பிரிட்டிஷ் அநீதிகளை ப்ரயன் தகர்த்தெறிதல்

அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சித் தலைவரான வில்லியம் ஜென்னிங் ப்ரெயன் (1860- 1925), சிறந்த நாடாளுமன்றவாதியும் வழக்கறிஞரும் ஆவார். அமெரிக்க அதிபர் தேர்தலில் மூன்று முறை (1896, 1900, 1908) போட்டியிட்டு தோல்வியுற்றவர். எனினும் அந்நாட்டின் அரசியலில் ஒரு நிலையான அரசியல் சக்தியாகத் திகழ்ந்தவர். அதிபர் வுட்ரோ வில்சனின் அரசில் அமைச்சரவை செயலராக (1913) பணிபுரிந்தவர். இவர் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியைப் பற்றி எழுதிய கட்டுரை குறித்து இதழாளர் பாரதி இங்கு சிலாகிக்கிறார்...

விடுதலைப் போரில் அரவிந்தர்- 6

அரவிந்தர் வன்முறையற்ற அகிம்சை முறையை மட்டுமே விரும்பினார் என்று கூற முடியாது. "சமூகப் போராட்டம் சில சந்தர்ப்பங்களில் போராக மாறிவிடும். போர்க்காலத்தின் தார்மீகமும், அமைதியான நேரத்திற்கான தார்மீகமும் வெவ்வேறானவை. சில சந்தர்ப்பங்களில் ரத்தம் சிந்தவோ வன்முறையில் ஈடுபடவோ தயங்குவது பலவீனமே. குருக்ஷேத்திரப் போரில் அர்ஜுனன் பெரும் அழிவு ஏற்படுமெனத் தயங்கியபோது ஸ்ரீ கிருஷ்ணர் அவரை இடித்துரைத்துக் கூறியது இதைதான்" என்று அரவிந்தர் எழுதியிருந்தார்....

பாரதியும் கணபதியும்

பிள்ளையார் என்ற பெயரே கள்ளமிள்ளாத குழந்தைத்தனமான வெள்ளை மனதைத்தான் குறிக்கிறது. அளவில் சிறிதாக இருந்தாலும் பெருமையிலும் ஞானத்திலும் அவரை மிஞ்ச ஆள் கிடையாது. எவ்வளவு பெரியவரானாலும் அவரிடம் அந்தக் குழந்தைத்தனம் அப்படியே இருக்கிறது. அதனால்தான் குழந்தைகள் பெரியவர் எல்லாருக்குமே பிள்ளையாரைப் பிடித்திருக்கிறது.