வரி, சென்னையில் உள்ள, மென்பொருள் தயாரிக்கும் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் இயக்குநருமாவார். அவர் எழுதி, காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் வெளியிட்டுள்ள ‘இலக்கில் கரையுங்கள்’ என்ற இ-புத்தகத்தில் (EBook) இருந்து சில பகுதிகள் இங்கே நமக்காக...

கம்பன் பாடிய ‘குறள்’

பெங்களூரில் வசிக்கும் தகவல் தொழில்நுட்ப நிபுணரான திரு. ஜடாயு, இலக்கிய ஆர்வலர்; ‘தமிழ் ஹிந்து’ இணையதளத்தின் ஆசிரியர் குழு உறுப்பினர்; கம்பனில் தோய்ந்தவர். வாமனாவதாரம் குறித்த கம்ப ராமாயணச் செய்யுள்களை விளக்கி, தமிழ் ஹிந்து இணையதளத்தில் இவர் எழுதிய அற்புதமான ஆய்வுக் கட்டுரை இங்கே...

மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும்

தமிழகத்தின் சமகால பாரதீய சிந்தனையாளர்களுள் திரு. அரவிந்தன் நீலகண்டன் குறிப்பிடத்தக்கவர்; ஆழி பெரிது, ஹிந்துத்துவம்- ஓர் எளிய அறிமுகம், உடையும் இந்தியா, நம்பக்கூடாத கடவுள்- உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; சமரசமில்லாமல் உண்மைக்குக் குரல் கொடுப்பவர். ‘ஸ்வராஜ்யா’ பத்திரிகையின் ஆசிரியர் குழு உறுப்பினராக இவர், தமிழ் ஹிந்து இணையதளத்தில் எழுதிய கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது...

சுடரொளி தொடரும்! (கவிதை)

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன் எழுதியுள்ள உருவகக் கவிதை இது. சுடரொளி தொடர இறைவனைப் பிரார்த்திப்போம்! சிறு சுடரொளி மட்டுமல்ல, அக்கினிக்குஞ்சு இது.

பொழில்வாய்ச்சியின் எழில் கோயில்

சிற்பக்கலை ஆர்வலரும், கானுயிர் புகைப்படக் கலைஞருமான, பொள்ளாச்சியைச் சார்ந்த திரு. மது.ஜெகதீஷ், கணினிப் பொறியாளரும் கூட. நாடு முழுவதும் உள்ள தொன்மையான ஆலயங்களுக்குச் சென்று அங்குள்ள சிற்பங்களை புகைப்படத்தில் பதிவு செய்யும் அரும்பணி ஆற்றிவரும் இவரது சிற்பக் கட்டுரை இங்கே....

காலந்தோறும் பாரதி

மாணவர்களுக்கு பள்ளிப்பாடம் மட்டும் கற்பிக்காமல், புத்தகத்துக்கு வெளியில் உள்ள ஞானத்தையும் கற்பிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் இயங்கும் அரசுப்  பள்ளி ஆசிரியரான திரு. ஜி.இ.பச்சையப்பன், சமூக ஊடகத்தில் தீவிரமாகச் செயலாற்றுபவர். மகாகவி பாரதி குறித்த இவரது கட்டுரை இங்கே…

சத்திய சோதனை- 4 (42-47)

பொய் வழக்கை நடத்துவோன் என்றோ, சாட்சிகளுக்குச் சொல்லிக் கொடுத்துத் தயார் செய்வோன் என்றோ என்னிடம் எதிர்பார்க்க வேண்டாம் என்று புதிதாக வரும் கட்சிக்காரரிடம் ஆரம்பத்திலேயே கூறிவிடுவேன். இதன் பலனாக, எனக்கு ஒரு பெயர் ஏற்பட்டு என்னிடம் பொய் வழக்கே வருவதில்லை. என்னுடைய கட்சிக்காரர்களில் சிலர், பொய்க் கலப்பில்லாத வழக்குகளை மாத்திரம் என்னிடம் கொண்டுவந்து, சந்தேகத்திற்கு இடமுள்ளதான வழக்குகளுக்கு வேறு வக்கீல்களை அமர்த்திக் கொள்ளுவார்கள்.

கொன்றைவேந்தன் (36-40)

தாயின் பாதங்களே கோபுரங்கள். சீவனைச் சுமக்கும் தாயின் கருவறையே தெய்வம் குடியிருக்கும் கர்ப்பக்ருஹம். கோயில்கள் ஆன்மிகத்தோடு பாரம்பரியக்கலைகளையும் பாதுகாக்கும் பொக்கிஷங்கள். தாயும் அதுபோல நமக்கு ஜீவன் கொடுப்பதோடு பாரம்பரியக் கலைகள், அறிவையும் நமக்கு ஊட்டுகிறார்.

ஸ்வதந்திர கர்ஜனை- 2(1)

ஆங்கிலேய ஆட்சிக்கும் ஆதிக்கத்துக்கும் எதிரான போராட்டம் 18-ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. தமிழ்நாட்டைப் பொறுத்த வரை முதல் எதிர்ப்புக் குரலை எழுப்பியவர் பூலித்தேவன். 1757-இல் இவர் கிழக்கிந்திய கம்பெனியாரை எதிர்த்துப் போராடி உயிரை விட்டார்....

கொன்றைவேந்தன் (31-35)

சேமம் என்றால் பாதுகாவல், காவல், அரண், சிறைச்சாலை, சேமிப்பு, நலம் எனப் பலபொருள் உள்ளது. அபாயங்கள் சூழ்ந்திருக்கும் நிலையில் அரண், கோட்டை அல்லது கட்டுக்காவல் மிகுதியான இடத்தில் சென்று இருக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டபோதிலும் தூக்கத்துக்குரிய நள்ளிரவு நேரத்தில் கவலைகளை மறந்து அல்லது சற்றுநேரம் ஒத்திவைத்துவிட்டு நிம்மதியாக உறங்க வேண்டும். மனதுக்கும், உடலுக்கும் ஓய்வு வழங்கும் உறக்கம் என்பது ஊக்கம் தரும் மருந்து போன்றது. உரியநேரம் உறங்காவிடில் உடலியல், உளவியல் பிரச்னைகள் தோன்றும். கவலைகளை மறக்க தூக்கம் சரியாக இருக்க வேண்டும்.