உத்தர்பாரா பேருரை உரைப்பது என்ன?

1909லேயே இந்தியா சுதந்திரம் பெறும் என்றும் உறுதியாக ஸ்ரீஅரவிந்தர் கூறியுள்ளார். அது, பிளவுபட்ட, அரசியல் சுதந்திரமாக இல்லாமல் பரிபூரண சுதந்திரமாக அமைய வேண்டும்; அந்த சுதந்திரம் இந்தியாவுக்காக அல்லாமல் மனிதகுல மேன்மைக்காக, உலகம் முழுமையாக்காக இருக்க வேண்டும்; அதற்காகத் தான் பாடுபட வேண்டும் என்பது இறைவன் தனக்கிட்ட ஆணை என்று ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்....

ஆகாய விமானமும் சென்னையும்

காலத்தை மீறிச் சிந்தித்து சமுதாயத்துக்கு வழிக்காட்டுபவரே முன்னோடி. அந்த வகையில் தமிழின் முன்னோடி பத்திரிகையாளரான மகாகவி பாரதி விமான உற்பத்தி குறித்து 110 ஆண்டுகளுக்கு முன்னம் எழுதிய கட்டுரை இது...     வார இதழான ‘இந்தியா’விலும், மாலைப் பத்திரிகையான ‘விஜயா’விலும் வெளிவந்துள்ள கட்டுரை இது. ஒரே கட்டுரையை இருவேறு இதழ்களில் வெளியிடுவது, தனது எண்ணத்தை மக்களுக்குப் பரவலாக்கும் அவரது வேகத்தை வெளிப்படுத்துகிறது.     விமானம் குறித்த தொழில்நுட்பக் குறிப்புகளையும் இக்கட்டுரையில் குறிப்பிடுகிறார் பாரதி. இதில் தெரியவேண்டிய மிக முக்கியமான தகவல், சென்னையில், ஸிம்ஸன் கம்பெனியில் விமானம் தயாரிக்கும் பணிகள் நடந்திருப்பது தான்....

சத்திய சோதனை- 3(11-15)

 “ஆனால், அந்தக் கழுத்துச் சரத்தை, உனக்குக் கொடுத்தது என் சேவைக்காகவோ, உன் சேவைக்காகவா?” என்று நான் கேட்டேன்....      “உங்கள் சேவைக்காகவே என்பதை ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால், நீங்கள் செய்த சேவை, நான் செய்த சேவையே அல்லவா? உங்களுக்காக இரவு பகல் நான் பாடுபட்டு உழைத்திருக்கிறேன். அதெல்லாம் சேவையல்லவா? போகிறவர்கள் வருகிறவர்களை யெல்லாம் வீட்டுக்கு அழைத்து வந்து, அவர்களுக்கெல்லாம் உழைத்து, நான் கண்ணீர் வடிக்கச் செய்தீர்கள். அவர்களுக்கெல்லாம் அடிமையாக உழைத்தேனே!” என்றாள், என் மனைவி....

சிவகளிப் பேரலை- 84

     எல்லாம் வல்ல சிவபிரானே அனைத்து ஜீவன்களுக்கும் பதியாய், பசுபதி நாதராய் வீற்றிருக்கிறார். பசுக்களாகிய நாம் அனைவரும் அவரையை சார்ந்திருக்கிறோம். இறைவனே நாயகன். நாம் எல்லோரும் அவனது நாயகியே. இந்த நாயக - நாயகி உருவகத்திலான பக்தியை இந்த ஸ்லோகத்தில் தெளிவாகப் படம்பிடிக்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்....

பாரதி- அறுபத்தாறு (19-22)

ஞாயிற்றைச் சங்கிலியால் அளக்க லாமோ?       ஞானகுரு புகழினைநாம் வகுக்க லாமோ?- என்ற அற்புதமான வரிகள் கொண்ட மகாகவி பாரதியின் குருநாதர் குறித்த பாடல் இது....

தரித்திர தேவோ பவ; மூர்க்க தேவோ பவ!

'மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, ஆச்சார்ய தேவோ பவ, அதிதி தேவோ பவ!' இது ஹிந்து சமயப் பண்பாடு. ஆனால் காலத்தின் தேவையால், சமுதாயத்தின் மற்றும் ஹிந்து சமயத்தின் வளர்ச்சிக்காக மேற்கூறிய நான்கினை சுவாமிஜி மேலும் விரிவுபடுத்தினார். அன்னை, தந்தை, ஆச்சாரியர், விருந்தினர்களை தெய்வமாக வழிபட வேண்டும் என்பதோடு மேலும் இரண்டையும் சேர்த்தார் விவேகானந்தர். 'தரித்ர தேவோ பவ, மூர்க்க தேவோ பவ' என்று அவர் கூறி, நமது கவனத்தை மேலும் ஆழப் படுத்தினார்.

எனது முற்றத்தில்- 15

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள 'வடகிழக்கு பல்கலைக்கழக' ஆராய்ச்சியாளர்கள் பசுவின் சாணத்தை  1,700 டிகிரி செல்ஷியஸ் சூட்டில் எரித்து அதை வடிகட்டியாக்கி கடல்நீரை வடிகட்டினால் பாக்டீரியா இல்லாத நன்னீர் கிடைக்கிறது என்று கண்டுபிடித்திருப்பதாகத் தகவல். பாரத விஞ்ஞானிகளும் இதில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதாவது உலகம் நாளை சந்திக்க இருக்கிற கடுமையான குடிநீர்ப் பிரச்னைக்கு கோமாதா புண்ணியத்தால் தீர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. ...