ஸ்வதேச கீதங்கள் – முன்னுரைகள்

மகாகவி பாரதி தனது தேசபக்திக் கவிதைகளை தொகுத்து ‘ஸ்வதேச கீதங்கள்’ என்ற பெயரில் 1908இல் நூலாக வெளியிட்டார். அதன் இரண்டாம் பாகம் 1909இல் வெளியானது. அந்த நூல்களில் பாரதி எழுதிய முன்னுரைகளே இவை. இவ்விரண்டு பாகங்களும் பாரதியின் சத்குருநாதர் சகோதரி நிவேதிதைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. முதல் பாகத்தில் அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை யாயினும், இரண்டாவது பாகத்தில் ”எனக்கு ஒரு கடிகையிலே, மாதாவினது மெய்த்தொண்டின் தன்மையையும், துறவுப் பெருமையையும், சொல்லாமலுணர்த்திய குருமணியும் பகவான் விவேகானந்தருடைய தர்ம புத்திரியும் ஆகிய ஸ்ரீமதி நிவேதிதா தேவிக்கு இந்நூலை சமர்ப்பிக்கின்றேன்” என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார் மகாகவி பாரதி. நூலின் முகவுரையில் மகாகவியின் தன்னடக்கம் கண்டு உள்ளம் நெகிழ்கிறோம்...

சில வேடிக்கைக் கதைகள்

சீன தேசத்திலிருந்து ஒரு ராஜகுமாரன் அமெரிக்காவுக்குப் போயிருந்தானாம். அப்போது ஒரு பிரபுவின் மனைவி சீனத்து விருந்தாளியுடன் பேசிக் கொண்டிருக்கையிலே அவள்,  ‘உங்களுடைய சீன தேசத்தில் கலியாணமாகும் வரை மணப்பெண் தனது புருஷன் முகத்தைப் பார்ப்பது வழக்கமில்லையாமே! மெய்தானா?’ என்று கேட்டாள். அதற்கு ராஜகுமாரன்: 'உங்கள் தேசத்தில் சில பெண்கள் கலியாணமான பிறகு தனது புருஷன் முகத்தைப் பார்ப்பதில்லையென்று கேள்விப்படுகிறேன். அது மெய்தானா?’ என்றான்....

மகாவித்துவான் சரித்திரம்- 1(17)

விநாயக முதலியார் இவர் செய்த தியாகராசலீலை, உறையூர்ப் புராணம் முதலியவற்றைக் கேட்டு வியந்து, “திருமயிலைக்கு நீங்கள் ஒரு புராணம் செய்ய வேண்டும்” என்று வற்புறுத்திக் கூறி அத்தலத்தின் வடமொழிப் புராணத்தையும் கொடுத்தனர். அக்காலத்தில் திருமயிலைக் கைக்கோளத் தெருவில் இருந்த சாமி முதலியாரென்னும் அன்பர் ஒருவர், “இப்புராணத்தைச் செய்து முடித்தால் விநாயக முதலியார் தக்க ஸம்மானம் செய்வார்; அன்றியும் நாங்களும் எங்களாலியன்றதைச் செய்வோம்” என்று நூறு ரூபாய் செலவுக்குக் கொடுத்தார். அவர்களுடைய வேண்டுகோளின்படி பாயிரமும் நாட்டுப்படலம் நகரப்படலங்கள் மட்டும் செய்யப்பட்டன. அப்பகுதி இப்பொழுது கிடைக்கவில்லை. அதிலுள்ள சில அருமையான பாடல்களை நான் கேட்டிருக்கிறேன். இச்செய்தி நடைபெற்றது இவரது 39-ஆம் பிராயத்திலாகும்....

