எனது  முற்றத்தில்…  3

‘எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்’ என்று பாரதி பாடிவிட்டுப் போயிருக்கலாம்.  பாரதி சொல்வது சரி என்று  அத்தாட்சி தருபவர் யார் தெரியுமா,  தமிழக சலவைத் தொழிலாளர்.  பல்வேறு தொழில்கள் செய்வோர் ஆயுத பூஜை அன்று தங்கள் தொழில் கருவியை பூஜித்து வருகிறார்கள்.  சலவைத் தொழில் செய்பவர்?  ஆற்றங்கரை படித்துறை தான் அவரது தொழில் கருவி. எனவே  அவர் வைக்கும் பொங்கல் ’துறைப் பொங்கல்’ என்கிறது தமிழ் லெக்சிகன் என்ற பேரகராதி...

சிவகளிப் பேரலை – 4

விஷ்ணுவும் தாமரையில் வீற்றிருக்கும் பிரும்மாவும் சிவபெருமானுக்கு மிக அருகிலே இருந்தும்கூட அவர்களாலும் அறியப்படாத திருவடித் தாமரைகள் சிவபெருமானுடையவை. அத்தகு சிறப்பு வாய்ந்த சிவபெருமானின் திருவடிகளை மனத்தால் நினைந்து தொழுவதையே யான் வேண்டுவேன். வேறு தெய்வங்களை நினைத்தும் பாரேன் என்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.

கலைமகள் மீதான பாடல்கள்

மகாகவி பாரதியில் பக்திப் பாடல்களில் இரு கவிதைகள் (61, 62) கலைமகள் மீதானவை... “ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்     நல்ல பாரத நாட்டிடை வந்தீர்’’ என்று அழைத்து நமக்கு பாரதி இடும் கட்டளைகள் அவரது கல்வி மீதான தாபத்தைக் காட்டுகின்றன...