எடுத்த எடுப்பிலேயே, தமது மேதாவிலாசத்தால் சிவசக்தி ஸ்வரூபத்தை சிலேடையாகப் புகழ்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். எவ்வாறு சிவ-சக்தி ரூபம், இரண்டற்ற ஒன்றாய் அருள்பாலிக்கிறதோ அதேபோல இந்த முதல் செய்யுள்- சிவன், சக்தி ஆகிய இரு இறையுண்மைகளையும் ஒரே பாட்டால் பாராட்டுகிறது, பணிந்து வணங்குகிறது. பரமசிவன், பராசக்தி ஆகிய இருவருமே கலை வடிவானவர்கள். இருவருமே சந்திர கலையை அதாவது பிறைநிலவைத் தலையில் அணிந்தவர்கள். இதற்கு சங்க இலக்கியத்தில் இருந்தும் சிலப்பதிகாரத்தில் இருந்து மேற்கோள் காட்டலாம்.....
Month: May 2022
கண்ணம்மா மீதான பக்திப்பாடல்கள்
மகாகவி பாரதியின் பக்திப் பாடல்களில் கண்ணம்மா மீதானவை (52- 55) இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றில், “நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி” மிகப் புகழ் பெற்ற பாடல். ‘கண்ணன் பாட்டு’ தொகுப்பிலும் கண்ணம்மா - என்ற காதலி’ என்ற தலைப்பில் ஆறு கவிதைகள் உண்டு என்பது இங்கு கவனிக்க வேண்டிய கருத்து. கடவுளை தனது இணையாக வர்ணிக்கும் பாரதியின் பக்திப் பிரவாஹம், படிக்கப் படிக்க, பாடப் பாட இன்பமளிக்கிறது. “துயர் போயின, போயின துன்பங்கள் நினைப் பொன்னெனக் கொண்ட பொழுதிலே” என்று ஒரு கவிதையில் போற்றும் பாரதி, “எண்ணத் திதிக்குதடா இவள்பொன் னுடலமுதம்!’’ என்று மற்றொரு கவிதையில் விம்முகிறார். இன்னொரு கவிதையில், “எங்கள் கண்ணம்மா நகை புது ரோஜாப்பூ” என்று வரையும் பாரதி, “திங்களை மூடிய பாம்பினைப் போலே செறிகுழல், இவள் நாசி எட் பூ” என்று எழுதுகையில் அகப்பாடலின் முழுத்வணியில் லயித்திருப்பதை உணர முடிகிறது. இறைவனை மனையாளின் அன்புருவாகக் கருதும் தூய ‘அகப்பாடல்கள்’ இவை...
சத்திய சோதனை 1(11-15)
ஒரு சன்னியாசி, எலி உபத்திரவத்தைப் போக்க ஒரு பூனை வளர்த்தார் என்றும் பூனைக்குப் பால் வேண்டுமே என்பதற்காகப் பிறகு ஒரு பசுவும் வளர்த்தார் என்றும், பசுவைக் கவனிக்க ஓர் ஆள் வைத்தார் என்றும், அப்புறம் சன்னியாசி ஒரு குடும்பஸ்தர் ஆகிவிட்டார் என்றும் ஒரு கதை உண்டு. துறவியின் குடும்பம் வளர்ந்ததைப் போல என்னுடைய ஆசைகளும் வளர்ந்தன. மேனாட்டுச் சங்கீதத்தை ரசிக்கத் தெரிந்து கொள்ளுவதற்காக நான் பிடில் வாசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணினேன். ஆகவே, மூன்று பவுன் கொடுத்து பிடில் வாங்கினேன். அதைச் சொல்லிக் கொடுக்க அதைவிட அதிக தொகை கொடுத்தேன். பிரசங்கத் திறமை வர போதிப்பதற்காக மூன்றாவது ஆசிரியர் ஒருவரைப் பிடித்து அவருக்கு ஆரம்பக் கட்டணமாக ஒரு கினி (21 ஷில்லிங்) கொடுத்தேன். இதற்குப் பாடப் புத்தகமாக பெல் எழுதிய ‘ஸ்டான்டார்டு எலக்யூஷனிஸ்ட்’ என்ற புத்தகத்தை அவர் சிபாரிசு செய்தார். அதையும் வாங்கினேன். பிட்டின் பிரசங்கம் ஒன்றைப் படிக்கத் தொடங்கினேன்.....
