மகாவித்துவான் சரித்திரம்- 1(17)

விநாயக முதலியார் இவர் செய்த தியாகராசலீலை, உறையூர்ப் புராணம் முதலியவற்றைக் கேட்டு வியந்து, “திருமயிலைக்கு நீங்கள் ஒரு புராணம் செய்ய வேண்டும்” என்று வற்புறுத்திக் கூறி அத்தலத்தின் வடமொழிப் புராணத்தையும் கொடுத்தனர். அக்காலத்தில் திருமயிலைக் கைக்கோளத் தெருவில் இருந்த சாமி முதலியாரென்னும் அன்பர் ஒருவர், “இப்புராணத்தைச் செய்து முடித்தால் விநாயக முதலியார் தக்க ஸம்மானம் செய்வார்; அன்றியும் நாங்களும் எங்களாலியன்றதைச் செய்வோம்” என்று நூறு ரூபாய் செலவுக்குக் கொடுத்தார். அவர்களுடைய வேண்டுகோளின்படி பாயிரமும் நாட்டுப்படலம் நகரப்படலங்கள் மட்டும் செய்யப்பட்டன. அப்பகுதி இப்பொழுது கிடைக்கவில்லை. அதிலுள்ள சில அருமையான பாடல்களை நான் கேட்டிருக்கிறேன். இச்செய்தி நடைபெற்றது இவரது 39-ஆம் பிராயத்திலாகும்....

மனிதன் வேலை செய்யப் பிறந்தான்

உழைப்பே உயர்வு தரும்; சோம்பர் வாழ்வைக் கெடுக்கும். இது தனிநபருக்கு மட்டுமல்ல, நாட்டிற்கும் பொருந்தும். நாட்டின் குடிமக்கள் அனைவரும் சுறுசுறுப்புடன் உழைக்கும்போது, நாடும் தானாக முன்னேறும்- என்கிறார் இதழாளர் பாரதி, இக்கட்டுரையில்....