பாரதியாரின் பத்திரிகைப் பணி என்றதும் ‘இந்தியா’ வாரஇதழும் ‘சுதேசமித்திர’னும் பலருக்கு நினைவுக்கு வரும். ஆனால் அவர் ஆசிரியராக இருந்தது ‘விஜயா’ என்ற நாளேட்டிற்குத் தான். சுமார் எட்டு மாதங்கள் பாரதியார் அதன் ஆசிரியராக இருந்துள்ளார். அரவிந்தர் மீது பெரும் மதிப்பு கொண்ட பாரதியார் ‘விஜயா’ பத்திரிகை சார்பாக அவரை நேர்காணல் செய்ய ஒருவரை கொல்கத்தாவுக்கு அனுப்பினார். விஜயா பத்திரிகையில் அது வெளிவந்தது. அரவிந்தரின் கூரிய அறிவு, தீவிர தேசபக்தி, ஆழ்ந்த இறை நம்பிக்கை ஆகியவை அதில் தெளிவாக வெளிப்பட்டுள்ளன. பேட்டி காண்பவரின் அவநம்பிக்கை, அது பற்றிய பாரதியாரின் கேலி எல்லாம் அதில் வெளிப்படுகின்றன. அந்த நேர்காணல் இங்கு முழுமையாக:
Day: August 8, 2022
சிவகளிப் பேரலை- 85
அனைத்திற்கும் உடையவராகிய, உடையான் சிவபெருமானே, எளிமையான கோலத்தில் இருக்கிறார். ஆனால், அவனருளால், ஏதோ ஒருசில உடைமைகளைப் பெற்றுவிட்ட மனிதர்கள் நாம் என்னமாய் குதிக்கிறோம்! நம்மிடம் இருக்கும் செல்வம், உண்மையில் நம்முடையது அல்ல, இந்தச் சமுதாயத்தின் பயனுக்காக நம்மிடம் இறைவன் அளித்தது என்ற எண்ணம் நம்மிடம் இருக்கிறதா?
மகாவித்துவான் சரித்திரம்- 1(8)
-உ.வே.சாமிநாதையர் 8. கல்வியாற்றாலும் செல்வர் போற்றலும் அப்பால் திரிசிரபுரத்தில் இருந்து வழக்கம்போலவே இக்கவிஞர்பிரான் தாம் செய்ய வேண்டியவற்றை ஒழுங்காகச் செய்தும் பிறரைக் கொண்டு செய்வித்தும் வருவாராயினர். சென்னையில் இருந்தபோது பழகிய அறிஞர்களுள் ஒவ்வொருவரிடத்தும் இன்னஇன்னவிதமான திறமைகள் உள்ளனவென்று கவனித்து அவற்றைத் தாமும் பயில வேண்டுமென்று பயின்றுவந்தார். அதனால், செய்யுட்களுக்குப் பொருள் கூறுதல், இலக்கண விஷயங்களை எடுத்தாளல், பதச்சரம் சொல்லுதல், நூல்களை ஆராய்தல் முதலிய பலவகையான பயிற்சிகள் இவர்பால் முன்னையிலும் சிறந்து விளங்கின. பலவகை மாணாக்கர்கள் வந்து வந்து … Continue reading மகாவித்துவான் சரித்திரம்- 1(8)