ஜாதி-II

ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ‘ஐம்பெருங் கட்டுரைகள்’ என்ற நூலிலுள்ள ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கமே இது.

சந்திரிகை

சுதேசமித்திரன் இதழில் (1906) வெளியான மகாகவி பாரதியின் ஆரம்பக்காலக் கவிதைகளுள் ஒன்று இது...

ஒரு பாறையின் மகத்தான சரித்திரம்

தினமணி நாளிதழில் பணியாற்றும் பத்திரிகையாளர் திரு. வ.மு.முரளி சுவாமி விவேகானந்தர் குறித்து எழுதிய கட்டுரை இது….

ஸ்வதந்திர கர்ஜனை- 2(25)

“நாட்டுக்கு நமது சின்ன அண்ணாமலை செய்திருக்கும் சேவை மகத்தானது. அவருடைய பேச்சைக் கேட்டுப் பல இளைஞர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டது எனக்குத் தெரியும். சின்ன அண்ணாமலையின் தலைக்கு விலை வைத்தது ஆங்கில அரசாங்கம். ஒரு மாதம் வெள்ளைக்கார அரசாங்கத்தை ஸ்தம்பிக்க வைத்தவர் சின்ன அண்ணாமலை”.  -இப்படிச் சொன்னவர் பெருந்தலைவர் காமராஜ்.

யான்

முற்றுப் பெறாததாகக் காட்சியளிக்கும் இக்கவிதை, பாரதியின் கவிதைத் தொகுப்புகளில் காணப் பெறாதாது. தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதை இது...

விவேகானந்தப் பேரொளி (கவிதை)

தவத்திரு குன்றக்குடி அடிகளார் (1925- 1995) என்று அழைக்கப்பட்ட அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், குன்றக்குடி திருமடத்தின் 45வது குருமகா சந்நிதானமாக விளங்கியவர். ‘அருள்நெறித் திருக்கூட்டம்’ என்ற அமைப்பை நிறுவி ஆன்மிகப் பயிர் வளர்த்தவர்; தமிழ் ஆர்வலர்; 25-க்கு மேற்பட்ட நூல்களை எழுதி உள்ளார். சுவாமி விவேகானந்தர் மீதான அடிகளாரின் கவிதை இது…

பாரதியும் பாரதிதாசனும்- 4ஆ

கவியரசர் தொடக்கத்திலிருந்து இறுதி வரையில் தூய்மையானதும், ஆழமானதும், பிறர் எளிதில் கண்டு கொள்ள முடியாததும் ஆகிய கடவுட் பற்றுக் கொண்டவராக இருந்திருக்கிறார் என்பதை அறுதியிட்டுக் கூறலாம். புரட்சிக் கவிஞரை 'நாத்திகர்' என்று சொல்வது எவ்வளவு தூரம் உண்மை என்ற வாதத்திற்கு இந்த அளவுடன் ஒருவாறாக ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டு, இனி அவருடைய கவிதைகளில் புகுந்து மன நிலையைக் காண முற்படலாம்.....

செட்டிமக்கள் குலவிளக்கு

செட்டிநாடு பகுதியில் உள்ள கானாடுகாத்தானில் வாழ்ந்த திரு. வை.சு.சண்முகன் செட்டியார், மகாகவி பாரதி மீது மிகுந்த பக்தி கொண்டவர். இவரதுஅழைப்பை ஏற்றுத்தான் காரைக்குடியில் செயல்பட்ட ஹிந்து மதாபிமான சங்கத்தாரின் நிகழ்ச்சியில் மகாகவி பாரதி பங்கேற்றார். அங்கு 9.11.1919 இல் சொற்பொழிவு நிகழ்த்தினார் மகாகவி பாரதி. தற்போது நமக்குக் கிடைக்கும் பாரதியின் கருப்பு-வெள்ளைப் புகைப்படங்கள், அப்போது அங்கு எடுக்கப்பட்டனவே. மகாகவி பாரதியின் முழு உருவத்தையும் புகைப்படத்தில் பதிவு செய்து பெருமை பெற்ற காரைக்குடி ‘ஹிந்து மதாபிமான சங்கம்’, பாரதியால் வாழ்த்துக் கவிதையும் பெற்று பெரும்பேறு அடைந்தது. தன்னை ஆதரிக்க முன்வந்த திரு.வை.சு.ச.வின் வள்ளல் தன்மையால் மகிழ்ந்த மகாகவி பாரதி அவர்மீது பாடிய பாடல்கள் இவை. இக்கவிதை எப்படிக் கிடைத்தது, ஏன் பலரால் அறியப்படாமல் இருந்தது என்பன போன்ற விவரங்களை பேராசிரியரும் பாரதி அன்பருமான பேராசிரியர் திரு. கிருங்கை சேதுபதி ‘தினமணி’ நாளிதழ்க் கட்டுரையில் தெளிவுபடுத்தி இருக்கிறார். அக்கட்டுரை கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது...

