தேவ விகடம்

தேச விடுதலை, சமூக சீர்த்திருத்தம், தமிழ் மீது தணியாத பற்று, பண்பாட்டுச் சீரழிவு குறித்த கவலை, உலக நாடுகளின் வளர்ச்சி - என்றெல்லாம் ஓயாமல் சிந்தித்தும் எழுதியும் வந்த மகாகவி பாரதியின் மனதில் இருந்த குழந்தைத்தனமும் நகைச்சுவை உணர்வும் இக்கதையில் வெளிப்படுகின்றன...

அகல்யை

புராணக் கதைகளை மீள்பார்வை செய்வது இலக்கியத்தில் ஒரு புதிய போக்கு. தமிழ்ச் சிறுகதை உலகின் முடிசூடா மன்னரான புதுமைப் பித்தனும் இதில் விலக்கல்ல. அவரது ‘சாப விமோசனம்’ சிறுகதை, அது வெளிவந்த காலத்தில் (1943) பெரும் விவாதத்தையும் சிந்தனைப் புரட்சியையும் உருவாக்கியது. அக்கதையில், அகலிகையின் பார்வையில் “ஆணுக்கு ஒரு நீதி, பெண்னுக்கு ஒரு நீதியா?” என்று கேட்ட புதுமைப் பித்தன், அதே அகலிகை கதையை மீண்டும் ‘அகல்யை’ என்ற சிறுகதையாகத் தீட்டுகிறார். இதில் அகலிகையின் கணவரான கௌதமனை நியாய உணர்வுள்ள ஆணாகச் சித்தரிக்கிறார். இனி கதைக்குள் செல்லுங்கள்!

தராசு கட்டுரைகள்- 5

தராசு சொல்லலாயிற்று:- "ஸ்ரீமான் காந்தி நல்ல மனுஷர். "அவர் செல்லுகிற சத்ய விரதம், அஹிம்சை. உடைமை மறுத்தல். பயமின்மை- இந்த நான்கும் உத்தம தர்மங்கள்- இவற்றை எல்லோரும் இயன்ற வரை பழகவேண்டும். ஆனால் ஒருவன் என்னை அடிக்கும்போது நான் அவனைத் திரும்பி அடிக்கக் கூடாதென்று சொல்லுதல் பிழை....