தொழில் புரட்சியைப் போல யோகா ஒரு உலகப் புரட்சியை உருவாக்கி வருகிறது. உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம், இரண்டின் ஒருங்கிணைப்பு, அமைதி போன்றவற்றை உருவாக்கி வருகிறது. இதன்மூலம் பொருட்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட இயற்பியல் உலகு என்பது மாறி உணர்வை (Conscious) அடிப்படையாகக் கொண்ட பார்வை வளர்ந்து வருகிறது. இதற்கு டாக்டர் நாகேந்திராவின் பங்களிப்பு முக்கியமானது.
Day: May 8, 2022
சத்திய சோதனை 1(6-10)
என் குற்றத்தை ஒரு கடிதத்தில் எழுதி என் தந்தையிடம் கொடுத்து, மன்னிப்புக் கேட்பதென்று கடைசியாகத் தீர்மானித்தேன். ஒரு துண்டுக் காகிதத்தில் அதை எழுதி நானே என் தந்தையாரிடம் கொடுத்தேன். அக்குறிப்பில் நான் என் குற்றத்தை ஒப்புக் கொண்டிருந்ததோடு அதற்குக் தக்க தண்டனையை எனக்குக் கொடுக்குமாறும் கேட்டிருந்தேன். என் குற்றத்திற்காக அவர் தம்மையே தண்டித்துக் கொள்ள வேண்டாம் என்றும் முடிவில் அவரைக் கேட்டுக் கொண்டிருந்தேன். இனித் திருடுவது இல்லை என்றும் நான் பிரதிக்ஞை செய்து கொண்டேன்..... அவர் முழுவதையும் படித்தார். முத்துத் துளிகள் போல் அவர் கன்னங்களில் கண்ணீர் வழிந்து காகிதத்தை நனைத்தது. ஒரு கணம் கண்ணை மூடிக்கொண்டு சிந்தித்தார். பிறகு கடிதத்தைக் கிழித்தெறிந்தார். அக்கடிதத்தைப் படிப்பதற்காக எழுந்து உட்கார்ந்தவர், திரும்பவும் படுத்துக் கொண்டார். நானும் கதறி அழுதேன். என் தந்தையார் அனுபவித்த வேதனையை நான் காண முடிந்தது. நான் ஓவியக்காரனாக இருந்தால் அக்காட்சி முழுவதையும் இன்று சித்திரமாக எழுதிவிட முடியும். அது இப்பொழுதும் மனத்தில் தெளிவாக இருந்து வருகிறது....
வந்தேமாதரம்
மகாகவி பாரதி, ‘வந்தேமாதரம்’ கீதத்தின் தமிழ் மொழிபெயர்ப்புக்கு எழுதிய முன்னுரை இது...
எனது முற்றத்தில்… 2
எல்லா மரம் செடி கொடிகளையும் எல்லோருக்கும் அடையாளம் காண முடிகிறதா என்ன? ராமாயணத்தில் அனுமனுக்கும்தான் தெரியவில்லை. அதனால்தானே சஞ்சீவி பர்வதத்தையே தூக்கிக்கொண்டு போனார்? ஊர்ப்புறங்களில் தடுக்கி விழுந்தால் எருக்கஞ்செடி, தும்பை, குப்பைமேனி தலைகாட்டும். எல்லாம் மருந்துக்கு ஆகும். மருந்துக்கு ஆகாதது என்று ஏதாவது உண்டா என்ன? இல்லை என்கிறது "நாஸ்தி மூலம் அனவ்ஷதம்" (ஔடதத்துக்கு ஆகாத வேர் இல்லை) என்ற பழைய சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்று. தகுதி இல்லாதவர் என்று யாரும் கிடையாது என்ற கருத்தை வலியுறுத்த வந்த ஸ்லோகம் அது....
சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்
மகாகவி பாரதியின் சக்தி மீதான இப்பாடல், அவரது ஆத்ம சமர்ப்பணத்தை வெளிப்படுத்துகிறது. இந்த உடலும் உயிரும் வாழ்வும் சக்தியின் லீலை என்ற கவிஞரின் சிந்தனை சொற்பெருக்கில் தெறிக்கிறது...