விவேகானந்த பஞ்சகம்

வணக்கத்திற்குரிய சுவாமி விபுலானந்தர்  (1842- 1947) இலங்கையைச் சார்ந்த ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் துறவி; ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் இதழின் முதல் சந்நியாச ஆசிரியர். தமிழ் மொழிக்கு வளம் சேர்த்த முன்னோடி  ஆராய்ச்சியாளர். சுவாமி விவேகானந்தர் மீதான அன்னாரது அரிய கவிதை இது…

மகாவித்துவான் சரித்திரம்- 2(14)

மகாவித்துவான் அவ்வப்போது எழுதிய தனிச் செய்யுட்கள், அன்பரைப் பாராட்டிய செய்யுள்கள், கடிதப் பாடல்கள், சிறப்புப் பாயிரப் பாடல்களில் கிடைத்தவற்றை அனுபந்தமாக பிற்சேர்க்கையில் இணைத்து வழங்கி இருக்கிறார் உ.வே.சா....

ஆனந்த மையா ஹரீ

மகாகவி பாரதி தான் எழுதிய  ‘நவதந்திரக் கதைகள்’ என்ற நகைச்சுவைக் கதைத் தொடரில், தட்டிக் கொட்டான் செட்டி கதையில், ஒரு கவிராயர் இயற்றுவதாக இந்தப் பாடலை எழுதி இருக்கிறார். தட்டிக் கொட்டான் செட்டியும் ஆரூட ஸ்வாமிகளாக சந்நியாசி வேடம் புனைந்திருக்கும் மானி அய்யனும் உரையாடிக் கொண்டிருக்கையில் அங்கு வருகிறார் கரும்பனூர்க் காத்தவராயக் கவிராயர். அவர் சந்நியாசி வேடம் தரித்திருக்கும் மானி அய்யன் மீது இயற்றிய ஆசுகவியாக இதனைப் புகுத்தி இருக்கிறார் மகாகவி…

தாயகச் செல்வன் (கவிதை)

திரு. கவியரசு கண்ணதாசன் (1927- 1981), மகாகவி பாரதிக்குப் பிறகு வந்த, உத்வேகமூட்டும் தமிழ்க் கவிஞர்; திரைப்பாடல்களுக்கு இலக்கிய மரியாதையை ஏற்படுத்தியவர். சுவாமி விவேகானந்தர் மீதான கவியரசரின் இனிய கவிதை இது…

ஸ்ரீ ரவீந்திரர் திக்விஜயம்

கீர்த்தியடைந்தால், மஹான் ரவீந்திரரைப் போலே அடைய வேண்டும். ஜெர்மனி தேசம் இன்றைக்கும் ஐரோப்பாக் கண்டத்தின் வித்யா ராஜதானியாக விளங்குகிறது. ஜெர்மனியில் நமது பாரத கவீந்திரராகிய ரவீந்திரருக்கு நடத்தப்பட்ட உபசாரங்களெல்லாம் அவருக்குச் சேரமாட்டா. பாரத மாதாவின் பாத கமலங்களுக்கே சேரும்.

அந்நியா்களா அந்தணா்கள்?

திருக்கோவலூா் பண்பாட்டுக் கழகத்தின் தலைவரான திரு. டி.எஸ்.தியாகராஜன் ‘தினமணி’ நாளிதழில் எழுதியுள்ள, நமது மனசாட்சியை உலுக்கும் கட்டுரை இது…

பாஞ்சாலி சபதம் – 2.3.13

பீமனும் பார்த்தனும் சபதம் செய்தவுடன், காப்பிய நாயகி பாஞ்சாலி சபதம் செய்கிறாள். அவைக்களத்தே தனது பெண்மையை அவமதிக்கத் துடித்த கயவர்களைத் தண்டிக்க வெஞ்சினம் கூறுகிறாள், மாகாளி வடிவில் நின்ற பாஞ்சாலி. “பாவிதுச் சாதனன் செந்நீர், - அந்தப் பாழ்த் துரியோதனன் ஆக்கை இரத்தம், மேவி இரண்டுங் கலந்து - குழல் மீதினிற் பூசி நறுநெய் குளித்தே சீவிக் குழல்முடிப் பேன்யான் - இது செய்யுமுன்னே முடியேன்” என்று ஆனையிடுகிறாள். இதுகேட்டு ‘ஓம் ஓம்’ என்று உறுமியது வானம். பூமியில் நடுக்கம் நிகழ்ந்தது. புயல் வீசியது. தருமன் பக்கமே தர்மம் என்பதை ஐம்பூதங்கள் சாட்சியாக உரைத்தன. “நாமும் கதையை முடித்தோம் - நானிலம் முற்றும் நல்லின்பத்தில் வாழ்க!” என்று நிறைவு செய்கிறார் மகாகவி பாரதி...