சிவகளிப் பேரலை – துவக்கம்
பல புராணச் செய்திகளிலும், கதைக் கருத்துகளிலும் உள்ளீடாக விளங்கும் சிவ பரம்பொருளின் பெருமையை ஸ்ரீ ஆதிசங்கரர் அருமையாக 100 ஸ்லோகங்களில் விண்டுரைத்த நூல்தான் சிவானந்த லஹரீ. சிவம் என்றால் மங்களம் என்று பொருள். லஹரீ என்றால் பேரலை என்று பொருள். எங்கும் மங்களத்தையும் ஆனந்தத்தையும் ஏற்படுத்துகின்ற சிவ பக்திப் பிரவாகம்தான் சிவானந்த லஹரீ.
இந்த சிவானந்த லஹரீயிலே மகாகவியாகப் பொழிந்திருக்கிறார் மகான் ஸ்ரீ ஆதிசங்கரர். உவமை, உருவகம், சிலேடை, வஞ்சப்புகழ்ச்சி என பல அணிகலன்கள் இதனை அலங்கரிக்கின்றன. சொல்நயமும், பொருள்நயமும் படிப்போர் மனங்களைப் பரசவப்படுத்தி பரமானந்த நிலையை எய்தச் செய்கின்றன.
இதனை அருந்தமிழில் ‘சிவகளிப் பேரலை’யாக தமிழாக்கம் செய்து, விளக்கத்துடன் தமிழ்க் கவியும் புனைந்து வழங்குகிறார் மூத்த பத்திரிகையாளர் பத்மன்....செல்லம்மாள்
சாமானியனுக்கு வாழ்க்கையே போராட்டம் தான். அன்றாடம் வேலை செய்தால் தான் வயிற்றுக்குச் சோறு என்ற நிலையில் வாழ்வோரின் ஆரோக்கியம் கெட்டால், அவர்களது வாழ்வே நித்தமும் நரகம் தான். அத்தகைய நிலையிலும் வாழ்க்கையை ஒரு பிடிப்புடன் நடத்தும் இரு சாமானிய ஜீவன்களின் கதை இது. 80 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுப் பதிவுகள் ஆங்காங்கே தூலமாய்த் தெரியும் இக்கதையில், வறுமையின் கோரம் மிகத் தெளிவாகவே வெளிப்படுகிறது. புதுமைப்பித்தனின் சிறுகதைகளில் முத்திரைக் கதையாக இக்கதை கொண்டாடப்படுவது ஏன் என்று, இதைப் படிக்கும்போதுதான் உணர முடியும். ஹூஊம்....
இன்றைய இந்தியாவின் முகங்கள் – 5
பிரம்மகுமாரிகள் அமைப்பினர் தரும் பயிற்சிக்கு ராஜயோகப் பயிற்சி என்று பெயர். கல்லூரிப் படிப்பின் துவக்கத்திலிருந்தே அந்தப் பயிற்சியைப் பெற்று பழகி வந்த ஷிவானி வர்மாவின் வாழ்வில் 2004-இல் ஒரு முக்கிய மாற்றம் ஏற்பட்டது. அவர் தன் வாழ்க்கைக்கு ஒரு நோக்கம், தனக்கென ஒரு பணி இருப்பதை உணர்ந்தார். தன்னை ஆன்மாவாகவும், பேரான்மாவாக இறைவனின் இருப்பையும் உணர்ந்தார்.....
கண்ணன் மீதான பக்திப் பாடல்கள்
மகாகவி பாரதியின் பக்திப் பாடல்களில் கண்ணன் மீதான பாடல்கள் (45- 51) இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் ‘காக்கைச் சிறகினிலே நந்தலாலா’ பாடல் மிகப் புகழ் பெற்ற இசைப்பாடல்.
சாந்திக்கு மார்க்கம் – 6
விவசாயம் செய்வோன் தனது நிலத்தில் உழுது, உரம் போட்டு, விதை விதைத்தபொழுது, அவன் தான் செய்யக் கூடியவற்றையெல்லாம் செய்து விட்டானென்றும், தான் பஞ்சபூதங்களை நம்பியிருக்க வேண்டுமென்றும், தான் மகசூல் வருங்காலம் வரையில் பொறுமையாயிருக்க வேண்டுமென்றும், தான் எவ்வளவு ஆத்திரப்பட்டாலும் அது விளைவை எவ்வகையிலும் பாதிக்காதென்றும் அறிவான். அதே மாதிரியாக, மெய்ப்பொருளை உணர்ந்தவன் பலன்களை எதிர்பாராமல் நன்மை, தூய்மை, அன்பு, சாந்தி, என்னும் வித்துக்களை விதைத்துக்கொண்டே போகிறான்; உரிய காலத்தில் பலனைக் கொடுப்பதும் ஆக்கத்திற்கும் கேட்டிற்கும் மூலமாகிய அடக்கியாளும் பெரிய சக்தி இருக்கிறதென்பது அவனுக்குத் தெரியும்....