மனிதன் வேலை செய்யப் பிறந்தான்

உழைப்பே உயர்வு தரும்; சோம்பர் வாழ்வைக் கெடுக்கும். இது தனிநபருக்கு மட்டுமல்ல, நாட்டிற்கும் பொருந்தும். நாட்டின் குடிமக்கள் அனைவரும் சுறுசுறுப்புடன் உழைக்கும்போது, நாடும் தானாக முன்னேறும்- என்கிறார் இதழாளர் பாரதி, இக்கட்டுரையில்....

வேதபுரியில் நிகழ்ந்த கொடுமை

அனைவரையும் அரவணைக்கும் பெருந்தன்மை, அனைத்து மதங்களை நேசிக்கும் பரந்த மனப்பான்மை ஆகியவற்றுடன் கூடவே, சமுதாய வலிமையும் எவர்க்கும் பணியாத வீரமும், உரிமையைக் காக்கும் தன்மானமும், மாறா இறைநம்பிக்கையும் அவசியம் என்பதையே, வேதபுரீஸ்வரர் திருகோயிலின் அழிவு,   சரித்திரச் சாட்சியாக நம்மிடம் சொல்கிறது. ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்று முழங்கும் பிரான்ஸ் நாட்டினர் தான் வேதபுரியின் சிவன் கோயிலை இடித்தவர்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது. ‘வசுதைவ குடும்பகம், யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பவை வலிமையானோர் சொல்ல வேண்டிய வார்த்தைகள் என்பதையும் வேதபுரி நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது....

நமது ஞாபகத்திற்கு

ஆங்கிலேயரிடம் விண்ணப்பித்தால் சுதந்திரம் கிடைக்குமா என்று, இக்கட்டுரையில் கோபமாகவும் கேலியாகவும் வினவுகிறார் மகாகவி பாரதி. “வெகு பிரயாசத்தால் பணம் சம்பாதிக்க வேண்டுமென்று 10 ஆயிரம் மைல் தூரத்திலிருந்து இங்கு வந்திருக்கும் ஆங்கிலேயர்கள் நமக்கு நம்முடைய வேண்டுகோள்களைக் கொடுப்பார்களென்று நினைப்பது வெகு மூடத்தனமாகும்” என்று தனது வாதத்துக்கு ஓர் ஆதார ருசுவையும் முன்வைக்கிறார். ”செவிடர்கள்போல் ஆங்கிலேயர்களுக்கு விண்ணப்பப் பத்திரிகையை அனுப்பாமல், நம்முடைய பிரயத்தனத்தையே தேடுவது மிகவும் சிரேஷ்டமானது” என்கிறார் இறுதியில்.

விடுதலைப் போரில் அரவிந்தர்- 8

....இது சூரத் காங்கிரஸ் மாநாடு பற்றி வெளிப்படையாகத் தெரிந்த விஷயம். ஆனால் அதற்கு பல காலம் கழித்து ஒரு சீடரின் கேள்விக்கு அரவிந்தரின் பதிலில், "திரைக்குப் பின்னால் நடக்கும் உறுதியான செயல்களைப் பற்றி வரலாறு எப்போதும் பதிவு செய்வதில்லை. திரைக்கு முன்னால் வெளிப்படையாக நடக்கும் விஷயங்களை மட்டுமே அது பதிவு செய்கிறது. மிதவாதிகளுடன் சமரசம் செய்து கொள்ளக் கூடாது என்றும், காங்கிரசைப் பிளக்க வேண்டும் என்றும் தொண்டர்களுக்கு உத்தரவிட்டது நான் தான். இந்த முடிவை திலகரைக் கலந்தாலோசிக்காமல் நானே சுயமாக மேற்கொண்டேன். இதை வெகு சிலரே அறிவார்கள்" என்று எழுதியுள்ளார்.....

