பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளை, சென்ற நூற்றாண்டில் தமிழ் வளர்த்த பெருந்தகை; துலாக்கோல் நிலை நின்று, விருப்பச் சார்பின்றி, தமிழ் இலக்கியங்களின் காலம் குறித்த முறையான ஆய்வுகளை வெளியிட்டவர்; தமிழ் இலக்கிய வரலாற்றாய்விலும், பதிப்புப் பணியிலும் முன்னோடி. இலக்கியத் திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ்ப் பேரகராதியை உருவாக்கிய மேதை, கல்வியாளர் எனப் பன்முகம் கொண்ட, தமிழன்னையின் தவப்புதல்வர்களுள் ஒருவர். அவரது ‘இலக்கிய தீபம்’ என்ற அற்புதமான ஆய்வு நூல் இங்கு தொடர்ச்சியான அத்தியாயங்களாக வெளியாகிறது...
Day: May 10, 2022
ஸ்ரீ அரவிந்தரின் எரிக்கன்- நூல் அறிமுகம்
அரவிந்தர் எழுதிய ‘எரிக்’ என்ற கவிதை நாடகம், ஸ்காண்டிநேவிய நாட்டுக் கதையின் செம்மை வடிவம். அவரது ஆங்கில நடை, ஆங்கிலேயர்களே வியந்த தனித்தன்மை கொண்டதாகப் போற்றப்படுகிறது. இதன் மூலம் எதுவென்று அவர் குறிப்பிடவில்லை. எனினும், நார்வே தேச மன்னன் எரிக் பற்றிய சித்திரம் இதுவென்பது நாடகத்திலிருந்து தெரிய வருகிறது.
இதனை, அழகுத் தமிழில், இனிய யாப்புச் செய்யுள்களில் அரவிந்தரின் மூலத்துக்கு தகுந்த வகையில், ‘எரிக்கன்’ என்ற கவிதை நாடகம் ஆக்கி இருக்கிறார் வங்கி மேலாளராகப் பணிபுரிந்த சிவ.சூரியநாராயணன். அரவிந்தரின் ஆங்கில நடையில் தனது மனதைப் பறிகொடுத்த எழுத்தாளர், அதனை உள்வாங்கி தமிழுக்கேற்ற செம்மாந்த நடையிலும், நமது பண்பாட்டுக்கேற்ற இன்சொற்களிலும், மூலமா, மொழிபெயர்ப்பா என்று புலப்படாதவாறு தமிழாக்கி இருக்கிறார்.
சக்தி மீதான பாடல்கள்- 3
மகாவி பாரதியின் பக்திப் பாடல்களில் சக்தி குறித்த மூன்று கவிதைகள் (27, 28, 29) இவை...