மகாவித்துவான் சரித்திரம்- 1(12)

ஒருநாள் சுந்தரம்பிள்ளை பிள்ளையவர்களிடம் வந்து, “இது சிவதருமோத்திரம்” என்று சொல்லிப் புத்தகத்தைக் கொடுத்தனர். இவர், “இப்புத்தகம் எங்கே கிடைத்ததப்பா?” என்று மிக்க வேகமாக அதனைப் பிரித்துப் பார்த்துவிட்டு அவரை நோக்கி, “உன்னுடைய வீட்டில் என்ன விசேஷம்? வீசையை ஏன் எடுத்துவிட்டாய்? உனக்கு நேர்ந்த துக்கம் எனக்குத் தெரியாது போயிற்றே! ஏன் எனக்குச் சொல்லியனுப்பவில்லை?” என்று வினவினர். சுந்தரம்பிள்ளை, “அந்த விஷயத்தைப் பின்பு சொல்லுவேன். இந்தப் புஸ்தக முழுவதையும் ஒரு வாரத்திற்குள் பிரதிசெய்துகொண்டு என்னிடம் கொடுத்து விடக்கூடுமானால் மிகவும் நலமாயிருக்கும்; பிரதி செய்வது ஒருவருக்கும் தெரிய வேண்டாம்” என்றார். ...

புல்லர் செய்யும் மோசம்

புல்லர் என்ற ஆங்கிலேய அதிகாரி தனது நியாயமற்ற நடவடிக்கைகளால் பெங்கால் மாகாண மக்களிடம் கெட்ட பெயர் பெற்றிருந்த நிலையில், அவர் விரைவில் ராஜினாமா செய்வார் என்று ‘இந்தியா’ பத்திரிகையில் மகாகவி பாரதி செய்தி வெளியிட்டார். அது நடைபெறாமல் போன நிலையில், மறுவாரம் வெளியான செய்தி இது. இச்செய்தியில் உள்ள கேலியைக் கவனியுங்கள்!