ஸ்வாமி அபேதாநந்தர்

சுவாமி அபேதாநந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் நேரடி சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியும் ஆவார். அவரது சென்னை விஜயத்தால் மகிழ்ந்து இதழாளர் பாரதி தீட்டிய செய்தி இது... சுவாமி அபேதாநந்தா குறித்து ஒரு கவிதையும் எழுதி இருக்கிறார் மகாகவி பாரதி.

மகாவித்துவான் சரித்திரம்- 1(14)

இவருடைய சிறந்த கல்வியாற்றலையறிந்த பல வித்துவான்களும் பிரபுக்களும் இவருக்கு ஏதேனும் ஒரு பட்டம் அளிக்க வேண்டுமென்று தம்முள்ளே நிச்சயித்தார்கள். ஒவ்வொருவரும் தத்தமக்கு அந்த அபிப்பிராயம் நெடுநாளாக இருந்ததாகவும் யாரேனும் ஒருவர் தொடங்கினால் தாமும் அக்கருத்தை ஆதரிக்க வேண்டுமென்று எண்ணியதாகவும் கூறித் தம்முடைய உடன்பாட்டைத் தெரிவித்தனர். பின்பு நல்ல நாளொன்றில் ஒரு மகாசபை கூட்டி இவருடைய கல்வித் திறமையைப் பற்றிப் பேசி இவருக்கு வித்துவானென்ற பட்டத்தை அளித்து அதற்கு அறிகுறியாகச் சால்வை முதலிய மரியாதைகளையும் செய்தார்கள். அதுமுதல் இவரை வித்துவான் பிள்ளையவர்களென்றே குறிப்பித்து வரலானார்கள். அதன் பின்பு பதிப்பிக்கப்பெற்ற குசேலோபாக்கியானத்தில் இவர் பெயருக்கு முன்பு 'வித்துவான்' என்பது காணப்படும்.....