பக்திப் பாடல்கள் (42 – 44)
மகாகவி பாரதியின் பக்திப் பாடல்களில் 42, 43, 44 கவிதகள் இவை... இவற்றில் ‘கோமதி மகிமை’ முற்றுப்பெறாத கவிதை.
இலக்கிய தீபம் – 3
கூத்தர், பாணர், பொருநர் இவர்களைப் பற்றிய ஆற்றுப்படைச் செய்யுட்களும் புறநானூற்றிற் காணப்படுகின்றன. இவையெல்லாம் உலா வாழ்வு கருதிய (லௌகிகச்) செய்யுட்களாம். பாட்டுடைத் தலைவனிடத்துப் பொருள்பெற்று மீளலும், மீளும்வழியிற் கூத்தர் முதலியோரைக் காணுதலும், அவர்களைத் தலைவனிடம் வழிப்படுத்திப் பரிசில் கொள்ளச்செய்தலும் பண்டைக் காலத்து உலகியற் செய்திகளே. இவ்வாறான லௌகிக நோக்கங்களின் பொருட்டே ஆற்றுப்படைகள் தோன்றியிருத்தல் வேண்டும். வேறு நோக்கங்கள் தொடக்கத்தில் இல்லை. தொல்காப்பியர் வேறு நோக்கங்கள் குறித்து இவ்வகை நூல்கள் பிறக்கக் கூடுமெனக் கருதியவரே யல்லர். இஃது அவரது சூத்திரத்தால் தெளிவாகியுள்ளது. ஆற்றுப்படைகள் பெருவழக்கிலிருந்த காலத்தின் இறுதியில் வேறு நோக்கம் பற்றியும் அவை தோன்றுதல் பொருத்தமாகும் என்ற உணர்ச்சி உண்டாயிருத்தல் வேண்டும்....
முத்துமாரி மீதான பாடல்கள்
மகாகவி பாரதியின் பக்திப் பாடல்களில் முத்துமாரியம்மன் மீதான இரு பாடல்கள் இவை...
சாந்திக்கு மார்க்கம்- 5
மனிதனுடைய ஆத்மா கடவுளிடத்தினின்று பிரிக்கப்பட முடியாதது; கடவுள் தவிர வேறு எஃதாலும் திருப்தியடைய மாட்டாதது; மனிதன் இந்த ஸ்தூல உலகைப் பற்றி அலைந்து கொண்டிருத்தலை நிறுத்தி, நித்தியப் பொருளின் உண்மைத் தன்மையிலுள்ள தனது வீட்டுக்குத் திரும்பிவரும் வரையில், துன்பத்தின் சுமை அவனுடைய ஹிருதயத்தை அமுக்கிக் கொண்டேயிருக்கும்; துக்கத்தின் நிழல்கள் அவனுடைய வழியை இருட்படுத்திக் கொண்டேயிருக்கும்....
காளி மீதான பாடல்கள் – 2
மகாகவி பாரதியின் பக்திப் பாடல்களில் காளி மீதான அடுத்த 5 கவிதைகள் இவை (35-39)...
இலக்கிய தீபம் – 2
பத்துப்பாட்டு என்பது மிகப் பழைய பத்துச்செய்யுட்கள் அடங்கிய ஒரு தொகுதி நூலின் பெயர். இப்பெயர் முதன்முதலில் மயிலைநாதருரையில் (நன்னூல் 387) தரப்பட்டு உளது. தொல் காப்பியத்திற்கு உரையிட்ட பேராசிரியர் இத்தொகுதியைப் 'பாட்டு' என்றே வழங்கினர் (செய்யுளியல் 50, 80, உரை). பத்துப்பாட்டுள் மிகச் சிறியது முல்லைப்பாட்டு; இதன் கண் 103 அடிகள் உள்ளன. மிகப் பெரியது மதுரைக் காஞ்சி; இதன் கண் 782 அடிகள் உள்ளன....இந்நூல்கள் ஒருகாலத்தன்றிப் பல்வேறு காலத்திற் பல்வேறு இடத்தினராகிய பல புலவர்களால் இயற்றப்பட்டனவாம். இதுபற்றி ஐயுறுவாரில்லை; இது குறித்து ஆராய்வதும் வேண்டற்பாலதன்று. எனவே காலம் பற்றி எம்முறையில் இவை தோன்றின என்பதை அறுதியிடுவதே இங்கு நோக்கம்.
காளி மீதான பாடல்கள்-1
மகாகவி பாரதியின் பக்திப் பாடல்களில் சக்திக்கு அடுத்து, காளி மீதான கவிதைகள் மிகுதி. அவரது 30-34 பக்திப் பாடல்கள் இங்கே...