மகாவித்துவான் சரித்திரம்- 1(13)

சூதசங்கிதையென்பது ஸ்கந்த புராணத்திலுள்ள ஆறு சங்கிதைகளில் ஒன்று. சிவமான்மிய காண்டம், ஞானயோக காண்டம், முக்தி காண்டம், எக்கியவைபவ காண்டமென்னும் நான்கு பிரிவுகளை உடையது; சிவபெருமானுடைய பலவகைப் பெருமைகளையும், பல தலவரலாறுகளையும், தீர்த்த வரலாறுகளையும், பல உபநிஷத்துக்களின் கருத்தையும் விளக்கிக் கூறுவது. சிவபிரான் புகழைப் பாடிப் பாடிச் சுவைகண்ட பிள்ளையவர்களுடைய அன்புப் பெருக்கு, சூதசங்கிதையில் நன்கு வெளிப்படும். தலவரலாறுகளைக் கூறுவதிலும், அவற்றைப் பலவகையாகச் செய்யுட்களிற் பொருத்தி அணி செய்வதிலும் இவருக்கு விருப்பம் அதிகம். ஆதலின் இந்நூலில் தலவரலாறுகள் கூறப்படும் இடங்களில் அத்தலப் பெயர்களைத் திரிபிலமைத்தல், அத்தலவிசேடங்களைச் சுருக்கி ஒரு செய்யுளிற் கூறல், அத் தலப்பெயர்க்கு ஏற்ற சந்தத்தை எடுத்தாளல் முதலியன காணப்படும்.....

ரூஸ்வெல்ட் அதிபரும் ஜப்பானும்

அமெரிக்க நாட்டில் என்ன நடக்கிறது? அங்குள்ள அதிபர் ரூஸ்வெல்ட் (1906) அந்நாட்டு மக்களுக்கு செய்யும் கடமை என்ன? (அவர் தேச ஜனங்களின் மனதிற்கு வருத்த முண்டாகுமென்பதற்காக பயந்து உண்மைகளை மறைத்துக் கூறும் வழக்கமுடையவரல்ல). அந்நாட்டில் சில மாகாணங்களில் ஜப்பான் தேசத்தாருக்கு எதிரான மனநிலை இருப்பது கூடாது என்னும் அதிபரின் மனநிலை,... என உலக அரசியலை நம்மப்வர்க்கு வழங்கத் துடிக்கும் மகாகவி பாரதியின் இதழியல் ஆர்வம் இக்கட்டுரையில் வெளிப்படுகிறது...