புதிய வருஷம்

புத்தாண்டுப் பிறப்பு தமிழகத்துக்கு நன்மையாக அமைய இக்கட்டுரையில் பிரார்த்தனை செய்யும் பாரதி, அதே போக்கில், தேசத்தில் மலர்ந்துவரும் சுதந்திரக் கனலையும் சுட்டிக்காட்டி மகிழ்கிறார். “இயற்கையிலே ஒரு விநோதம் என்னவென்றால் மேற்கொண்டு செல்லாதவர்கள் கீழ்ப்பட்டே தீர வேண்டும். மேலும் போகாமல், கீழும் போகாமல் ஒரே நிலைமையில் நிற்பது சாத்தியமில்லை’ என்று சொல்லி இருப்பதன் தாத்பரியம், விடுதலை உணர்வற்ற ஜந்துக்களாக நமது மக்கள் வாழ முடியாது என்பதை உணர்த்தவே.

சம்சாரம் என்பது வீணை

ஒரு காதல் பாட்டிலும் கூட உயர் வாழ்க்கைத் தத்துவத்தை புகுத்த முடியும், கவியரசரால். சம்சாரம் என்னும் வாழ்க்கையில் சந்தோஷமே இனிய ராகம்- சலனங்கள் இல்லாத வரை. அற்புதமான பாடல் வரிகள்.

சென்னை வாசிகளின் நிதானமும் விபின சந்திரபாலரின் சந்நிதானமும்

சென்னையில் பழைய கட்சியாருக்கு (கோகலே கோஷ்டி- நிதானக் கட்சியார்) ஆதரவு குறைந்து புதிய கட்சியாருக்கு (திலகர் கோஷ்டி- தீவிரவாதிகள்) ஆதரவு பெருகியதை பெருமகிழ்ச்சியுடன் செய்தியாகத் தீட்டுகிறார் இதழாளர் பாரதி. ஸர் பட்டம் இனி மரியாதைக்குரியதல்ல என்றும் பகடி செய்கிறார். “ஸர். வி. சி. தேசிகாச்சாரிக்கும் மிஸ்டர் பி. ஆர். சுந்தரய்யருக்கும் ஜனங்கள் சரியான பாடம் சொல்லிக் கொடுத்தார்கள்” என்று எழுதும்போது, பாரதியின் அரசியல் நுண்ணுணர்வும், தீவிரக் கொள்கைப் பிடிமானமும் வெளிப்படுகின்றன...

இது மிஷின் யுகம்

கூலிக்கு வேலை செய்யும் உழைப்பாளிகளின் இயந்திரத்தனமான வாழ்க்கையை சில நிமிட நிகழ்வுகளில் ஒரு சிறுகதையாக இங்கே பதிவு செய்கிறார் புதுமைப்பித்தன். ஓர் உணவகத்தில் நிகழும் சம்பாஷனைகள், காட்சிகளை செதுக்கிவைத்த வரிகளில் படிமம் ஆக்கி இருக்கிறார். பெரிய உபதேசம் இல்லை... படித்து முடிக்கும்போது அந்த ‘சர்வர்’ நமது மனதில் பதிந்து விடுகிறான்....

மகாவித்துவான் சரித்திரம்- 1(16)

புதுச்சேரியில் இயன்றவரையில் தமிழ்ப்பாடங்களைக் கற்றுப் பாடப் படிக்கப் பிரசங்கிக்க ஒருவாறு பயிற்சியுற்றிருந்த செ.சவராயலு நாயகரென்னும் கிறிஸ்தவர் இவர் படிப்பிக்கும் நலத்தைக் கேள்வியுற்று திரிசிரபுரம் வந்து தியாகராச செட்டியார் முதலியோர் முகமாகக் கையுறைகளுடன் இவரைக் கண்டு, வீரமாமுனிவ ரென்னும் புனைப்பெயர் கொண்ட டாக்டர் பெஸ்கியாற் செய்யப் பெற்ற தேம்பாவணி, திருக்காவலூர்க் கலம்பகம் முதலியனவாய தங்கள் சமய நூல்களைப் பாடஞ்சொல்ல வேண்டுமென்று வேண்டிக் கொண்டனர். அதற்கிசைந்த இவர் அவரைப் பரீட்சித்து அவருடைய தமிழ்க் கல்வியின் நிலையை அறிந்து சில கருவி நூல்களை முதலிற் பாடஞ் சொல்லிவிட்டுப் பின்பு அவர் விரும்பிய வண்ணம் தேம்பாவணி முதலியவற்றிற்குப் பொருள் கூறித் தமிழில் நல்ல பயிற்சியை உண்டாக்கி அனுப்பினர். அதன் பின்பு சவராயலு நாயகருக்குக் கிறிஸ்தவர் குழாங்களில் உண்டான மதிப்பும் பெருமையும் அதிகம்.

