மகாகவி பாரதி சூரியக் கடவுள் மீது அளப்பரிய பக்தி கொண்டிருந்தவர். அவரது இந்தப் பற்றுதலுக்கு சூரியன் மீதான வேதப் பாடல்களும் காரணமாக இருக்கலாம். சூரியனைப் போற்றும் காயத்ரி மந்திரத்தை தமிழில் வழங்கியவர்; வசன கவிதைகளில் ஞாயிற்றின் புகழை ஓங்கி ஒலித்தவர் பாரதி. அவரது பக்திப் பாடல்களில் மூன்று (69, 70,71) சூரிய வணக்கப் பாடல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன...
Day: May 27, 2022
சிவகளிப் பேரலை- 12
பக்தி செய்வதற்கு எது உகந்த இடம்? குகையா? வீடா? இல்லையேல் காடா? மலையா? எது சிறந்த இடம்? ஆழமான நீர்நிலையில் நின்று கொண்டோ, தன்னைச் சுற்றி தீயை வளர்த்துக்கொண்டோ கடுமையாகத் தவம் புரிவது சிறந்ததா? இல்லையில்லை. பக்தி இல்லாமல் இவ்வாறு செய்வதால் எந்தப் பயனுமில்லை.
என் ஈரோடு யாத்திரை
ஈரோட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன். அது கொங்கு நாடு. ஆனால், அதற்கும் தென்பாண்டி நாட்டிற்கும் யாதொரு வேற்றுமையும் தென்படவில்லை. ஸ்வதேசீய நிகழ்ச்சி தோன்றிய காலம் முதலாக தமிழகத்தின் உட்பகுதிகளுக்கிடையே உள்ள அகவேற்றுமைகள் குறைவுபட்ட காரணத்தாலே புற வேற்றுமைகளும் குறைவுபடுகின்றன. இதற்குச் ‘சுதேசமித்திரன்’ முதலிய பத்திரிகைகள் பெரிதும் உதவி புரிந்தன என்பது நிச்சயம்.
சுதேசமித்திரனில் (1921) மகாகவி பாரதி எழுதிய இறுதிக்காலக் கட்டுரை இது...