விடுதலைப் போரில் அரவிந்தர்-7

"தேசத்தின் முன்பு விதி ஒரு பணியை, ஒரு லட்சியத்தை முன்வைக்கும் போது, அந்த ஒரு பணியின், லட்சியத்தின் முன்பு மற்ற எல்லாவற்றையும், அவை எவ்வளவு தான் உயர்ந்ததாக மேன்மையானதாக இருந்தாலும் அவை அனைத்தும் தியாகம் செய்யப்பட வேண்டும். இப்பொழுது நம் தாய்நாட்டிற்கு அதுபோன்றதொரு தருணம் வந்துள்ளது. நாம் அவளுக்குப் பணி செய்ய வேண்டும். நமது எல்லாச் செயல்களும் தேச சேவையை நோக்கியதாகவே இருக்க வேண்டும். நீங்கள் கற்பதாக இருந்தால் அவளுக்காகவே கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் உடல், மனம், ஆன்மாவை அவளது சேவைக்காகத் தயார்படுத்துங்கள். அவளுக்காக வாழ்வது மட்டுமே உங்கள் ஊதியமாகட்டும். நீங்கள் வெளிநாடுகளுக்குச் சென்றால் அவளுக்கு சேவை செய்யவே அறிவைத் திரட்டி வாருங்கள். அவள் வளம் பெற பணிபுரியுங்கள். அவள் மகிழ்ச்சி அடைவதற்காக நீங்கள் கஷ்டப்படுங்கள். இந்த ஒரு அறிவுரையிலேயே எல்லாம் அடங்கி உள்ளது"...

பாரஸீக தேசத்தில் பிரதிநிதி ஆட்சி முறைமை

உலகின் பிற நாடுகள் எவ்வாறு அரசியலில் மாற்றம் அடைந்து வருகின்றன என்பதை போகிற போக்கில் செய்தியாகச் சொல்லி, இந்தியர்களின் மனதில் தேச விடுதலை எண்ணத்தை வளர்க்க, இதழாளர் பாரதி பாடுபட்டதை இச்செய்தி காட்டுகிறது. பாரசீக நாட்டில் மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமைந்ததை எவ்வளவு குதூகலமாக பாரதி கொண்டாடுகிறார், பாருங்கள்!

சத்திய சோதனை- 4(6-10)

மனிதனும் அவனுடைய செயல்களும் வெவ்வேறானவை. நற்செயலைப் பாராட்ட வேண்டும்; தீய செயலைக் கண்டிக்க வேண்டும். செயலைச் செய்யும் மனிதர், நல்லவராயிருப்பினும் தீயவராயிருந்தாலும் செயலின் தன்மைக்கு ஏற்றவாறு மரியாதைக்கும் பரிதாபத்திற்கும் உரியவராகிறார். ‘பாவத்தை வெறுப்பாயாக. ஆனால், பாவம் செய்பவரை வெறுக்காதே’ என்பது உபதேசம். இது புரிந்துகொள்ள எளிதானதாகவே இருந்தாலும், நடைமுறையில் இதை அனுசரிப்பதுதான் மிக அரிதாக இருக்கிறது. இதனாலேயே பகைமை என்ற நஞ்சு உலகத்தில் பரவுகிறது.....